வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-05-10
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 17, 2020

1000 குடும்பங்களுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பில் திருக்கழுக்குன்றம் அருகே அ.தி.மு.க வழங்கிய கொரோணா நிவாரணம் | ADMK Giving Corona Relief at Periyakattupakkam Thirukazhukundram | Vil Ambu News


கொரோணா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
அது போல் காஞ்சி மத்திய மாவட்டம்  (செங்கல்பட்டு மாவட்டம்), திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகாட்டுப் பாக்கம், அமிஞ்சிகரை, வீராபுரம், ரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு  ஒன்றிய அதிமுக அவைத் தலைவரும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான  ரகுராமன் ரெட்டியார் ஏற்பாட்டில் காஞ்சி மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் என கொரோனா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். 
மேலும், ஏழை எளியோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் தமிழக அரசுக்கும், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய அவைத் தலைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 
இதில் மத்திய  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மத்திய மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர். பிரவீன் குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன்,  நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சந்திரபாபு, வள்ளிபுரம் ரவிக்குமார், ஹரிதாஸ், துரை, செந்தில்குமார், மணிகன்டன், அர்ஜுணன் உள்பட பலர் உடனிருந்தனர்

கருங்குழியில் 3 லட்சம் மதிப்பிலானா நிவாரணப் பொருட்களை வழங்கிய தொண்டு நிறுவனம் | Corona Relief given at Karunguzhi Town Panchayat Office | Vil Ambu News


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில் சென்னை சேவாலயா தொண்டு நிறுவனம் மற்றும் எப்.சி.ஏ நிறுவனம் இணைந்து 3 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை 350 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு நேற்று வழங்கினர்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 கிலோ அரிசி, அனைத்து விதமாக பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு, பேஸ்ட், சர்க்கரை, உப்பு உள்ளிட்ட 15 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளுடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 முகக்கவசம் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரச்சுரம் போன்றவற்றை சேவாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவர் முரளிதரன் மற்றும் எப்.சி.ஏ. நிறுவனத்தின் மேஜர்.ஆசிஷ் சர்மா ஆகியோர் இணைந்து வழங்கினர்.
மேலும், சமூக இடைவெளியுடன் மக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்வதற்காக வட்டம் வரைதல், பொதுமக்களின் கைகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Saturday, May 16, 2020

தனது பிறந்தநாளை முன்னிட்டு 1500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிய தி.மு.க. நகர செயலாளர் | DMK Person Giving Corona Relief for his birthday at Kalavakkam


செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கி வந்ததை தொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் தனது சொந்த செலவில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்போரூர் எம்.எல். இதயவர்மன் முன்னிலையில் நிவாரணப் பொருட்களை 14.05.2020 அன்று வழங்கினார்.
திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய தினக் கூலி தொழிலாளர்களுக்கு தி.மு.க. நகர செயலாளர் காலவாக்கம் மு.தேவராஜ் தனது பிறந்த நாளை முன்னிட்டு  காலவாக்கம் கிராமத்தில் 1வது வார்டு, 2வது வார்டு பகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று  அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தனது சொந்த செலவில்  1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்
நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருப்போரூர் எம்.எல். இதயவர்மன் காலவாக்கம் கிராம மக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து, கையில் கிருமி நாசினி தெளித்து  அரிசி உட்பட நிவாரண பொருட்களை வழங்கினார்
அதனைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று சுமார் 1500 குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி, காய்கறிகள்  உள்ளிட்ட தொகுப்பினை நகரச் செயலாளர் தேவராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர துணை செயலாளர் பரசுராமன், மோகன் வழக்கறிஞர் சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.