வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Athur Toll gate
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Athur Toll gate. Show all posts
Showing posts with label Athur Toll gate. Show all posts

Friday, April 09, 2021

பரனூர், ஆத்தூர் டோல் பிளாசாக்களுக்கு கடும் எச்சரிக்கை | சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதா? மெட்ராஸ் ஐகோர்ட் கேள்வி | Toll Plaza Cost Issue | Vil Ambu News

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக் காலம் 2019-ல் முடிவடைந்துவிட்ட நிலையிலும், அந்த பாதையில் செல்லும் வாகனங்களுக்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது


வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற (Madras High Court) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அடங்கிய சட்ட அமர்வு சுங்கக் கட்டணம் தொடர்பாக அதிருப்தியை தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று தெரிவித்தனர்.

அதோடு, தமிழக சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறைக்கு (National Highways Authority of India) உத்தரவிட்டனர். சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் (FASTag) முறை இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். 

சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும். சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது


Wednesday, February 19, 2020

இனி டோல்கேட்டுகளில் நோ பிஸினஸ் | Small Buisness are not allowed here after at any toll plazza | Run World Media

சுங்கச் சாவடிகள் என்றாலே நினைவுக்கு வருவது நேர விரயம் மற்றும் பண விரயம் தான். ஆனால் தற்போது Fastag செயல்முறைக்கு வந்தபின்னர் நேர விரயம் என்பது ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.



ஆனால், இதற்கும் அப்பாற்பட்டு நமக்கு நினைவில் வருவது என்னவெனில் டோல்கேட் அருகிலே உள்ள சிறு கடைகளும், கையேந்தி வியாபாரிகளும் தான்.


ஓடும் வாகனங்களில் ஏறி, இறங்கி இவர்கள் தங்களுடைய வயிற்றுப்பிழைப்பிற்காகவே சில அபாயகரமான வேலைகளைச் செய்கின்றனர்.

சில சமயங்களில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவதன் காரணமாக அருகே வரும் வாகனங்களை கவனிக்காமல் இவர்களுக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமோ அல்லது சில சமயங்களில் உயிர்போகும் நிலையோ கூட ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் இதே நிலையே.


இதனால் சுங்கச்சாவடி அருகே உள்ள வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்வதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக சுங்கச்சாவடி அருகே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்படி இந்த தடையை மீறுவோர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையினையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அவர்கள் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடியருகே உள்ள சிறு வியாபாரிகளுக்கு துண்டுபிரச்சுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




என்னதான் இதுபோன்ற சிறுவியாபாரிகளின் பிழைப்பு கெட்டாலும், இந்த வியாபாரிகளின் உயிர், இவர்களின் குடும்பத்தின் நிலை மற்றும் வாகன ஓட்டிகளின் குடும்பம் நிலையை யோசிக்கும் பட்சத்தில் இதுபோன்ற சில எச்சரிக்கைகள் வரவேற்கத்தக்கதே என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.