வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சாக்குப்பைக்குள் சிறுவனை கடத்திய வடமாநில மூதாட்டி கைது..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 26, 2018

சாக்குப்பைக்குள் சிறுவனை கடத்திய வடமாநில மூதாட்டி கைது..

சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனின் வாயில் துணியை போட்டு அடைத்து சாக்குப் பைக்குள் போட்டு கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகர் அரசு மேல்நிலை பள்ளி அருகே வட மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்தார். அவர் அவ்வழியாக பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் பேச்சு கொடுத்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
 
கையை பிடித்து இழுத்து
பாஷை புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த மூதாட்டி திடீரென சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார்.

கோணிப்பை 
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து அடைத்து ஒரு கோணிப்பையில் போட்டு அடைத்தார். இதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து விட்டனர்.

போலீஸுக்கு தகவல் 
பின்னர் அந்த மூதாட்டியை விரட்டி பிடித்து கோணிப்பையை திறந்து பார்த்தனர். அதில் சிறுவன் இருந்தான். இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

கைது  
அவர்கள் வருவதற்குள் மூதாட்டியை போட்டு சரமாரியாக அடித்தனர். இதையடுத்து காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment