வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-11
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 20, 2018

டீன் ஏஜ் பெண்களுக்கு தேவையான உணவுகள்



டீன் ஏஜ் பெண்கள் `12 முதல் 20 வயது வரை உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. 

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவம் கடந்து  ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும்.


இத்தகைய சூழலில், அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறைசெலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. `12 முதல் 20 வயது வரை
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
உடலையும் எண்ணங்களையும் சரியாகக் கவனித்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்’ எனப் பெரியவர்கள் சொல்வதுண்டு. இது உண்மையும்கூட. `டீன் ஏஜ்’ பருவத்தில் உட்கொள்ளும்  உணவுகளைப் பொறுத்தே அவர்களது உடல் உறுப்புகள் வலிமையும் ஆரோக்கியமும் பெறும்.

“டீன் ஏஜ் பருவத்தினர் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய இரண்டு முக்கியக் கேள்விகள் இருக்கின்றன. `சரியான உணவைச் சாப்பிடுகிறோமா, அதைச் சரியான நேரத்தில் சாப்பிடுகிறோமா?’ என்பதே அந்தக் கேள்விகள். `டீன் ஏஜ்’ பருவம் என்பது உணர்ச்சிகளால் நிறைந்தது. அதனால், அவர்கள் எதையும் மிக எளிதாக எடுத்துக்கொள்வார்கள். அதே உணர்வுடன் உணவில் கட்டுப்பாடின்றி இருப்பது தவறு” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் வினோத்.

“பெண் குழந்தைகளில் பலர், 12 வயதைத் தொடங்கும்போதே பருவம் எய்திவிடுகின்றனர். அதனாலேயே, ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு உணவின் மீதான கவனிப்பு அதிகம் தேவைப்படுகிறது. `டீன் ஏஜ்’ பெண்களுக்கு என்னென்ன உணவுகள் தேவைப்படும் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


* கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை, உடலின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

*  உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது. குறைந்தபட்சம் தினம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும்.


*  உடலின் இரும்புச் சத்து தேவைக்கு கேழ்வரகு, கீரை, எள், மீன், முட்டைச் சாப்பிடலாம். இது `டீன் ஏஜ்’ பெண்களுக்கு, மாதவிடாய்க்கால சிக்கல்களைத் தீர்க்க உதவும். இல்லையென்றால், ரத்தச் சோகை, உயரம் அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சைவப் பிரியர்கள், உடலின் இரும்புச் சத்து தேவைக்கு பருப்பு வகைகள், நட்ஸ், விதைகளை உட்கொள்ளலாம்.

*  `டீன் ஏஜ்’ பருவத்தினர் பலரும் பால் சார்ந்த பொருள்களை ஒதுக்கிவிடுகின்றனர். பால், சீஸ், தயிர் போன்றவற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் சத்துகள் இதயத்தைப் பாதுகாக்கும்; தசைகளை வலிமையாக்கும்.


*  எண்ணெய் நிறைந்த உணவுப் பொருள்களை உட்கொள்வது, பருமனை ஏற்படுத்தும். டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் பருமனே நீர்க்கட்டி, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமையலாம். முடிந்தவரை எண்ணெய், நெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

*  தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
 
நேரத்துக்கு உணவு…


*  காலை உணவைத் தவிர்க்கவோ, நேரம் தவறிச் சாப்பிடவோ கூடாது. இத்தகைய பழக்கங்கள் ஆற்றல் உற்பத்தியைக் குறைக்கும் என்பதால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படக்கூடும். அத்துடன் ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.  உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து,  எடையை அதிகரிக்கவும் செய்யலாம்.

*  மதிய உணவைப் பொறுத்தவரை, பள்ளிக் குழந்தைகளிடையே நேர ஒழுக்கம் சரியாக இருக்கும். ஆனால், கல்லூரி மாணவர்கள் நேரம் தவறிச் சாப்பிடுகிறார்கள் அல்லது மிகவும் குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள், காலை உணவை 11 மணிக்கும் மதிய உணவை 4 மணிக்கும் சாப்பிடுகிறார்கள். இத்தகைய பழக்கங்கள், உடல் உறுப்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்சிதை மாற்றங்களையும், அது தொடர்பான வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.


