நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. 14 வயதான 
9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பள்ளி 
ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு 
திடீரென வயிற்று வலி வந்துவிட்டது.
டாக்டர்கள் பரிசோதனை
 வலி பொறுக்க முடியாமல் மாணவி அழுது புரண்டாள். அதனை பார்த்து பதறிபோன 
பெற்றோர்கள் மகளை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள். 
அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், பெற்றோரிடம் "பிரசவ வலியால் 
துடிக்கிறாள், அதனால் உடனே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு 
போங்கள்" என்று சொன்னார்கள்.  (தொடர்ச்சி கீழே...) 
| 
இதையும் படிக்கலாமே !!! | 
ஆண் குழந்தை
 இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், வயிற்று வலியால் துடிக்கும் மகளை 
எதுவும் கேட்காமல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள்.
 அங்கு சென்ற கொஞ்ச நேரத்திலேயே சிறுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 
நிலைகுலைந்து போன பெற்றோர்கள் கதறி அழுதார்கள்.
மிரட்டி பாலியல் 
 பிறகு சிறுமியிடம் தந்தை, விசாரித்தபோது தான் உண்மை நிலவரத்தை கூறினாள். 
செல்வம் என்னும் கட்டிட தொழிலாளி தன்னை கட்டாயப்படுத்தி இந்த நிலைமைக்கு 
ஆளாக்கினார் என்றும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று 
மிரட்டி மிரட்டியே 2 ஆண்டுகளாகவே இப்படித்தான் பாலியல் பலாத்காரம் செய்து 
வந்ததாகவும் சிறுமி அழுதுகொண்டே தெரிவித்தாள்.
செல்வம் எஸ்கேப்
 இதையடுத்து சிறுமியின் தந்தை வள்ளியூர் மகளிர் போலீசில் புகார் 
அளித்துள்ளார். தன் மகளின் பாழாக்கிய செல்வத்தை கைது செய்ய வேண்டும் என்று 
அந்த புகாரில் கூறியுள்ளார். ஆனால் செல்வம் தற்போது எஸ்கேப். அதனால் அவரை 
தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- 
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
- 
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
- 
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
- 
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
- 
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
- 
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
- 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
- 
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
- 
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
- 
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
 

 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment