வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலைவாய்ப்பு - துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 29, 2019

வேலைவாய்ப்பு - துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019

துணை ராணுவ படையில் 429 ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-








மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்த பிரிவில் தற்போது ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 429 போ் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி சேர்க்கையின் மூலம் 328 ஆண்களும், 37 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். 64 பணியிடங்கள் எல்.டி.சி.இ. (துறையினருக்கான போட்டி) இடங்களாகும்.
இந்த பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 20-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பிளஸ்-2 மற்றும் இன்டர்மீடியட் படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

உடல்தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆண்கள் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையளவு, கண்பார்வைத்திறன் பரிசோதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படுகிறது.


தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019-ந் தேதியாகும்.

No comments:

Post a Comment