வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விஜயகாந்த் கட்டி வரும் புதிய வீட்டிலிருந்து 2 பசு மாடுகள் திருட்டு.. பரபரப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

விஜயகாந்த் கட்டி வரும் புதிய வீட்டிலிருந்து 2 பசு மாடுகள் திருட்டு.. பரபரப்பு



விஜயகாந்த் வீட்டிலிருந்து 2 பசு மாடுகள் திருட்டு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இருந்து 2 பசுமாடுகள் திருடு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கத்தில் அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.


அந்த வீட்டில் செல்லப்பிராணிகளும் கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென மாயமாகியுள்ளன. பசுமாடுகள் மாயமானது குறித்து பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் வீட்டிலேயே பசுமாடுகள் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 

No comments:

Post a Comment