வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: RDO office Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label RDO office Latest News. Show all posts
Showing posts with label RDO office Latest News. Show all posts

Sunday, March 21, 2021

மதுராந்தகத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி | 100% Voting Awareness by Revenue Department Staffs at Madurantakam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் “வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பல வருவாய்துறை ஊழியர்கள் 20.03.2020 அன்று இருசக்கர வாகனம் மூலமாக பேரணி நடத்தினர்".

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.லட்சுமிபிரியா இந்த பேரணியினை துவங்கி வைத்தார். சுமார் 120 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த பேரணியானது மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம், மாம்பாக்கம் வழியாக முதுகரை வரையில் நடைபெற்றது. 

பின்னர், அங்குள்ள மைதானத்தில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியினை ஏற்றக் கொண்டது மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் இந்த விழிப்புணர்வு சென்றுசேர வேண்டும் என உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல்துறையினரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, April 10, 2020

கருங்குழியில் கிருமிநாசினி சுரங்க பாதையினை அமைத்த பேரூராட்சி நிர்வாகம் | Corona Disinfection Tunnel in Karunguzhi Town Panchayat

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா வைரஸை அழிக்கும் கிருமி நாசினி சுரங்க பாதையினை பேரூராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.



அலுவலகத்தில் வெளியே உள்ள இந்த பாதையில் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் இந்த அரங்கில் நுழைந்த பிறகே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவர். 



இப்படி கிருமி நாசினி தெளிக்கும் பட்சத்தில் அலுவலகத்தின் உள்ளே வருபவர்களின் மீது கொரோனா வைரஸ் இருப்பின் அது அழிந்துவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 



இந்த பிரத்யேக கிருமிநாசினி பாதையானது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் கருங்குழி பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.கேசவன் தலைமையில் நிறுவப்பட்டது.


 

Thursday, April 09, 2020

மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் | Corona Relief given to MKM Circle Peoples from TN Govt


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு காரணமாக வெளியே வரமுடியாமலும் போதிய உணவு வசதி இல்லாமலும் இருக்கும் முதியோர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தமிழக அரசின் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிவாரண பொருட்கள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா மேற்பார்வையுடன் ஆதவரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வீடற்ற ஏழைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் ஆகியோருக்கு 09.04.2020-ல் மதிய உணவு வழங்கப்பட்டது. 
இதேபோன்று எலப்பாக்கம், வையாவூர் கிராமங்களில் முதியவர்கள், ஊனமுற்றோர்களுக்கு அரசின் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மதுராந்தகம் வட்டம், சிதன்டி கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு தனியார் பங்களிப்புடன் 15 இருளர் குடும்பங்களுக்கும் 2 முதியவருக்கும் தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை, உப்பு, சோப்புகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
 
மேலும், செய்யூர் வட்டம், சூணாம்பேடு கிராமத்தில் வசிக்கும் 15 நரிக்குரவர் இன மக்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 
இதே போன்று மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில் உள்ள வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வங்கி வணிகத் தொடர்பாளர்கள் மூலமாக வீடுதோறும் வழங்கப்படுவதையும் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர்  லட்சுமிபிரியா உறுதி செய்தார்.

 
 


 

 

Tuesday, April 07, 2020

சலூன் கடைக்கு சீல் வைத்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Saloon Shop Sealed by RDO in Madurantakakam


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர்பகுதியில் உள்ள முடி திருத்தும் கடையில் கொரோனா அச்சிறுத்தலை பொறுத்படுத்தாமல் கடையின் உள்ளே 10 நபர்களும், கடைக்கு வெளியே 5 நபர்களும் அமர்ந்து இருந்தனர். 
எவரும் முகக்கவசம் அணியவில்லை மற்றும் சமூக இடைவெளியும் விடவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா அந்த சலூன் கடைக்கு சீல் வைத்துள்ளார்.


இந்த தருணத்தில் சீல் வைத்த கடையினை மூன்று மாதங்களுக்கு திறக்க இயலாது என்பது அரசின் உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது. 

Monday, April 06, 2020

கொரோனா தடுப்பு பணி செய்பவர்களுக்கு மதிய உணவு செய்வதை ஆய்வு செய்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Madurantakam RDO Inspecting in Karunguzhi Town Panchayat


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு மதிய உணவு தயாரகி வருவதை மதுராந்தகம் கோட்டச்சியர் லட்சுமி பிரியா பார்வையிட்டார்.


இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.



கருங்குழி பேரூராட்சியில் ரூ.100/-க்கு 4.5 கிலோ காய்கறிகள் மதுராந்தகம் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு | Low Price Vegitable bags Karunguzhi


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தோட்டகலை துறை மூலம் விவாசாயிகளிடமிருந்து பெறப்பட்ட காய்கள் மதுராந்தகம் நகராட்சி மற்றும்  கருங்குழி பேரூராட்சி பகுதியில் மலிவு விலையில் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதற்காக காய்களை 100 ரூபாய்க்கு 4.5 கிலோ என தனித்தனி பைகளில் வழங்குவதற்காக காய்கள் பையில் போடும் பணிகளில் விவசாயிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டபோது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா நேரில் பார்வையிட்டார். 
இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.