வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-05-03
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 11, 2020

கல்பாக்கம், செட்ராஸ் சுற்றவட்டாரப் பகுதிகளில் மஹாயோகம் தியான அமைப்பு வழங்கிய கபவாத மாத்திரை, சூப் | Mahayoga Thiyana Amaippu Giving Corona Precaution Tablets


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுபுரம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் அணு ஆற்றல் நகரியம் மற்றும் புதுபட்டினம் ஆகிய இடங்களில் உள்ள காவல் துறையினர், மருத்துவ பணியாளர்கள்பொதுமக்கள், வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா  தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும்  மஹாயோகம் தியான அமைப்பை சேர்ந்த கல்பாக்கம் மற்றும் அனுபுரம் தியான அன்பர்கள் மூலமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வகையில் மஹா கபவாத மாத்திரை மற்றும் சூப்பினை ஊரடங்கு நாள் முதல் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்

நேற்றைய தினம் அனுபுரம், விட்டிலாபுரம் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகள்பணியாளர்களுக்கு  இந்த மாத்திரைகள் மற்றும் சூப் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கழுக்குன்றம் ஜெயின் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கொரோணா நிவாரண பொருட்கள் | Thirukazhukundram Jain Sangam Giving Corona Relief


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தென் மாட வீதியில் திருக்கழுக்குன்றம் ஜெயின் சங்கம் ஏற்பாட்டில் கடை ஊழியர்கள், பொது மக்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்  மற்றும் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் ஆகியோர் முன்னிலையில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் கொரோனா நிவாரணமாக 10.05.2020-ல் வழங்கப்பட்டது.

பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி  பொருட்களை பெற்று சென்றனர். பொருட்களை பெற்று கொண்ட பொதுமக்கள் தமிழகத்திற்க்கு நல்வழி காட்டி தமிழகத்தை வழிநடத்தும் தமிழக முதல்வருக்கும், ஜெயின் சமூகத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Friday, May 08, 2020

பெருக்கரணை, மழுவங்கரணை பகுதி இருளர்களுக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Madurantakam RDO


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டத்திற்குட்பட்ட மழுவங்கரணை மற்றும் பெருக்கரணை பகுதிகளில் வசிக்கும் இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் குடும்பங்கள் என சுமார் 30 குடும்பங்களுக்கு மதுராந்தகம் ராஜா டெக்ஸ்டைல்ஸ் சார்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும் கடும் சிரமப்பட்டுவரும் மழுவங்கரணைப் பகுதியைச் சேர்ந்த 12 குடும்பங்கள் மற்றும் பெருக்கரணை பகுதியைச் சேர்ந்த 18 குடும்பங்கள் என 30 இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

 

 

 

 

[சற்றுமுன்] நாளை முதல் டாஸ்மாக் இயங்காது | TASMAC Closed tommorow onwards | Vil Ambu News

நாளை முதல் டாஸ்மாக் இயங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




ரேஷன் கடையில் கூட்டத்தை கட்டுப்படுத்த 100 டோக்கன்கள் வழங்கிய தமிழக அரசு, டாஸ்மாக் மது விற்பனைக்கு கட்டுக்குள்ள இல்லாத அளவிற்கு டோக்கன்களை காவல் துறையினரின் கைகளாலேயே வழங்கி கொரோனா பரவலை அதிகரிக்கும் போக்கில் இன்றைய நிலமை உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.


உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட விதிமுறைகளை மீறி மது விற்கப்பட்டதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு முடியும்வரை ஆன்லைனில் மட்டுமே இனி மது விற்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

செண்டிவாக்கம் கூமோ பவுண்டேஷன் சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Sendivakkkam Cumo Foundation Giving Corona Relief


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அகிலி, செண்டிவாக்கம், சோத்துப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு கூமோ பவுண்டேஷன் டிரஸ்ட் ஆப் இந்தியா சார்பாக கடந்த 06.05.2020 அன்று கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கும் ஏழை எளிய நலிவடைந்த குடும்பத்தினர்ளுக்கு உதவும் பொருட்டு மொனகா நாட்டில் அமைந்துள்ள கூமோ பவுண்டேஷன் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
அதன்படி, மதுராந்தகம் வட்டம், அகிலி, செண்டிவாக்கம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 250 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களானது அகிலி ஊராட்சி செயலர் தசரதன் முன்னிலையில் செண்டிவாக்கம் ஆர்.சி.பள்ளி மூலமாக அருட்பணி.ரேமண்ட் மற்றும் கூமோ பவுண்டேஷன் திட்ட இந்திய மேலாளர் சார்லஸ் குழந்தை ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13.02.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஆல்பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு மருத்துவர் புவனேஸ்வரி மற்றும் சுகாதார ஆய்வாளர் கீதா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது, வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே முன்கூட்டியே நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப பொதுமக்களின் தேவைகளின் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் இந்த கல்வி நிறுவனத்தை பொதுமக்கள் பெரிதும் பாராட்டிவருகின்றனர்.