வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-08-04
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, August 14, 2019

பச்சைக் குழந்தைம்மா.. வெறும் 1000 ரூபாய்தான்.. வாங்கிங்கய்யா..

தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாததால் அதை ரூ 1000-த்துக்கு விற்பனை செய்ய முயன்ற தாயை போலீஸார் கைது செய்தனர். 
 
வாராங்கல்லில் ஜாங்கான் மாவட்டத்தில் பெம்பார்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜையா. இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. ராஜையா எந்த வேலைக்கும் செல்லாததால் கைக் குழந்தையை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் சுஜாதா கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுஜாதாவுக்கும் ராஜையாவுக்கும் நேற்று தகராறு நடந்தது.

கூவி ஏலம் 
இதையடுத்து சுஜாதா கணவரிடம் கோபித்து கொண்டு வாராங்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். குழந்தையை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து விடுவதாக கூவி கூவி ஏலமிட்டார்.

விசாரணை  
விசாரணை இதனால் சுஜாதாவின் ஊர்காரர்களும் ஜாங்கான் மாவட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

வாராங்கல்  
அப்போது தனது கணவர் சரியில்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை விற்க முயற்சித்தேன் என்றார். பின்னர் மேலும் விசாரணையில் நான் வாராங்கல் பஸ் நிலையத்திலிருந்து ஊருக்கு திரும்ப சிலரிடம் பணம் கேட்டேன்.


போலீஸ் கைது 

அதற்கு அவர்கள் குழந்தை கொடுத்துவிட்டு போ என்றனர் என சுஜாதா தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு 20 நாட்களுக்கு முன்பு சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவரை மீண்டும் சந்திக்க செல்வதாகவும் சுஜாதா தெரிவத்தார். இதுபோல் மாற்றி மாற்றி பேசுவதால் சுஜாதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

காப்பகத்தில் 
குழந்தைகள் நல குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தாய் மனநிலை சரியில்லாதவர் போல் பேசுவதால் குழந்தையை அதற்கான காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

1½ வருடம் சினிமாவுக்கு முடக்கு; நடிகை சமந்தா கர்ப்பம்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன.




மெர்சல், தெறி, அஞ்சான், இரும்புத்திரை, யூடர்ன், நடிகையர் திலகம், தங்க மகன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்டவை சமந்தா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.

தெலுங்கில் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஓ பேபி’ படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் நடித்து வருகிறார்.


சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட் குறையவில்லை. இந்தநிலையில் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்க முடிவு செய்துள்ளார்.

1½ வருடங்கள் புதிய படங்கள் எதிலும் நடிக்க மாட்டேன் என்று தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவர் கூறிவிட்டாராம். கைவசம் உள்ள 96 படத்தை விரைவாக முடித்து விட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.

சன்னி லியோனோனுக்கும் மோடிக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னனு தெரியுமா?

கூகுள் தேடுதல் பட்டியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர் பிரபலம் நடிகை சன்னி லியோன் தான் என கூகுள் அறிவித்துள்ளது.



பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இந்தியாமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக சன்னி லியோன் நீடித்து வருகிறார்.

 இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் சன்னி லியோன் தான் டாப்பில் இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான்,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விடவும்



 சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம் பேர் சன்னி லியோனைத்தான் தேடி இருக்காங்களாம். பெரும்பாலானோர் சன்னி லியோன் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத்தான் விரும்பி பார்த்துள்ளார்களாம். மேலும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் கூகுளில் விரும்பி பார்த் உள்ளார்களாம்மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சன்னிலியோனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேடியிருக்காங்க என்று கூகுள் சொல்லியிருக்கிறது.

 அதிலும் . குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதுபற்றி அறிந்து நடிகை சன்னி லியோன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த பெருமைக்கு தன்னுடைய ரசிகர்கள்தான் காரணம் என்கிறார்.



Monday, August 12, 2019

டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்களுக்கு வேலை : கடைசிநாள் 21-8-2019-ந் தேதியாகும்.

இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனம் சுருக்கமாக பி.டி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 

மொத்தம் 391 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
 என்ஜினீயர் பணிக்கு கிரேடு-1 தரத்தில் 61 பேரும், கிரேடு-2 பணிக்கு 171 பேரும், கிரேடு-3 பணிக்கு 109 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர் பணிக்கு 37 பேரும், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் பணிக்கு 13 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு என்ஜினீயர் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.400 கட்டணம் செலுத்த வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 21-8-2019-ந் தேதியாகும்.

இனி பேன்சி நம்பரை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம்... ஆர்டிஓ புதிய அறிவிப்பு!


