எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
அமெரிக்காவில் சூப்பர் மார்கெட் கடைகளை நடத்திவரும் பிரபலமான
வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் இந்தியாவில் சில்லறை
விற்பனையில் ஈடுபடும் பொருட்டு மளிகை கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன
தற்போது ஆன்லைன் விற்பனையில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும்
ஃபிளிப்கார்ட், இந்தியாவில் மளிகை கடைகளை திறக்க முன்வந்துள்ளதால், இதன்
போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்த வெற்றியை அடையவேண்டுமானால்,
இந்தியர்களின் முதலீடுகள் மட்டும் போதாது என்பதால், மத்திய அரசு அனைத்து
துறைகளிலும் அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. காப்பீடு முதல்
உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளை வரவேற்றுள்ளது.
இதில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்நிய முதலீடுகள் இருந்தால்
அது என்றைக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்று
சொல்லி பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த
எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசு பெரும்பாலான துறைகளில் 100 சதவிகித
அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடுகளை
குவித்துள்ளன. மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு
நிறுவனத்திலும் பெருமளவில் அந்நிய முதலீடுகள் அதிக அளவில்
குவிக்கப்பட்டுள்ளன.
அதோடு பாதுகாப்புத் துறையிலும் 100 சதவிகித அந்நிய
முதலீகளுக்கு மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டே அனுமதித்துவிட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டில் சில்லறை விற்பனையில் 100 சதவிகித அந்நிய
முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்டது. இதையடுத்து வெளிநாட்டு
நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் அதிக அளவில் குவித்து
வருகின்றன.
முதல் கட்டமாக அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனத்திற்கு
சொந்தமான ஃபிள்ப்கார்ட் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதற்கு
முன்வந்துள்ளது. ஃபிள்ப்கார்ட் தற்போது ஆன்லைன் மூலமாக அனைத்து விதமான
பொருட்களையும் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
சில்லறை
விற்பனைக் கடைகளை திறப்பதால் இன்னும் கூடுதலாக விற்பனை செய்ய முடியும்
என்று முடிவெடுத்துள்ளது.
வால்மார்ட் நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது சூப்பர் மார்கெட் கடைகளை
திறந்துள்ளது. இந்தியாவிலும் மும்பை, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய
நகரங்களில் தனது கிளைகளை திறந்துள்ளது. இதில் அனைத்து விதமான பொருட்களையும்
கொள்முதல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு கதவை
திறந்துவிட்டுள்ளதால், வால்மார்ட் நிறுவனமும் தனது அங்கமான ஃபிளிப்கார்ட்
மூலமாக இந்தியாவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சில்லறை
விற்பனையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம்
சில்லறை விற்பனையில் ஈடுபட்டுவருகிறது. மேலும் அமேசான் மற்றும்
ஃபிளிப்கார்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆன்லைன் விற்பனையில்
ஈடுபடப்போவதால், அதற்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் சில்லறை
விற்பனையில் ஈடுபடப்போவதாக தெரிகிறது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்தியாவில்
சுமார் 3ஆயிரத்து 485 கோடி ரூபாய் முதலீட்டில் சில்லறை விற்பனை கடைகளை
திறக்க முடிவெடுத்துள்ளதை அடுத்தே ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இந்தியாவில்
மளிகைக் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் பொறுத்தவரை அக்டோபர் 11-ம்
தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது, இந்த விற்பனையில் பல்வேறு
ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹானர் நிறுவனத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும்
விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த அருமையான வாய்ப்பை பல்வேறு
மக்கள்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் ஹானர்
நிறுவனம் 1மில்லியன் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய
திட்டமிட்டுள்ளது. மேலம் குறிப்பிட்ட ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு
குறைந்த விலை அறிவிக்கப்படும் என்று
ஹானர் 9என்
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஹானர் 9என் ஸ்மார்ட்போன் மாடலுக்க
ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படும்
அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்ட
ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படும்.
ஹானர் 10
ஹானர் 10 ஸ்மார்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.32-999-ஆக
இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை
செய்யப்படும். பின்பு எக்சேஞ்ச் வசதி மற்றும் இஎம்ஐ வசதி கூட இந்த
திட்டதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 9ஐ
ஹானர் 9 லைட்(32ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது,
தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படும். பின்பு
எக்சேஞ்ச் வசதி மூலம் ரூ.3000 வரை விலைகுறைப்பை பெற முடியும்.
மேலும் ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,
தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் 7ஏ
ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட்
பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்கு விற்பனை
செய்யப்படும். குறிப்பாக 5.7-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
இவற்றுள் அடக்கம்.
ஹானர் 7எஸ்
ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது,
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு
ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக 5.4-இன்ச் டிஸ்பிளே,
ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம். மேலும் பல்வேறு
ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மூலம்
விலைகுறைக்கப்படும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது
தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல்
போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை
வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு
கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக்
கொண்டு வந்து சேர்த்துள...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் ,
புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி
போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு
கேக்கமாட்டாங்க . உங்க ...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி
மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி
திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது
என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும்
என்று நம்பிக்கை ஏற்படு...