*  ஒரு நாளைக்கான உணவை சிறிது சிறிதாக ஆறு முறை சாப்பிடுவது, சீரான அளவு மூன்று வேளை சாப்பிடுவது என இரண்டுமே சரியான உணவுப்பழக்கம்தான். ‘மூன்று வேளை உணவு’ என்ற கணக்கு, ஆறு என அதிகரிக்கலாமே தவிர குறையக் கூடாது. ஒருவேளை சாப்பிடவில்லை என்றாலும் வைட்டமின், கார்போஹைட்ரேட், தாதுச்சத்துகள் போன்ற உடலுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போகக்கூடும்.

* ஸ்நாக்ஸ் பிரியர்கள் சிப்ஸ், பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நட்ஸ், பழங்கள், உலர் பழங்கள், சிறுதானிய லட்டு போன்றவற்றை உட்கொள்ளலாம்.


* பெரும்பாலான கல்லூரி மாணவிகள், பஃப்ஸ் மற்றும் டீ, காபி வகைகளைப் பசி எடுக்கும்போது உட்கொள்வதுண்டு. இதில் டீ, காபிக்கு அடிமையாகவும் வாய்ப்புள்ளது. ஒருநாளில் இரண்டுமுறைக்கு மேல் டீ, காபி குடித்தால் ரத்த அழுத்தம் ஏற்படலாம் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்.

* பசி எடுத்தால், அலட்சியப் படுத்தாமல் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும். சரியான நேரத்தில் பசி எடுக்கவில்லை என்பதற்காக சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பசியின்மைக்கான காரணத்தை அறிந்து தீர்வு காண வேண்டும்.


* உணவைப் போலவே உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சி செய்வதால் ரத்தம் சுத்திகரிப்படுவதுடன் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்; மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும்  உதவும். குறிப்பாக காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

* எடை அதிகரிக்கும்போது, பி.எம்.ஐ அளவுபடி உயரமும் எடையும் சீராக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்வது நல்லது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

கஜா புயல்... சத்தமில்லாமல் உதவி செய்த விஜய்!



கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கணக்குகளில் பணம் செலுத்தி இருக்கிறார் நடிகர் விஜய். கடந்த 15ம் தேதி கேரதாண்டவாடிய கஜா புயலால், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களின் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை செய்துள்ளார். மதுரை, கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளின் கணக்குகளில் பணம் செலுத்தி, இந்த உதவிகளை செய்து வருகிறார்.


மதுரை மாவட்ட நிர்வாகிக்கு ரூ.2 லட்சம், கடலூர் ரூ.4.5 லட்சம், திருச்சி ரூ.1.5 லட்சம், தஞ்சாவூர் ரூ.2 லட்சம், நாகை ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ15 லட்சத்தை நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார் நடிகர் விஜய்.


விஜய்யின் இந்த நடவடிக்கை முதற்கட்டம் தான் என்றும் விரைவில் அடுத்தக்கட்ட நிவாரணப் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


புருஷனால் பெரிய இடைஞ்சல்.. தோசைக் கல்லால் அடித்தே கொன்ற ஐஸ்வர்யா!



"என் கள்ளக்காதலுக்கு என் புருஷன் இடைஞ்சலாவே இருந்தார்... அதான் தோசை கல்லால் அடிச்சே கொன்னுட்டேன்" என்று மனைவி போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

ஐஸ்வர்யாவுக்கு 38 வயதாகிறது. கிரானைட் ஃபேக்டரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த செல்வகுமார் ஒரு மாசத்துக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதியிலிருந்து
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
செல்வகுமாரை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் ஐஸ்வர்யாவிடம் வந்து தன் மகனை பற்றி கேட்டார்கள். எங்கோ வேலையாக போய் இருக்கிறார் என்று சாக்கு சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால் நேற்று முன்தினம் வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றிலிருந்து நாற்றம் அடித்தது.



கிணற்றில் சடலம் 
அதனால் சொந்தக்காரர்களும், அருகிலிருந்தவர்களும் கிணற்றுக்கு உள்ளே எட்டி பார்த்தால் செல்வகுமார் பிணமாக கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக கருப்பூர் போலீசாருக்கு தகவலை சொல்ல, அவர்கள் வந்து உடலை மீட்டனர். இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பிக்கும் முன்னரே, ஐஸ்வர்யா நேராக ஸ்டேஷனுக்கு வந்து சரணடைந்து விட்டார். அப்போது அவர் போலீசில் சொன்னதாவது:


பணம் வாங்கினேன்
 
எனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷமாச்சு. ஆனால் என் புருஷனுக்கு சரியான வருமானம் இல்லை. 2 பெண் குழந்தைகளை படிக்க வெக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். மாமனார், மாமியார் கிட்டதான் அடிக்கடி பணம் வாங்கி குடும்பத்தை ஓட்டி வந்தேன். சம்பளம் ரொம்ப கம்மியா இருப்பதால்,அந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போகுமாறு என் புருஷனிடம் சொன்னேன். அவரும் வேலை வேண்டாம் என எழுதி கொடுத்துவிட்டு வந்துவிட்டார். வேலைவிட்டு ஒரு மாசம் ஆகியும் எங்கியும் அவருக்கு வேலை கிடைக்கல. அந்த நேரத்தில்தான் டூ வீலர் மெக்கானிக் ரவி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.


இடைஞ்சலாக இருந்தார்
என் பிரச்சனை எல்லாம் அவருகிட்ட சொல்வேன், அவரும் எனக்கு ஆறுதல் சொல்வார், கொஞ்ச நாளில் அது கள்ளக்காதலாக போய்விட்டது. நிறைய நேரம் போனில் அவருகிட்ட பேசினேன். இதை பார்த்துட்டு என் புருஷன் கண்டித்தார். அவன் சரியில்லை, அவன்கூட சேராதே, பேசாதே என்று சொன்னார். ஆனால் நான்தான் கேக்கலை. இந்த கோபத்துல என் புருஷனுக்கு வீட்டில் சரியாக சமைத்து சாப்பாடு கூட போடாமல் பட்டினி போட்டேன். இதனாலும் சண்டை அதிகமானது. அதனால கொன்னுட்டா எந்த தொல்லையும் வராதுன்னு நினைச்சு முடிவு பண்ணேன்.

தோசைக்கல் 
இதை போய் ரவி கிட்ட சொன்னேன். அவரும் சரின்னு சொல்லி, அதுக்கு பிளான் பண்ணினோம். வழக்கம்போல சண்டை வீட்டில் ஆரம்பித்தது. அப்போ ரவியும் சொன்ன மாதிரி வந்துட்டார். தோசை சுடும் இரும்பு சட்டியை எடுத்து வந்த என் புருஷனின் தலையில் தலையில் ஓங்கி அடித்தோம். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. உயிருக்கு போராடினார். அப்படியே தூக்கி கொண்டு போய் வீட்டு பக்கத்துல இருந்த கிணத்துல போட்டுட்டு வந்துட்டோம்.


டிராமா பண்ணினேன் 
அப்புறம் தண்ணியில முக்கியே அவர் துடிதுடிச்சு செத்து போயிட்டார். எதுவும் தெரியாமல் வீட்டுக்குள் வந்து கமுக்கமா உட்கார்ந்துட்டேன். புருஷனை காணோம் என்று போலியா ஒரு புகாரும் தந்து டிராமா பண்ணினேன்" இவ்வாறு அவர் கூறினார். இந்த வாக்குமூலத்தை அடுத்து தலைமறைவாகி இருந்த ரவியையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். தற்போது இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


உங்கள் கை ரேகைகள் உங்கள் எதிர்காலம் பற்றி என்ன கூறுகிறது?



நாடி ஜோதிடம் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்டு பின் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதன் மீது ஆர்வத்தை வளர்த்து கையில் உள்ள கோடுகளை கொண்டு ஒருவருடைய வாழ்க்கையை கணிக்கும் முறையை வகுத்தார்கள். நாடி ஜோதிடத்தில் ஒருவவரின் கைரேகைக்கு ஏற்ப அவருடைய கடந்த மற்றும் எதிர்காலங்கள் அனைத்தும் அவர் கைகளில் எழுதப்பட்டிருக்கும். ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது.

உங்கள் கைகளில் உள்ள வரிகளை படித்தாலே உங்களின் எதிர்காலத்தையும் இந்த பிறவியில் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பதையும்
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கண்டுபிடித்து விடலாம். உங்கள் கைகளில் உள்ள உங்களின் எதிர்காலத்தை படிக்க இயலாதவர்களுக்கு அதனை எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்புகளுடன் நாங்கள் வந்துள்ளோம்.


முதலில் செய்ய வேண்டியது 
உங்களுடைய எதிர்காலத்தை அறிந்துகொள்ள கைரேகைகளை படிக்க கற்றுக்கொள்வதற்கு முன் நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் வேலை தொடர்பான வாழ்க்கை, உங்களை உலகிற்கு காண்பிக்கும் ரேகைகளை உள்ள சரியான கையை தேர்வு செய்ய வேண்டியதுதான். மற்றொரு காய் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், உறவுகளையும் குறிப்பதாக இருக்கும்.

குறிப்பு 
கைரேகை பார்ப்பதில் நம் அனைவருக்கும் நம்பிக்கை இருந்தாலும் இது அனைவருக்கும் முழுமையாக உண்மையாக இருக்காது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். நம் கையில் உள்ள கோடுகள் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். எனவே அடிக்கடி உங்கள் கையில் உள்ள கோடுகளை படிக்க வேண்டியது அவசியமாகும்.


ஆயுள் ரேகை 
ஆயுள் ரேகை உங்களுடைய உணர்வு மற்றும் உடல் வலிமையை குறிக்கிறது. ஒருவேளை உங்கள் ஆயுள் ரேகை நீளமாக இருந்தால் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று அர்த்தமல்ல. மாறாக இது உங்களின் ஆரோக்கியம் மற்றும் நீங்கள் வாழும் சூழ்நிலையின் மாற்றத்தை குறிக்கும். இது பொதுவாக உங்கள் கையின் கீழ் பகுதியில் தொடங்கி குறியீட்டு விரல் மற்றும் உங்கள் மணிக்கட்டை நோக்கி இருக்கும்.

ஆயுள் ரேகை திடமாக இருந்தால்
ஒருவேளை உங்கள் ஆயுள்ரேகை தடிமனாகவும், திடமாகவும் இருந்தால் நீங்கள் வலிமையானவராக இருப்பீர்கள், அதேசமயம் எப்பொழுதாவதுதான் நோய் உங்களை தாக்கும். அதேநேரம் உங்களுடைய நோயெதிர்ப்பு திறன் மிக அதிகமாக இருக்கும்.


ஆயுள்ரேகை பலவீனமாக அல்லது உடைந்து இருந்தால் உங்கள் ஆயுள்ரேகை உடைந்து இருந்தால் 
 இந்த சமூகத்தால் அதிக மனஅழுத்தத்தை அனுபவிப்பவராக இருப்பீர்கள். அதேசமயம் உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளும் நிறைய இருக்கும்.

கல்யாண ரேகை பிரிந்திருந்தால்
 இவ்வாறு இருப்பின் உங்களுக்கு விவாகரத்து நடக்க பல வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் பல தோல்விகளை சந்திப்பீர்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஊருக்கு போன பொண்டாட்டியை காணோமே.. என்னாது நான் 5-வது புருஷனா.. ஒரு அதிர்ச்சி கதை



5-வதாக வாக்கப்பட்டுட்டு ஏமாந்து நின்ற இளைஞரின் சம்பவம் இது!

ஆந்திர மாவட்டத்தில் கொம்மலுறு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ராமகிருஷ்ணாவிற்கும் கித்தலூரை சேர்ந்த ஆனந்த் ரெட்டி மகள் மோனிகாவுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்தது.

கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே பெண்ணின் அப்பா, மாப்பிள்ளையிடம், "மகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா" என்று கேட்டார். மகளை பிரிந்த பாசத்தில் அப்பா இப்படி கேட்கிறார் என நினைத்து மாப்பிள்ளையும் மோனிகாவை அவர் அப்பாவுடன் அனுப்பி வைத்தார்.


பொண்டாட்டியை காணோம் 
ஆனால் போன பொண்டாட்டியை ரொம்ப நாள் ஆகியும் காணோம். கூட்டிட்டு போன மாமனார் கிட்ட இருந்தும் எந்த தகவலும் வரவில்லை. 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதனால் நேரிலேயே போய் என்ன ஏதென்னு பாத்துட்டு வந்துடலாம்னு மாப்பிள்ளை கிளம்பி வந்தார்.

போலீசில் புகார் 
அங்கு வந்து பார்த்தால் வீட்டை மட்டும் இல்லை... ஊரையே காலி செய்துவிட்டு 2 பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை காஜிப்பேட்டை ஸ்டேஷனில் ஒரு புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.


7 கல்யாணம்
அப்போதுதான் மோனிகாவின் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக தெரியவந்தது. மோனிகா ஏற்கனவே திருணமானவர் என்பதும் இதுவரை 7 கல்யாணம் மோனிகா செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதில் ராமகிருஷ்ணா 5-வதாக வாக்கப்பட்டவர். ராமகிருஷ்ணாவுக்கு அப்புறம் 2 பேர். அதாவது 6 மாசத்திலேயே மோனிகாவுக்கு 3 கல்யாணம் ஆயிருக்கு.

மோனிகா கைது
 6-வது புருஷன் விசாகப்பட்டினம், 7-வது புருஷன் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் போலீசார் அடுத்தடுத்து விசாரணையில வேகவேகமாக இறங்கினார்கள். மோனிகாவின் செல்போனை வைத்து ஒருவழியாக ஹைதரபாத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


நகை, பணம்
அவரிடம் விசாரித்தபோது, "நல்லா வசதி படைத்த ஆண்கள் மேல் ஒரு கண்ணு எனக்கு எப்பவுமே இருக்கும். அவங்களை கரெக்டா குறி வெப்பேன். நெருங்கி போய் ஆசை ஆசையா பேசுவேன். அவங்களும் என்கிட்ட கல்யாணம் வரை வந்துடுவாங்க. கல்யாணம் ஆன உடனேயே நகை, பணம்னு கொஞ்சம் கொஞ்சமா கறக்க ஆரம்பிப்பேன். ஓரளவுக்கு தேறினதும் ஏதாவது சாக்கு சொல்லி வம்படியா ஒரு சண்டையை போட்டுட்டு அங்கிருந்து பிரிஞ்சு வந்துடுவேன்" என்றார்.

காதலன் உள்ளார்
இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் மோனிகாவின் இன்னொரு செயலை கேட்டதும் ரொம்பவே ஆடிப்போய்விட்டனர். அதாவது மோனிகாவுக்கு ஒரு காதலன் இருக்கிறாராம். இவர் லிஸ்ட்டிலேயே இல்லாதவர். ஏனென்றால் இவரைதான் மோனிகா உண்மையாக அப்போதிலிருந்தே லவ் பண்ணி வருகிறாராம். யாரையெல்லாம் கல்யாணம் பண்ணி ஏமாத்தி, பணம், நகை பிடுங்கிட்டு மோனிகா எஸ்கேப் ஆகி வருகிறாரோ, அதையெல்லாம் கொண்டு வந்து கொடுப்பது இந்த லவ்வர்கிட்டதானாம்.


தொடர் விசாரணை 
இதற்கு பெத்த தகப்பனும் உடந்தை. மோனிகா போலீசில் சிக்கியதுமே காதலனும், தந்தையும் எஸ்கேப். ஆனால் போலீசார் விடவில்லையே... ஊரெல்லாம் தேடி அலச ஆரம்பித்தனர். கடைசியில் இப்படி ஒரு கேடு கெட்ட குடும்பத்தை கைது செய்து விட்டனர். இந்த தகவல்களை எல்லாம் ஆந்திராவின் காஜிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமுடு தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts