வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லையா? களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, February 04, 2019

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லையா? களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...!

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





பையோமெட்ரிக் வருகை, ஸ்மார்ட் வகுப்புகள் என நீளும் இந்த பட்டியலில் புதிதாக ரோபோட் டீச்சர்களும் இணைந்துள்ளது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தமிழகத்தில் பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


அதிரடி அறிவிப்பு  

இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்விக் கூடங்களில் கணினி மயமாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையினையும் அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


ஜேக்டோ ஜியோ  

ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பயோமெட்ரிக் பதிவு  

பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ரோபோ டீச்சர்  

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment