வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது



தண்டையார்பேட்டையில், 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். 



சென்னை தண்டையார்பேட்டை, லைட் அவுஸ் நகரை சேர்ந்தவர் மார்டின் அலெக்ஸ் ஜோசப் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மார்டின் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்தார்.   (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

மார்டின் குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டுக்கு வரும்போது அவரது 16 வயது மகளிடமும் அவ்வப்போது பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால் அந்த சிறுமி மணலியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.



இந்நிலையில் கடந்த மே மாதம் மணலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி எண்ணூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் மார்டின் அலெக்ஸ் ஜோசப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment