செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் எல்.எண்டத்தூரில் 100-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் இணையவழி உறுப்பினராக தி.மு.க-வில் இணைந்தனர்.
காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டடோர் 24.09.2020 அன்று தி.மு.க-வில் இணையவழி உறுப்பினராக இணைந்தனர்.
அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தம்பு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சிவபெருமான் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் வேதாச்சலம், அசோகன், தீணன், சீனிவாசன், லெனின், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலியுக கண்ணதாசன், பிரபாகரன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் டி.ஆர்.நாராயணன், எல்.எண்டத்தூர் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதியதாக தி.மு.க-வில் இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் “எல்லோரும் நம்முடன்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட், தொப்பி, இணையவழி உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டு கட்சியின் நெறிமுறைகள் குறித்த அறிவுரைகளை மாவட்ட செயலாளரும், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினர்.
தி.மு.க-வில் புதியதாக இணைந்த உறுப்பினர்கள் கழக முன்னோடிகளுடன் இணைந்து தமிழகத்தின் அடுத்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான் எனவும், அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எனவும் சபதத்தினை எடுத்து அதற்கான அனைத்து களப்பணிகளையும் சிறப்பாக மேற்கொள்வோம் என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment