வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-25
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 07, 2018

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!



மனிதனாக இருந்தால் பொதுவாக இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு கை , கால்கள், ஏன் மனிதனுக்கு சிறுநீரகங்கள் கூட இரண்டு இருந்து பார்த்திருக்கிறோம். இது தான் இயற்கை. மிருங்கங்களை பொறுத்த அளவில் கூட பெரும்பாலும் இது தான் இயற்கை மற்றும் இயல்பு.



ஆனால், இரண்டு பிறப்புறுப்பு இருந்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், கேஸான்டிரா பங்க்சன் (Cassandra Bankson) எனும் 22 வயது இளம் பெண் இரண்டு பிறப்புறுப்புகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரே இது குறித்து யூ ட்யூபில் (Youtube) சுயமாக ஒரு பேட்டியும் அளித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

மிகவும் பிரபலாமாகி அந்த வீடியோ இணையதளத்தையே கலக்கி வருகிறது. இனி, இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் கேஸான்டிரா பங்க்சனின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளல்லாம்...


வாத்து போன்ற நடை
கேஸான்டிரா பங்க்சனின் நடை, சிறு வயது முதலே வாத்து போல தான் இருந்திருக்கிறது. முதலில் அனைவரும் இதை கேலி, கிண்டல் செய்திருக்கின்றனர், குடும்பத்தினர் உட்பட.

சிறு வயதிலேயே பூப்பெய்தியது  
பத்து வயதிலியே பருவம் அடைந்துவிட்டார் கேஸான்டிரா பங்க்சன். அது ஓர் கிறிஸ்துமஸ் நாள் என்று அந்த ஒளிநாடாவில் கூறியிருக்கிறார்.


மாதவிடாய் பிரச்சனை 
ஒரு சில மாதங்களில் மூன்று முறை மாதவிடாய் ஏற்படுமாம் கேஸான்டிரா பங்க்சனுக்கு. இதற்கு எதிர் மாறாக சில சமயம் ஆறு மாதங்கள் வரை மாதவிடாயே ஏற்படாமலும் இருந்திருக்கிறதாம்.

நிலை மாற்றம் 
இதனால் மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.


அசௌகரியம்
அடி வயிற்றில் ஏதோ ஓர் அசைவு ஏற்படுவது போன்ற உணர்வு இருக்குமாம் கேஸான்டிரா பங்க்சனுக்கு. மற்றும் அடிக்கடி முதுகு மற்றும் இடுப்பு வலி வந்திருக்கிறது. இதனால் ஏதோ சிறுநீரக கோளாறாக இருக்குமோ என்று அஞ்சி இவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

சிகிச்சை 
இரத்த பரிசோதனை, ஸ்கேனிங், மற்றும் இதர ஆய்வுகள் செய்துப் பார்த்ததில், கேஸான்டிரா பங்க்சன் ஒரு சிறுநீரகம் மற்றும் தான் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.


ஆச்சரியம்  
அதன் பின்பும் சில பிரச்சனைகள் எழுந்ததால், தீவரமாக கேஸான்டிரா பங்க்சனின் உடலை பரிசோதனை செய்து பார்த்த போது தான் இவருக்கு இரண்டு பிறப்புறுப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

அதிர்ச்சி 
முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், பின் சாதாரணமாகிவிட்டார் கேஸான்டிரா பங்க்சன். பெற்றோருக்கு தான் கொஞ்சம் பயம் அதிகரித்ததாம். இது இல்லற வாழ்க்கையை கெடுத்துவிடுமோ என்று அஞ்சியிருகின்றனர் கேஸான்டிரா பங்க்சனின் பெற்றோர்.


கேஸான்டிரா பங்க்சன் கூறுவது 
இல்லற வாழ்க்கை குறித்து கேஸான்டிரா பங்க்சன்,"ஒருவேளை எனக்கு கருத்தரித்த பின்னும் கூட மாதவிடாய் தொடரலாம் என்று கருதுகிறேன்.." என்று கூறியிருக்கிறார்.

யாரிந்த கேஸான்டிரா பங்க்சன்?  
கேஸான்டிரா பங்க்சன் எனும் இவர் யூ ட்யூபில் விமர்சனம் பேசுபவர். இவர் இதற்கு முன்பே பல வீடியோக்கள் விமர்சனம் பேசி பிரபலமானவர். இந்த வீடியோ இவரை உலகப்புகழ் அடைய செய்துவிட்டது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கணவருக்கு விஷம்.. கள்ளக்காதலன் மீது பாசம்..



"அழகர்சாமியை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. அதனாலதான் இப்படி செஞ்சிட்டேன்" என்று போலீசில் தெரிவித்துள்ளார் இளம்பெண்! தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் தம்பதி ஈஸ்வரன் - கலைமணி. கல்யாணம் ஆகி 3 வருஷமாச்சு. ஒன்றரை வயசில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

 
கலைமணிக்கு 19 வயதாகிறது. ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் இருவருக்குள்ளும் நிறைய முறை சண்டை வந்திருக்கிறது. போன மாதம் 8-ம் தேதி ஈஸ்வரன் திடீரென இறந்துவிட்டார். இதனை அறிந்த ஈஸ்வரன் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பிள்ளையை பறிகொடுத்த வேதனையில் கதறி அழுதார்கள்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

குழந்தை ஒப்படைப்பு  
ஆனால் அவர்களுக்கு மேல் அழுதார் கலைமணி. "இப்படி குடிச்சி குடிச்சியே என்னையும், பிள்ளையும் தனியா விட்டுட்டு போய்ட்டாரே" என்று கூப்பாடு போட்டார். கலைமணி சொந்தக்காரர்கள் எல்லாரிடமும் சென்று இதையே சொல்லி சொல்லி அழுதார். பிறகு திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு போய் மாமனாரிடம் ஒப்படைத்தார். அதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை எல்லாத்தையும் எடுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டார்.


அழகர்சாமி 
குழந்தையை ஏன் ஒப்படைத்தார், நகை, பணத்தை எங்கே கொண்டு போனார் என அப்போது மாமனாருக்கு புரியவில்லை. அதோடு மருமகளும் மாயமாகி விட்டார். இதனால் மாமனாருக்கு சந்தேகம் வலுத்து கொண்டே இருந்தது. பிறகு ஒருநாள் அழகர்சாமி என்ற இளைஞருடன் கலைமணி ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பதை நேரடியாக பார்த்துவிட்டார். ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த மாமனார், நேராக ராயப்பன்பட்டி போலீசுக்கு போய் விட்டார்.

உடலில் விஷம்  
இப்படி ஜாலியாக மருமகள் ஊர் சுற்றி வருவதால், தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கா வேண்டும் என்றும் சொன்னார். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டப்பட்டது. பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது. இதையடுத்து கலைமணியிடம் விசாரணையை ஆரம்பிக்கும்போதே எல்லா உண்மையையும் பயத்தில் கொட்டி விட்டார்.


ரொம்ப பிடிக்கும் 
"எனக்கு அழகர்சாமியை ரொம்ப பிடிச்சு போச்சு. அதனால் ரெண்டு பேருக்கும் கள்ள உறவு இருந்தது. எவ்வளவோ ஜாக்கிரதையாக நாங்கள் இருந்தும், என் புருஷன் இதை கண்டுபிடிச்சுட்டார். எப்பவுமே எங்கள் உறவுக்கு தொந்தரவாகவே இருந்தார். அதனால்தான் அவர் சாப்பிடும்போது அந்த சாப்பாட்டில் விஷம் கலந்து தந்துட்டேன்" என்றார். இதையடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலர்கள் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மனைவியுடன் தகராறு.. முத்தான இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்த கணவன்..



கோவையில் குடும்பத் தகராறு காரணமாக இரு மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தலைமறைவாகிவிட்டார். 

 
கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராணி- பத்பநாபன் தம்பதியினர். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஸ்ரீஜா (10) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

குடும்பச் சண்டை  
இந்த நிலையில் கணவன்- மனைவிக்குள் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து தகவல் தெரிவித்து போலீஸார் நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு வந்து பேசி சமரசம் செய்து கொள்ள கூறினர்.


தன்னுடன் இருக்க  
பின்னர் செல்வராணி வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பத்மநாபன் இரு குழந்தைகளுடன் வீட்டிலேயே தங்கிவிட்டார். குழந்தைகளை அனுப்புமாறு செல்வராணி கேட்டதற்கு அவர்கள் தன்னுடன் இருக்கட்டும் என பத்மநாபன் கூறிவிட்டார்.

போலீஸுக்கு தகவல் 
இந்த நிலையில் காலை வீட்டுக்கு வந்து பார்க்கும்போது இரண்டு பெண் குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் செல்வராணி. பின்னர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.


பரபரப்பு போலீஸார் 
விசாரணையில் இரு மகள்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பேசாத காதலி.. கெஞ்சியும் பலன் இல்லை.. செல்பி எடுத்து அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய காதலன்



எவ்வளவோ கெஞ்சி பார்த்தாச்சு... பேசவே இல்லை.. அதனால் தூக்கு மாட்டிய செல்பியை காதலிக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்து கொண்டார் காதலன். 

 
ராமநாதபுரம் மாவட்டம் குருவாடி அருகே அவத்தாண்டை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி ராஜா. 24 வயதான ராஜா, தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் 4 வருஷமாக தனது சொந்தக்கார பெண் ஒருவரை லவ் செய்து வந்தார். அந்த பெண்ணும் ராஜாவை உயிருக்கு உயிராக விரும்பினார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மனவேதனையில் ராஜா 
ஆனால் விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. ஆனால் மகளை கண்டித்தனர். வீட்டுக்கு பயந்த அந்த பெண்ணும், கொஞ்ச நாளாக ராஜாவிடம் பேசவில்லை. இதனால் மனவேதனைப்பட்ட ராஜா எவ்வளவு முயற்சி எடுத்து அந்த பெண்ணிடம் பேச பார்த்தும் முடியவில்லை. இந்த வருத்தத்தினால் மற்றவர்களிடமும் பேசாமலேயே ஒதுங்கினார்.


வாழவே பிடிக்கல 
இந்நிலையில், விளாத்திகுளத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்தவர், கடந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து காணாமல் போய்விட்டார். பின்னர் திடீரென தன் அண்ணனுக்கு போன் செய்த ராஜா, "எனக்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கல, அதனால தற்கொலை செய்துக்க போறேன்" என்று சொல்லிவிட்டு போனையிம் கட் பண்ணிவிட்டார்.

செல்போன்  
உடனே அவரது அண்ணன் இதுசம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் ஒரு பக்கமும், சொந்தக்காரர்கள் ஒரு பக்கமும் ராஜாவை தேடினார்கள். அப்போது விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பிணமாக தூக்கில் தொங்கிய ராஜாவை கண்டெடுத்தனர். அவரது பாக்கெட்டிலிருந்து ஒரு செல்போனை போலீசார் எடுத்தனர்.


அழுகிய உடல் 
 ராஜாவின் உடல் ரொம்பவும் அழுகி இருந்தது. பின்னர், அதனால் அந்த இடத்திலேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராஜாவின் செல்போனில், தற்கொலை செய்யும் முன்பாக ஒரு செல்பி எடுத்திருக்கிறார். அதாவது அவர் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு கடைசியாக எடுத்த செல்பி அது. அதை காதலியின் தோழிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னுடன் காதலி பேசாததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

கதறி அழுதனர்  
ஆனால் இப்படி கழுத்தில் தூக்கு போட்டு கொண்டு அனுப்பிய செல்பியை பார்த்து அந்த தோழி, ராஜா விளையாட்டுக்கு இப்படி செய்கிறார் என்று நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதனால்தான் இதை அவரும் யாரிடமும் சொல்லாமல் இதை விட்டுவிட்டிருக்கிறார். ராஜாவின் அழுகிய உடலை கண்டு, அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது..



மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு கொண்டதன் விளைவாக அவரை கர்ப்பமாக்கியதாக தஞ்சாவூரில் காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

 
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பவணமங்கலத்தில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான செங்கற்சூளை உள்ளது. இந்த செங்கற்சூளையில் பவணமங்கலம் காலனி தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை செய்துவருகிறார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதே பகுதியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கௌதமன் (38) என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் 17 வயது சிறுமியிடம் கௌதமன் நெருங்கி பழகியுள்ளார். 
 
பின்னர் அவரிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த சிறுமியின் தாய் மாதவி (40) திருவையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் மணமல்லி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம்?.. மனைவி புகார்



நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். 

 
இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இவர் மீது மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
 மோசடி புகாரில் சிக்கியுள்ள அவரை யாரேனும் கடத்தி சென்றுவிட்டனரா இல்லை அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை 10 கோடி ரூபாய் கொடுத்தால் 1000 கோடி கடன் பெற்று தருவதாக போலியான வாக்குறுதியை அளித்து ஏமாற்றியதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts