வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-05-24
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, June 02, 2020

மதுராந்தகம் தீயனைப்புத் துறையினர் சார்பாக பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கொரானா விழிப்புணர்வு ஓவிய போட்டி | Madurantakam Fire Service Coducting Drawing Compition for School Students | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு கொராணா பற்றி விழிப்புணர்வை தூண்டும் வகையில் 31.05.2020 அன்று ஓவிய போட்டி நடைபெற்றது.




தற்சமயம் மக்களை வாட்டி வரும் கொரானா வைரஸ் தொற்று பற்றி பள்ளிக்குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் அவர்கள் விழிப்புடன்  செயல்படவேண்டும் என்பதை திறன்சார் போட்டிகள் மூலமாக நடத்திட மாநில தீயணைப்பு இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்திரவிட்டு இருந்தார்.





அதன்படி மாவட்ட தீயணைப்பு அலுவலர் க.குமார் அறிவுறுத்தலின்படி மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள 5வயது முதல் 8வயது வரையுள்ள குழந்தைகளும் 9 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளும் ஓவியப் போட்டியில் கலந்துக் கொண்டனர்.





இதில் 23 பள்ளிக்குழந்தைகள் கலந்துக் கொண்டு பல்வண்ணத்தில் கொரானா பற்றிய ஓவியங்களை வரைந்தனர். இந்த ஓவியப் போட்டி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருவதால் ஒட்டுமொத்த ஓவியங்களையும் சென்னை இயக்குநர் அலுவலகத்தில் தேர்வுகுழுவினர் சிறந்த முறையில் ஓவியங்களை வரைந்த பள்ளிக்குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகளை மாநில இயக்குநர் சி.சைலேந்திரபாபு வழங்கி பாராட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 30, 2020

மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் அத்துமீறி பேசியவர் கைது | Madurantakam RDO News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அறைக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி நுழைந்த அம்பேத்கர் புரட்சி புலி இயக்க நிறுவனர் கிருஷ்ணன் பறையனார் கோட்டாட்சியர் லட்சுமி பிரியாவை தகாத வார்த்தைகளால் பேசியதால் மதுராந்தகம் காவல்துறையினர் அவர்மீது 3 பிரிவுகளின்மீது வழக்குப்பதிவு  செய்து கைது செய்தனர்.


  1. அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைதல்
  2. அரசு அதிகாரியை அவதூராக பேசுதல்
  3. கொலை மிரட்டல் 
உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள் | என்னென்ன கட்டுப்பாடுகள் | City Bus Transport will be start soon

சென்னை மாநகர பேருந்து தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சென்னையில், பேருந்து சேவைகள் துவங்க உள்ளதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள்: நமது மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3554 பேருந்துகளில், அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளதால், பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில், 1775 பேருந்துகளில், ஹெச்எஃப்சி மற்றும் எஃப் சி ஆகியவை 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு உள்ளாக காலாவதி ஆகின்றன. எனவே மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்க வேண்டி உள்ளதால், எம்டிசி (டபிள்யூ) எஃப்சி யூனிட்டுகள் மற்றும் ஆர்சி யூனிட்டுகளில் பணிபுரியும் பணியாளர்கள், இரண்டு நாளுக்கு ஒருமுறை 50% அடிப்படையில் உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும், பணியாளர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நடை முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும். 
  • முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் 
  • கை உறை கட்டாயம் அணிய வேண்டும் 
  • கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் 
  • கை சானிடைசர் பயன்படுத்த வேண்டும் 
  • தொழிற்கூடங்கள், பணி செய்யும் இடங்கள், கேன்டீன், ஓய்வு நேரக் காப்பாளர் அறை, மற்றும் பண்டக சாலைகளில் கட்டாயம் 3 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

Friday, May 29, 2020

விவசாயிகள் அதிர்ச்சி | கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் | Vettukili at Krishnagiri District | Vil Ambu News

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.



கொரோனா ஊரடங்கால்  விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தற்போது வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவது நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நேரலகிரி ஊராட்சியில் உள்ள எருக்கன் செடிகளிலும், வாழை மரங்களிலும் நேற்று மாலை ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்தன.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


ஆய்வு
ஆனால் இரவு நேரமானதால் யாரும் அந்த பகுதியில் செல்ல முடியவில்லை. இதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) வேளாண்மைத்துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.


இது குறித்து வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் கூறியதாவது:
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் வெட்டுக்கிளிகள் இருப்பதாக விவசாயிகள் கூறியிருப்பது கவலை அளிக்கிறது.


எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று அந்த பகுதியில் உள்ள வெட்டுக்கிளிகள் எந்த ரகம், அவை பயிர்களை நாசம் செய்ய கூடியவையா? என பொதுமக்களுக்கு தெரிவித்திட வேண்டும். மேலும் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளாக இருக்கும் பட்சத்தில் அவற்றை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


துன்பங்களை அனுபவிக்கும் விவசாயிகள்
இதே போல தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், வெட்டுக்கிளிகள் நாடு முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள், காட்டு பன்றிகளால் பயிர்கள் பாதிப்பு, ஊரடங்கால் பாதிப்பு என ஏராளமான துன்பங்களை விவசாயிகள் அனுபவித்து வருகிறார்கள்.


இந்த சூழ்நிலையில் வெட்டுக்கிளிகள் ஏராளமானவை வந்ததாக கூறுகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.