வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பட்டாபிராமில் அரைகுறையாக எரிந்த குப்பையில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 24, 2018

பட்டாபிராமில் அரைகுறையாக எரிந்த குப்பையில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி



அரைகுறையாக எரிந்த குப்பையில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

 
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பேக்கரி கடை ஊழியர். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகள் பிரதிக்ஷையா (வயது 4). இவர்களுக்கு பிரதீப் (2) என்ற மகனும் இருந்தான். கடந்த 20-ந் தேதி சக்திவேல் வீட்டின் அருகே குவிந்து இருந்த குப்பைகளை மொத்தமாக கூட்டி தீ வைத்தார். (தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!

சிறிது நேரம் கழித்து குப்பைகள் அரைகுறையாக எரிந்த நிலையில் அதன் மீது தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டு வீட்டின் உள்ளே சென்றார். அந்த குப்பையில் இருந்த சில பிளாஸ்டிக் பொருட்கள் உருகிய நிலையில் புகைந்தபடி இருந்தது. குழந்தை பிரதீப் அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.


அப்போது அவனது காலில், எரிந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஒட்டியது. இதில் வலி தாங்க முடியாத அவன் புகைந்து கொண்டிருந்த குப்பையில் தவறி விழுந்தான். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு கதறி அழுதான். இதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தை பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment