செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் கிராமத்திற்கு அச்சிறுபாக்கம் வழியாக எலப்பாக்கத்திற்கு T-13 மற்றும் 77C பேருந்துகள் வந்துகொண்டிருந்தன.
பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் காலை மற்றும் மாலை வேலைகளில் T-13 டவுன் பஸ்ஸினையே நம்பி உள்ளனர். ஆனால் 2 நாட்களாகவே இப்பேருந்து முறையாக வரவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும் 77C பேருந்து 2 வாரத்திற்கு மேலாக இயக்கப்படவே இல்லை என கூறப்படுகிறது. இதனால் எலப்பாக்கம், மதூர், கோட்டகயப்பாக்கம், விளாங்காடு, திம்மாபுரம், திருமுக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சார்பாக ஒருவர் மதுராந்தகம் பணிமனை மேலாளருக்கு போன் செய்தபோது அவர் கூறிய பதில் நகைப்பை ஏற்படுத்தியது.
பேருந்து ஓட்டுநர் பெண் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அதனால் பேருந்து இயக்கப்படவில்லை என கூறிய பதிலானது போன் செய்த நபரை திக்குமுக்காட செய்துவிட்டது. ஓட்டுநர் அனுமதியிலோ அல்லது விடுமுறையிலோ செல்லும் நேரத்தில் வேறு ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்கவேண்டும். இந்த பேருந்தை நம்பி குறிப்பிட்ட வழித்தடத்தில் காத்திருக்கும் பொதுமக்களின் நிலையை உணராமல் இவர் அளித்த பதில் முறையானது அல்ல என சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Related News:
🔴மீன் விற்கும் மூதாட்டியை பஸ்ஸில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் | இனி நான் நடந்து தான் போகணுமா.?
No comments:
Post a Comment