வாகனம் இல்லையென்றாலும் அதற்கான பேன்சி எண்ணை முன்கூட்டியே வாங்கும் வகையிலான புதிய அறிவிப்பை ஆர்டிஓ அலுவலகம் வெளியிட்டுள்ளது



ஒரு வாகனம் சாலையில் இயங்க எந்த அளவிற்கு எரிபொருள் தேவையோ... அதே அளவிற்கு, அதனை சாலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பதிவெண் முக்கியமாக இருக்கின்றது. இது ஒவ்வொரு வாகனத்திலும் தனித் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.


அந்தவகையில் இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு மோட்டார் வாகனங்களுக்கும், அவற்றை எளிதில் அடையாளம் காணும் வகையில் நம்பர் பிளேட் வழங்கப்படுகின்றது. இந்த பணியினை அந்தந்த மாநிலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மிக முக்கியமாக வாகனங்களை இனங்காண்பதில் உள்ள சிக்கல்களை குறைக்கவே இந்த முறை கையாளப்பட்டு வருகின்றது. இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். அவை பல்வேறு நுணுக்கங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அந்தந்த மாநிலத்தை குறிக்கும் வகையில் முதல் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, தமிழகத்திற்கு TN என்றும் கேரளாவிற்கு KL எனவும் வழங்கப்படுகின்றது.


இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட ஆர்டிஓ-வின் அலுவலக எண் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக TN 01, TN 05 இம்மாதிரியான எண் இடம்பெறும். இதையடுத்தே வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண் ஆங்கில எழுத்துகளை (A,B,C,D) அடுத்து நம்பரில் வழங்கப்படும். உதாரணாக, TN 01 AA 1111 என வழங்கப்படும்.


இவ்வாறு நாட்டில் இயங்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் பிரத்யேகமாக, அதை இனம் கண்டறியும் வகையில் பதிவெண்கள் வழங்கப்படுகின்றது. இது, வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவம், வாகன திருட்டு, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய இது உதவும்.


அதேசமயம், பலர் தங்களது வாகனங்களை, எளிதில் மறக்கமுடியாத மற்றும் கண்ட உடன் கண்களை கவரும் வகையிலான பேன்சி எண்களால் அலங்கரிக்க விரும்புகின்றனர். இந்த கலாச்சாரம் அண்மைக் காலங்களாக அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆகையால் பேன்சி எண்மீதான மோகத்தைத் தீர்க்கும் வகையில், ஆன்லைனில் பேன்சி எண்களை விற்பனைச் செய்ய ஆர்டிஓ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், இது நம் தமிழகத்தில் இல்லை எண்பதுதான் வேதனையளிக்கும் உரியது.


பிஹார் மாநிலத்தின் போக்குவரத்துத்துறைதான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இந்த நடவடிக்கையினால், பேன்சி எண் ஆர்வலர்கள் ஏலம் எடுக்க ஆர்டிஓ அலவலகங்களை நாட வேண்டும் என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. பேன்சி எண்ணிற்கான விற்பனை இனி ஆன்லைனில் விட இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பாணையைதான் பிஹார் போக்குவரத்துத்துறை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. இந்த ஏலமானது, ரூ. 10 ஆயிரத்தில் தொடங்கி ரூ. 1 லட்சம் வரை விடப்பட உள்ளது. இதற்கான கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆர்டிஓ அலுவலகம் என எங்குவேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாகனங்களுக்கு ஆடம்பரமான எண்களை ஒதுக்குவதற்கான புதிய முறைக்கு அம்மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 646 கவர்ச்சிகரமான எண்கள் சலுகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.


பொதுவாக, பிறந்ததேதி, கல்யாண நாள் மற்றும் ராசி எண் என்றுதான் பலர் பேன்சி எண்களை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு, ஒரே எண்ணை இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்தால், அவர்களுக்கு இ-ஏலம் விடப்பட உள்ளது. இந்த இ-ஏலத்திற்காக ரூ. 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை ஆர்டிஓ அலுவகம் திருப்பி தராது.


இந்த இ-ஏலத்தில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவருக்கே அந்த பேன்சி எண் வழங்கப்படும். மேலும், அதிக தொகையில் ஏலம் எடுத்தவர், ஏழு நாட்களுக்குள் வங்கி வரைவோலை அல்லது இணையதளம் மூலமாக பணத்தை செலுத்த வேண்டும். இதில், தவறினால் பேன்சி மீண்டும் ஏலத்திற்கு சென்றுவிடும்.


அதேபோன்று, ஏலத்தில் எடுக்கப்பட்ட எண்ணை 90 நாட்களுக்குள் வாகனத்துடன் பதிவு செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்த எண் காலாவதியாகிவிடும் எனவும் கூறப்படுகின்றது. அதேசமயம், ஏல தொகையும் திருப்பு தரப்படமாட்டாது என்ற நிபந்தனையையும் ஆர்டிஓ முன்வைத்துள்ளது.
இத்துடன், தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கான வெவ்வேறு அடிப்படை விகிதங்கள் போக்குவரத்துத் துறையால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்..

