வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 🔴மதுராந்தகத்தில் பெண் கவுன்சிலர் தற்கொலையால் பரபரப்பு..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

🔴மதுராந்தகத்தில் பெண் கவுன்சிலர் தற்கொலையால் பரபரப்பு..!

மதுராந்தகம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (35). இவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றிவந்தார். இவரின் கணவர் செந்தில். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றுகிறார். தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளான். 

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 15வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ரேணுகா பெற்றிப்பெற்றார். இதன்பிறகு அவர், திமுகவில் இணைந்து பணியாற்றிவந்தார்.

இந்த நிலையில், இன்று காலை ரேணுகா தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்ததும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, குடும்ப பிரச்சனை காரணமாக ரேணுகா தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். பெண் கவுன்சிலர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment