வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-06-28
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 08, 2020

செங்கை எஸ்.பி. தலைமையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டம் | Chengalpattu SP Meeting | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் தலைமையில் காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மினி வேன் உள்ளிட்ட சில தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
தற்போது மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், வியாபாரிகள், வாகன ஓட்டிகளும் கட்டாயம் இந்த செயல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் எஸ்.பி. கண்ணன் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் காவல் துறையினர் எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் புகார் அளிக்க வரும் தருணத்தில் எக்காரணத்தை கொண்டும் அவர்களிடம் அசாதாரணமாக நடந்து கொள்ள கூடாது எனவும் சுமூகமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார். காவல் துறையில் முறையாக புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாத தருணத்தில் என்னை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டுநர்கள், லோடு வாகன ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள், பாஸ்ட் புட் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 200 நபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன், சூணாம்பேடு காவல் ஆய்வாளர் தரனேஸ்வரி, மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் தமிழ்வாணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்த்ராஜ் மற்றும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tuesday, July 07, 2020

வேலாமூரில் தொண்டு நிறுவனம் வழங்கிய கொரோனா நிவாரணம் மற்றும் மரக்கன்றுகள் | Velamur Corona Relief | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனமானது வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை கொரோனா நிவாரண உதவியாக வழங்கியது.
சென்னை மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தலைமையில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அ.டோமினிக் முன்னிலையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் வேலாமூர், இராமாபுரம், காட்டுக்கரணை, செண்டிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஏழை எளிய பெண்கள் பயனடைந்தனர். 
இந்த நிகழ்வில் யு.எஸ்.எப் தொண்டு நிறுனத்தின் நிறுவனர் அன்பழகன், தன்னார்வலர் தணிகைக்குமார் மற்றும் மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 



மேலும், பின்வரும் காலங்களில் மகளிர்களுக்கு தேவையான கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி, தையற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என மேக்னம் சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கோமதி தெரிவித்தார்.

Sunday, July 05, 2020

FO போலீஸ்-க்கு தடை | முழு காரணம் என்ன..? | Will stop Friends of Police | Vil Ambu News

போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு விழுப்புரம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை சரகத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.




போலீஸ் என்ற வார்த்தை மரியாதைக்குரியதும், பயபக்தியுடன் சட்டத்தை மதிக்க வைப்பதற்கும் ஓர் மந்திர வார்த்தையாக உள்ளது. மக்களில் சிலர் கூறுவர் போலீஸ்தான் நாட்டை ஆளுகிறது என...! ஆம் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என ஆயிரம் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அது போலீஸ்காரர்கள் மூலமாகதான் பிரதிபலிக்கிறது.


போலீஸ்காரர்களுக்கு போதிய நேர நிர்ணயம் இன்றி பணி செய்து வந்த நாட்களில் பணிச்சுமையை குறைப்பதற்காக காவல் துறை மூலமாக 1946 -ம் ஆண்டு சைனோ-இந்தியன் போருக்கு பிறகு பலகட்டங்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஊர்காவல்படையினர் (Home Guard Police).


தற்போது அதிகரித்துவரும் காவல் துறையினரின் பணிச்சுமையின் காரணமாக போக்குவரத்து சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள்தான் தற்போதைய போலீஸ் நண்பர்கள் குழு (Friends of Police)


இவர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. காவல் துறையினரால் தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் தங்களை நிஜ போலீசாக பாவித்துக் கொண்டு செய்யாத அட்டகாசமே இல்லை.


போக்குவரத்து சோதனைச் சாவடிகள் அல்லது ஏதேனும் பந்தோபஸ்துகளில் காவல் துறையினருடன் சேர்ந்து பணியாற்றும்போது உண்மையான போலீஸ் முறையாக ஓர் நபரிடம் கேள்வி கேட்டு குறிப்பிட்ட நபரை விசாரணை செய்வதற்கு முன்னரே முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு குறிப்பிட்ட நபரை பாடாய் படுத்துபவர்களும் இவர்களே (FOP).


இதையெல்லாம் யோசித்தால் ஊர்காவல்படையினருக்கே ஓர் சல்யூட் அடிக்கலாம். ஆம்...! காவல் துறையினரின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முறையாக பணியாற்றிவரும் ஊர்காவல் படையினர்கள் எங்கே..? ஊரைச் சுற்றித் திரிந்த இந்த புள்ளிங்கோக்கள் எங்கே..?


பொதுமக்கள் கூறுவது என்னவென்றால்... நேற்றுவரை எனது ஏரியாவில் சுற்றித் திரிந்த புள்ளீங்கோ கும்பல் இன்று போலீசாருடன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போர்வையில் சுற்றித் திரிவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது இவர்களுக்கு பதிலாக ஊர்காவல்படை மற்றும் முன்னாள் இராணுவத்தினரை பணியமர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.


அதாவது, சட்டம் என்றால் என்ன..? பொதுமக்களை எப்படி வழிநடத்த வேண்டும்...?  நமக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை சிறிதும் அறியாத இந்த FOP பசங்களின் பணி தற்போது சாத்தான்குளம் பிரச்சனை காரணமாக பறிபோய் உள்ளது என்பதை பொதுமக்கள் பலரும் வரவேற்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்படவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். யுனிபார்ம் போட்டுகிட்டு கெத்தாக திரிந்த இவர்கள் மறுபடியும் புள்ளீங்கோக்களாக திரிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்லும் நாள் எங்கே....???
-வில் அம்பு ஆசிரியர், பழனிவேல் பாலாஜி

Saturday, July 04, 2020

பப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்: பின்னர் சிறுவனுக்கு நேர்ந்தது என்ன..? | PUBG Loss | Vil Ambu News

பப்ஜி விளையாட்டில் 17 வயது சிறுவன் பெற்றோரின் சேமிப்பான ரூ.16 லட்சத்தை செலவழித்தான்.



பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் சீன விளையாட்டு செயலியான பப்ஜி கேம்-ஐ விளையாடியே அடிமையாகிருந்தான். அதற்காக தனது அம்மாவின் ஸ்மார்ட் போனை பயன்படுத்திவந்தான். சிறுவன் அதிக நேரம் மொபைல்  போனை பயன்படுத்துவதைக் கண்டு பெற்றோர் கேட்கும்போது, ஆன்லைனில் படிப்பதாக அவன் பொய் கூறியுள்ளான்.


இந்நிலையில் பப்ஜி விளையாட்டில் அடுத்தடுத்த கட்டங்கள்  எட்டவும் புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளான். இப்படியே அடிமையாகிய சிறுவன் ரூ.16 லட்சம் ரூபாயினை செலவழித்துள்ளான்.


வங்கியில் பணம் எடுத்ததற்காக வந்த மெசேஜ்களை உடனடியாக அழித்துவிடுவானம் இந்த சிறுவன். இந்த பணம் இந்த சிறுவனின் எதிர்கால செலவுகள் மற்றும் குடும்பத்தின் அவசர செலவுகளுக்காக கஷ்டப்பட்டு சேர்த்த பணம் என பெற்றோர்கள் குமுறுகின்றனர். சிறுவனின் தந்தை ஓர் அரசு அலுவலர் ஆவார்.


இதனால் அதிர்ச்சியுற்ற சிறுவனின் தந்தை உடனடியாக போலீசீல் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை மீட்க முடியாது என போலீஸார் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து மனம் விரக்தியடைந்த சிறுவனின் தந்தை அந்த சிறுவனை ஓர் இருசக்கர வாகன பழுதுநீக்க கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

அச்சிறுபாக்கத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் | Acharapakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம்  பேரூராட்சி சமுதாய கூடத்தில் 03.07.2020 அன்று மாலை 5 மணிக்கு பேரூராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்  மற்றும்  குடியிருப்போர் சங்கத்தினர்களோடு ஆலோசனை கூட்டமானது அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமையில்  நடைபெற்றது.
இதில், அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ் முன்னிலை வகித்து கொரோனா வைரஸிலிருந்து தம்மையும், சமுதாயத்தையும் பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், பேரூராட்சி  பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த தருணத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறக்கூடாது எனவும் காவல் ஆய்வாளர் சரவணன் கேட்டுக் கொண்டார்.


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறைகள், முகக்கவசம்  மற்றும்  கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டது.
 
இதில் அனைத்து வியாபாரிகளும் கடைமுன்பு கோடு போடுவது, கடைதிறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரத்தை நிர்ணயம் செய்வது, முகக்கவசம் அணியவில்லையென்றால் பொருட்கள் கிடையாது என்று பொதுமக்களுக்கு கூறவேண்டும் எனவும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்து வியாபாரம் செய்யவேண்டும் போன்ற உறுதிமொழிகள் ஆலோசனை கூட்டத்தில் மூலமாக எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.