12 வயசு குழந்தை உட்பட 4 சிறுமிகளுக்கு தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை தந்த டிரஸ்ட் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கும் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது!




மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். 


 கருமாத்தூரை சேர்ந்த ஞானபிரகாசம், ஆதிசிவன் ஆகியோர்தான் இந்த காப்பகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிசிவனுக்கு வயசு 41 ஆகிறது.


காப்பகங்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திடீர் ஆய்வு

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், சம்பந்தப்பட்ட காப்பகத்திற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு நடத்தினார். அங்கு தங்கி இருக்கும் குழந்தைகளை அழைத்து நேரடியாகவே விசாரணை நடத்தினார்


கதறி அழுதனர்

அப்போது சிறுமிகள் கதறி கதறி அழ ஆரம்பித்தனர். இதில், 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கெல்லாம் காரணம், ஆதிசிவன்தான் என்றும், அவர்தான் ஆபீசில் வைத்து தங்களை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் சிறுமிகள் கண்ணீருடன் கூறினார்கள். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக ஆதிசிவன் மிரட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.


காப்பகங்கள் 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.


பரபரப்பு 

மேலும் 4 சிறுமிகளுக்கு இழைத்த அநீதி குறித்து, சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் எடுக்கவும், போலீசார் விசாரணை நடத்தி ஆதிசிவனை போக்சோவில் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டதுடன், காப்பகத்தின் இன்னொரு நிர்வாகியான ஞானபிரகாசிடம் விசாரணை நடந்து வருகிறது. காப்பகத்தில் சிறுமிகள் நாசம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


வேலை வாய்ப்பு : ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5 செப்டம்பர் 2019


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 130 உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் :  
மத்திய கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம் 
மேலாண்மை :  
தமிழக அரசு பணி : உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் :  130
வயது வரம்பு :
 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


கல்வித் தகுதி :  
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் : கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :
கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 பணியிடம்
காஞ்சிபுரம் ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.ரூ.47,500 வரையில் விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.kpmdrb.in என்னும் இணையதள முகவரி வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
5 செப்டம்பர் 2019 


விண்ணப்பக் கட்டணம் :  
250 ரூபாய்

 


 தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :
13 அக்டோபர் 2019, மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரையில் 
விண்ணப்பதாரர்களில் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும். அவர்களுடைய விபரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்படும்.மேலும், காஞ்சிபுரத்தில் தேர்வு முகாம் குறித்த விபரம் மின்னஞ்சல் வழியாக அறிவிக்கப்படும்.

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். 
 
விஜயவாடா அருகே சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தம்பதி மணி கிராந்தி - பிரதீப். இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதனால் மணிகிராந்தியிடம் விவாகரத்து கேட்டு பிரதீப் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். அதனால் இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது.

சரமாரி கொலை 
இந்நிலையில், நேற்று மதியம் மணி கிராந்தி வீட்டுக்கு பிரதீப் வந்திருந்தார். விவாகரத்து சம்பந்தமாக பேச வேண்டும் என்று சொன்னார். அதனால் அவரிடம் மனைவியும் பேச முன்வந்தார். அப்போது, பிரதீப், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் மணி கிராந்தி அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.
கையில் தலை பின்னர் வெட்டிய தலையை எடுத்து கொண்டு பிரதீப் தெருவில் நடந்து சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் பிரதீப் நடந்து செல்வதை பார்த்து தெருமக்கள் எல்லாம் அலறி அடித்து கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள்.

விசாரணை 
கையில் தலையுடன் அருகில் இருந்த சத்யநாராயணபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பிரதீப் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார், விரைந்து வந்து வெறும் முண்டத்துடன் கிடந்த மணி கிராந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பு 
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. அந்த காட்சியில் கொலையாளி தலையுடன் ஆவேசமாக ஸ்டேஷனுக்கு சரணடைய வருவது பதிவாகி இருந்தது. ஸ்ரீநகர் என்றும் நகரின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில், மனைவியின் தலையை வெட்டி கணவன் கொண்டு போன சம்பவம் விஜயவாடாவில் பெரிய பரபரபப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Saturday, August 10, 2019

70 அடி ஆழ கிணற்றில் அலேக்காக மயங்கி விழுந்த சாந்தா பாட்டி.. கயிறு கட்டி பத்திரமாக மீட்ட வீரர்கள்! | Run World Media

70 அடி ஆழமுள்ள கிணற்றில் 68 வயதான சாந்தா பாட்டி தவறி விழுந்துவிட்டார்.. இவரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு திருச்சி பகுதி மக்கள் நன்றி சொல்லி வருகிறார்கள்.  செந்தண்ணீர்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா. இவருக்கு 68 வயது. இவர் வீட்டின் பின்புறம், சுமார் 70 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு உள்ளது.

கிணற்றின் அருகே உட்கார்ந்து வழக்கம்போல சாந்தா பாட்டி துணியை துவைத்து கொண்டிருந்தார். பிறகு துணிகளை காயப்போட, கிணற்றின் மீது போடப்பட்டு இருந்த பலகையின் மீது ஏறினார். அந்த சமயத்தில் அவருக்கு திடீரென தலைசுற்றி விட்டது. இதனால் மயக்கம் வர மாதிரி இருக்கவும், கிணற்றின் மீது இருந்த பலகை மேலேயே உட்கார்ந்து கொண்டார். ஆனால் வெயிட் தாங்காமல் பலகை திடீரென உடைந்துவிடவும், சாந்தா பாட்டி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
ஆனால் 10 அடி ஆழத்துதுக்கு மட்டுமே தண்ணீர் கிணற்றில் இருந்தது. அதனால் இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டே அலறி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டதும், குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்து பாட்டியை மீட்க போராடியும் முடியவில்லை. அதனால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், கயிறு கட்டி அவரை மேலே பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். உடனடியாக முதலுதவி சிகிச்சையும் தரப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.


Thursday, August 08, 2019

கள்ள உறவு மோகம்.. சிதறி கிடந்த ஆணுறைகள்.. டீ கப்பில் லிப்ஸ்டிக்.. பிளான் போட்டு கொன்ற மனைவி | Run World Media


கணவனுக்கு டீ-யில் தூக்க மாத்திரை கொடுத்து, கழுத்தையும் நெறித்து கொலை செய்துள்ளார் மனைவி.. காரணம் கண்ணை மறைத்த கள்ளக்காதல்! தானே மிராரோடு கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் பிரமோத் பதான்கர். இவருக்கு வயது 43. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

இவரது மனைவி 36 வயதான தீப்தி. இந்நிலையில், பிரமோத், கடந்த மாதம் 15-ந் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததால், நிறைய சந்தேகங்களும் எழுந்தன. இதனால் நவ்கர் போலீசார் விசாரணையை துரிதமாக்கினார்கள். முதல் வேலையாக, கட்டிட வளாகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சமயத்தில்தான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தது.

கொன்றோம் அதனால்தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரமோத்தை தீர்த்து கட்ட திட்டம் போட்டோம். இதுக்காகவே என் மகளை, என் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டேன். பிரமோத்துக்கு டீ போட்டு அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அவரும் மயக்கமா விழுந்துட்டாரு. அதுக்கப்புறம் நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து அவர் கழுத்தை நெரித்து கொன்றோம்" என்றார்.

கள்ளக்காதல்
 அதில், பிரமோத் ஏராளமான தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளதும், அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகமாக்கியது. அதனால் முதல் விசாரணையே அவரது மனைவி தீப்திதான். ஆரம்பத்தில் மழுப்பலாக பேசிய தீப்தி, பிறகுதான் உண்மையை கக்கினார். கள்ளக்காதல் குட்டும் வெளிப்பட்டது. தீப்தி போலீசாரிடம் சொன்னதா

தகராறு 

"நான் கோரேகாவில் ஒரு ஸ்கூலில் வேலை பார்த்தேன். போன 2015-ம் வருஷத்தில் இருந்து புனேயை சேர்ந்த உத்தவ் பஜான்கர் என்பவருடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பிரமோத்துக்கு தெரியவரவும், எங்களுக்குள் தகராறு அடிக்கடி வந்தது. இது எனக்கு எரிச்சலாக இருந்தது.
ஆணுறைகள்  
 இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம் என்றால், தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரமோத் சாப்பிட்ட டீ கப்பில் "லிப்ஸ்டிக்" மூலம் உதடு வரைந்திருக்கிறார். இது போக, ஆணுறைகளை தலையணைக்கு கீழ் வைத்து விட்டார். அதாவது பிரமோத்துக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதுபோல செட்டப் செய்தார்.

சேர்ந்து பிரமோத்தை தீர்த்து கட்ட திட்டம் போட்டோம். இதுக்காகவே என் மகளை, என் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டேன். பிரமோத்துக்கு டீ போட்டு அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். அவரும் மயக்கமா விழுந்துட்டாரு. அதுக்கப்புறம் நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து அவர் கழுத்தை நெரித்து கொன்றோம்" என்றார்

கைது
பிறகு அவரே போலீசுக்கும் போன் செய்து தகவலை சொல்லிவிட்டு, ஒன்னுமே நடக்காதது போல இருந்து கொண்டார். இதெல்லாம் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வெட்ட வெளியே வந்தது. இப்போது கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்