வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உல்லாசம் அனுபவிக்க பூட்டிய வீடுகளுக்குள் புகுந்தவர் சிக்கினார்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 30, 2021

உல்லாசம் அனுபவிக்க பூட்டிய வீடுகளுக்குள் புகுந்தவர் சிக்கினார்.!

சென்னையில் அண்ணா நகர், வில்லிவாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, ஐசிஎப் அயனாவரம் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ஜெபராஜ் போலீசில் சிக்கி இருக்கிறார்.


பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக தான் கொள்ளையடித்து வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். சென்னை அயனாவரம் அடுத்த ஐசிஎப் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தூக்கி நிறுத்தி விட்டு ஓட தொடங்கியிருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்து உள்ளனர்.

அவரிடம் சோதனை செய்ததில் ஸ்குரு டிரைவர், கத்தி , இரும், ராடு, சுத்தியல் போன்றவை இருந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். போலீசார் மேற்கொண்டு அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் 52 வயதான அந்த நபர் ஜெபராஜ் என்பதும், ஆட்சி என்பது பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கதவு உள்பக்கமாக பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது .

அயனாவரம் , அண்ணா நகர் அமைந்தகரை, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடங்கி கொள்ளையடித்து வந்திருக்கிறார் 2019 ஆம் ஆண்டில் இருந்து கோயம்பேடு , அண்ணா நகர் பகுதிகளில் வீட்டை உடைத்து கொள்ளையடித்து வழக்குகள் தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.

பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக தான் அதற்கு பணம் தேவைப்படுகின்றது என்றுதான் கொள்ளையடித்து வருவதாகவும் சொல்லியிருக்கிறார் ஜெபராஜ். அவர் கொள்ளையடித்த நகைகளை இரண்டு நபரிடம் விற்று வந்திருக்கிறார். அவர்களிடம் இருந்து 90 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக தான் கொள்ளை அடிக்க ஆரம்பித்ததாகவும், அதுவே தொழிலாகி விட்டது என்று வெகு சாசாரணமாக சொல்லி இருக்கிறார் ஜெபராஜ்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment