வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மசூதியின் மேற்கூரை மீது வீசப்பட்டிருந்த சாக்குப்பையில் கசிந்த இரத்தம் : 7 வயது சிறுமி கொன்று திணிக்கப்பட்டிருந்த கொடூரம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 09, 2018

மசூதியின் மேற்கூரை மீது வீசப்பட்டிருந்த சாக்குப்பையில் கசிந்த இரத்தம் : 7 வயது சிறுமி கொன்று திணிக்கப்பட்டிருந்த கொடூரம்



இந்தியா உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக, பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.  (தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

இந்நிலையில், அங்குள்ள மசூதியின் மேற்கூரையில் இரத்தக்கறையுடன் மூட்டை கட்டப்பட்ட சாக்குப்பை ஒன்று மீட்கப்பட்டது. அதில், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்து வந்த பொலிசாரும், பெற்றோரும் அங்கு வந்த பார்த்தபோது, காணாமல் போன சிறுமிதான் கொல்லப்பட்டாள் என உறுதி செய்யப்பட்டமையால், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொலையை, முராத் நகரைச் சேர்ந்த கவுன்சிலரும் அவரது 3 சகோதரர்களும்தான் செய்திருக்கக் கூடும் என்றும், தேர்தல் முன்விரோதம் காரணமாக கொன்றிருக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளமையும் குறிப்பிடதக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment