வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலாமூர் மாதா கோவிலில் விமர்சியாக நடைப்பெற்ற "கிறிஸ்துமஸ்" | Velamur Christmas Celebration | Ramapuram
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 25, 2019

வேலாமூர் மாதா கோவிலில் விமர்சியாக நடைப்பெற்ற "கிறிஸ்துமஸ்" | Velamur Christmas Celebration | Ramapuram

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் பங்கு, வேலாமூர் கிளைப்பங்கில் உள்ள மாதா கோவிலில்  கிறிஸ்துமஸ் பண்டிகையானது வெகுவிமர்சியாக நடைபெற்றது. 


இரவு 2 மணியளவில் ஏசுகிறிஸ்து பிறப்பு திருப்பலி நிகழ்வு நடைபெற்றது. இந்த திருப்பலி நிகழ்வனாது பங்குத்தந்தை அருள்பணி.இம்மானுவேல் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் நடத்தினர். 

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் உலக தாழ்ச்சி, உலக அமைதி, சமாதானம் நிலவவும் மக்கள் நல்ல முன்னேற்றமடையவும் பிராத்தனைகள் நடைப்பெற்றது. 


மேலும், சென்ற ஆண்டு நடந்த அனைத்து பிரச்சனைகளும், தீய பழக்க வழக்கங்களும் மாறி  மனமாற்றத்தோடு இந்த இனிய நாள்முதல் ஆண்டவன் சுகமளிக்கவேண்டும், இருப்பதை பகிர்ந்து வாழவேண்டும், தாழ்ச்சிடன் வாழவேண்டும் போன்ற செய்திகளோடு இந்த திருப்பலியானது 4மணியளவில் முடிவு பெற்றது. 

இத்திருநாளில் ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வேட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் நிறுவனர் டோமினிக் மற்றும் ஏகப்பன், அசோக்ராஜ், திவ்யநாதன், அலெக்சாண்டர், ஹேமாவதி, பிரேமா, பிரமிளா, நிர்மலா ஆகியோர்கள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment