வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-01-27
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, February 04, 2019

சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே கூறுபோட்டு தின்னும் மர்ம நபர்..

நெல்லை மாவட்டத்தில் சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே வெட்டி கூறுபோட்டு தின்னும் மர்ம நபரை அப்பகுதியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.





நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகிலுள்ளது டி.ராமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கனகசபாபதியின் மகன் முருகேஷன் (43).
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். முருகேஷனுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கம் உண்டாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மனைவி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர் தின்று செல்வதாக தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.



தகனம்

இந்த நிலையில் கிராமத்து மக்களிடையே பெரும் பீதியும்,பரபரப்பும் உருவானது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். அவரை உறவினர்கள் சுடுகாட்டில் தகனம் செய்து விட்டு திரும்பி உள்ளனர்.



மூதாட்டியின் உடல்  

இதனை தொடர்ந்து இறந்து போனவர்களின் உடலை சாப்பிடும் மர்ம நபர் யார் என தெரிய வேண்டும் என நினைத்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சம்பவத்தன்று இரவு சுடுகாட்டுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் காத்திருந்த வேளையில் பிணம் எரிந்து கொண்டிருந்த போது அங்கு கையில் அரிவாளோடு வந்த முருகேசன் எரிந்து கொண்டிருந்த மூதாட்டியின் சடலத்தை கம்பால் விலக்கி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.


விசாரணை  

இதனைக்கண்ட மறைந்திருந்தவர்கள் குரல் எழுப்பி கற்களால் எரிந்துள்ளனர். பின்னர் அவர் ஓடியதாகவும் கூறுகின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் இது குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீஸார் மனித மாமிசம் சாப்பிட்ட முருகேசனை பிடித்து விசாரணை செய்தனர்.


மனநல மருத்துவமனை

அவரிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியாத நிலையில் ஊர்மக்களின் நிதி உதவியோடு தனியார் வாடகை வாகனத்தில் வாசுதேவநல்லூரில் இருந்து சென்னை கீழ்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு போலீஸார் பாதுகாப்போடு அனுப்பி வைத்துள்ளனர்.

தோழியிடம் வம்பிழுத்தவனை அடிச்சு மூஞ்சியை உடைத்த காஜல் அகர்வால்

தோழியிடம் சில்மிஷம் செய்தவனை முகம் வீங்கும் அளவிற்கு அடித்துள்ளார் காஜல் அகர்வால். 


ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமானது என்று அவர் தெரிவித்துள்ளார். காஜலை பார்த்தால் சாதுவாக தெரிகிறார் அல்லவா, ஆனால் நிஜத்தில் கோபம் வந்தால் காளியாக மாறிவிடுவாராம். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,


தமிழ்  


நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வட நாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் அடியாகிவிடுமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.


காதல் 

தற்போதைக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை. எனக்கு பிடித்தவரை பார்த்தால் காதலித்து மணப்பேன். இல்லை என்றால் பெற்றோர் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்வேன். இதுவரை நல்ல நல்ல படங்களில் நடித்திருக்கிறேன்.


தாக்குதல்  

நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன்.


படுக்கை  

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்கிறார் காஜல் அகர்வால்.


இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லையா? களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...!

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





பையோமெட்ரிக் வருகை, ஸ்மார்ட் வகுப்புகள் என நீளும் இந்த பட்டியலில் புதிதாக ரோபோட் டீச்சர்களும் இணைந்துள்ளது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தமிழகத்தில் பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


அதிரடி அறிவிப்பு  

இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்விக் கூடங்களில் கணினி மயமாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையினையும் அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


ஜேக்டோ ஜியோ  

ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பயோமெட்ரிக் பதிவு  

பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ரோபோ டீச்சர்  

பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Sunday, February 03, 2019

‘பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து 11 வயது சிறுவன்!

பிரபலமான பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு செல்போன் கேம் டிரெண்டிங்கில் இருக்கும். அந்தவகையில் பிரதமரே தனது பேச்சில் குறிப்பிடும் அளவிற்கு பப்ஜி கேம் தற்போது நமது நாட்டில் டிரெண்டிங்காக இருக்கிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வயது வித்தியாசம் இல்லாமல் இதை விளையாடி வருகின்றனர். பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி எப்போதும் இதனை விளையாடியபடியே இருக்கின்றனர். இதனால் இந்த விளையாட்டானது பொழுதுபோக்காக இல்லாமல், பொழுதை பாழடிப்பதாக அமைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த விளையாட்டிற்காக அதிக நேரம் செல்போனிலேயே செலவழிக்கின்றனர்.


பள்ளிச் சிறுவன்:  

இந்நிலையில், இந்த விளையாட்டைத் தடை செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுவன் அஹத் நிசாம், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளான். தனது தாயின் உதவியுடன் அஹத் இந்த வழக்கைத் தொடுத்துள்ளான்.


தடை கோரி வழக்கு:  

அந்த மனுவில், ‘பப்ஜி விளையாட்டை, தான் சில நாள்கள் விளையாடியதாகவும், அதிலிருந்து தனக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்ததாகவும், மேலும் அதில் கொலை போன்ற வன்முறைகள் அதிகமாக இருப்பதாலும் இந்த கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.


ஆணையம் தேவை:  

மேலும் ஆன்லைன் நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் தனது மனுவில் அஹத் தெரிவித்துள்ளான்.


குஜராத்:

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரிலும் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தேசிய குழந்தைகள் ஆணையத்தில் மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டனில் அசத்தும் விஜய் மகள்

விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார். 


தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக திட்டமிட்டுள்ளாராம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஷங்கர் இயக்கத்தில் ஜேசன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஜேசனின் தங்கை திவ்யா சாஷாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபாடு அதிகம். அவர் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.


சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார் அவர். பள்ளியின் பேட்மிண்டன் அணியில் திவ்யாவும் உள்ளார். பேட்மிண்டன் அணியின் புகைப்படங்களை அந்த பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் திவ்யா உள்ளார். அந்த குழு அண்மையில் நடந்த போட்டி ஒன்றில் 3வது இடம் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்.. ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு மாலி. இவர் படாஸ் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பாபுவின் ஐந்து மாத குழந்தை, எப்போதும் வாயில் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தது. இதனை நிறுத்துவதற்காக, பாபுவின் மனைவி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது சிலர், உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் வைத்தால் ஜொள்ளுவிடுவதை நிறுத்திவிடும் என ஆலோசனை கூறியுள்ளனர். 
இதையடுத்து, ஒரு உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் பாபுவின் மனைவி வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மீன் குழுந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீன் வெளியே எடுக்கப்பட்டது. அக்கம்பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தாய் செயல்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Saturday, February 02, 2019

ஆதார் கார்டில் தெளிவாக இல்லாத புகைப்படத்தை மாற்றுவதற்கு புதிய ஏற்பாடு: உள்ளே லிங்க்.!

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தில் பயனர்களின் முகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நமது ஆதார் கார்டுகளை பயன்படுத்த முடிவதில்லை. 


அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் அடையாள அட்டைகளைப் பயணிக்கும் சூழ்நிலையே இங்கு உருவாகி இருந்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


புகைப்படத்தை மாற்ற அனுமதி  

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கமும் ஒரு தீர்வை வழங்க முடிவு செய்து, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற பயனர்களுக்கு அனுமதியும் வழங்கியிருந்தது. அதன்படி உங்கள் ஆதார் அட்டையில் உள்ள ஆதார் புகைப்படத்தை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.


ஆன்லைன் சேவை  

உங்களின் ஆதார் புகைப்படத்தை மாற்ற எவ்வித ஆன்லைன் சேவைக்கும் இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதே உண்மை. ஆன்லைன் இல் புகைப்படத்தை மாற்றுவது பாதுகாப்பானதல்ல என்ற காரணத்தினால் அரசாங்கம் ஆன்லைன் சேவையை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஃப்லைன் முறை  

உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை பயனர்கள் இரண்டு முறையில் மாற்றிக்கொள்ளலாம், இவ்விரண்டு முறைகளுமே ஆஃப்லைன் முறைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் பாதுகாப்பு கருதி அரசாங்கம் ஆஃப்லைன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.


முழு விபரங்களுடன் கடிதம்  

ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றப் பதிவு மையத்தை நீங்கள் நாடவேண்டும் அல்லது உங்கள் ஆதார் அட்டைப் புதுப்பிக்கப்பட்ட புகைப்படம் பெற UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுத வேண்டும்.


செயல்முறை 1: 

ஆதார் அப்டேட் படிவத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கரெக்ஷன் படிவத்தைச் சரியாக நிரப்பி UIDAI-க்கு முழு விபரங்களுடன் கடிதம் எழுதி அனுப்பினால் இரண்டு வாரங்களுக்குள் உங்களின் புதிய ஆதார் கார்டு வீடு வந்து சேரும்.


செயல்முறை 2: 

அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் சென்று, உங்களின் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற நேரடியாகப் புகார் அளிக்கலாம். இரண்டு வாரங்களுக்குள் புகைப்படம் மாற்றப்பட்ட புது ஆதார் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்து புதிய கார்டு வழங்குவதற்கு ரூ.15 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதார்  

ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்த கவலையில் இருந்தவர்களுக்கு தீர்வளிக்கும் விதமாக சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பில் வங்கி கணக்குகள், மொபைல் நம்பர்கள் மற்றும் பள்ளி மாணவர் சேர்க்கை போன்றவற்றிற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் வாலெட்  

இதனால் வங்கி கணக்கு திறக்கும் போது, புதிய மொபைல் இணைப்பு பெறும் போது, அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சேவைகளை தொடர்வதற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய கட்டாயம் நீங்கியிருக்கிறது. ஆதார் தீர்ப்பை தொடர்ந்து பலரும் தங்களது ஆதார் நம்பரை அவரவர் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலெட் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து டீலின்க் செய்ய ஆர்வம் செலுத்துகின்றனர்.


பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள்:  

வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதார் நம்பரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள் அறியப்படாத நிலையில், பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். எனினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதாரை டீலின்க் செய்ய நினைப்போர் அருகாமையில் உள்ள அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.


வழிமுறை 1:

பேடிஎம் வாடிக்கையாளர் சேவை மைய எண் @ 01204456456 அழைக்க வேண்டும். 
வழிமுறை 2:  

ஆதாரை அன்-லின்க் செய்வதற்கான கோரிக்கையை விடுக்க வேண்டும்.


வழிமுறை 3:

இனி உங்களது ஆதார் கார்டின் தெளிவான புகைப்படத்தை இணைக்கக் கோரும் மின்னஞ்சல் உங்களுக்கு வரும். இந்த மின்னஞ்சலில், "Dear Customer, in order to process your request, we need you to send us a clear picture of your updated Aadhaar card for validation purpose. Request you to share the same with us." என குறிப்பிடப்பட்டு இருக்கும்.

வழிமுறை 4:  

மின்னஞ்சலுக்கு பதில் எழுதி, உங்களின் ஆதார் கார்டு தெளிவான புகைப்படத்தை இணைக்க வேண்டும்.


வழிமுறை 5:  

பேடிஎம்மில் இருந்து உங்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் வரும், இதில் உங்களது ஆதார் விவரங்கள் 72 மணி நேரத்திற்குள் டீலின்க் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கும். 

வழிமுறை 6:  

தெரிவிக்கப்பட்ட கால அளவு நிறைவுற்றதும், உங்களது ஆதார் டீலின்க் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


ஆதார் கார்டு விவரங்கள் டீலின்க் 

இது கவலை அளிக்கிறது! மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை கொண்டு எளிமையாக செய்துவிட முடியும் என்றாலும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பொது மக்கள் தங்களது ஆதார் விவரங்களை அவரவர் வங்கி கணக்குகள், டிஜிட்டல் வாலெட்கள் மற்றும் இதர சேவைகளில் இருந்து டீலின்க் செய்ய விரும்புகின்றனர். மேலும் டீலின்க் செய்ய, பேடிஎம் பயனர்களின் ஆதார் கார்டு புகைப்படத்தை அனுப்பக் கோருகிறது. இதனால் பயனருக்கு சங்கடமான சூழல் ஏற்படுகிறது. எனினும் பேடிஎம் கணக்கில் இருந்து ஆதார் கார்டு விவரங்களை டீலின்க் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

பிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா? இங்க கிளிக் பண்ணுங்க

எண்கணிதம் மற்றும் முன் ஜென்மம் ஆகிய இரண்டிற்கும் எதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆம், இரண்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. 

ஆம், உங்கள் வாழ்க்கையில் ஒரு எண் தொடர்ந்து உங்கள் செயல்பாடுகளில் வந்தவண்ணம் இருந்தால், அந்த எண் உங்களுக்கு முந்தைய ஜென்ம பாடங்களைக் கற்றுக் கொடுக்க உதவுகிறது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


முன் ஜென்மம்  

முன் ஜென்ம பிறப்பு எண்கள் பற்றி அறிந்து கொள்வதால் இதுவரை உங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பற்றி உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது தவிர வாழ்வின் மற்ற உண்மைகளைக் கூட அறிந்து கொள்ள முடியும். நீங்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள், என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது எண்கணிதம். இதனால் முன்ஜென்மத்தில் இருந்து நீங்கள் இந்த ஜென்மத்திற்கு கொண்டுவந்துள்ள விசேஷ குணம் மற்றும் பாடங்கள் பற்றி ஒரு சுருக்கமான செய்தியை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.


எண் 1

எண்கணித கணிப்புகளில் எண் 1 இடம்பெற்றிருந்தால் , நீங்கள் உங்கள் ஆன்மாவைப் பட்டினி போட்டிருப்பது தெரிய வரும். உங்களைத் தியாகம் செய்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை அனுபவிக்க அல்லது உணர ஒருபோதும் நீங்கள் அனுமதிக்கவில்லை. உங்கள் முன்ஜென்மத்தில் சுய மரியாதை மற்றும் சுய மதிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்திருக்கும். இந்த ஜென்மத்தில் இவற்றை முழுமையாக பெற சரியான நேரம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆழ் மனது அமைதியை நீங்கள் இந்த ஜென்மத்தில் உணர்ந்து பாருங்கள். உங்களுக்குள் ஒரு முழுமையை உணர மற்றவர்களிடம் அனுமதி கேட்காதீர்கள்.


எண் 2  

முன்ஜென்மத்தில் பொருள் தேடி அலையும் நிலை தான் உங்களுக்கு இருந்திருக்கும். உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சம்பாதிக்க போராட வேண்டி இருந்திருக்கும். பணத்தை தேடி ஓடிகொண்டே இருந்திருப்பீர்கள். என்ன நடந்திருந்தாலும் உங்கள் ஆன்மா பசியோடு இருந்திருக்கும். இந்த கர்ம வினை உங்களுக்கு உணர்த்த விரும்பும் பாடம் என்னவென்றால், இந்த உலகில் பொருள் என்பது எல்லாம் அல்ல, அதைத் தாண்டி சில விஷயங்கள் இந்த உலகில் உள்ளது என்ற கருத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு நீங்கள் முழுமை பெற்றதாய் உணர்வதை நிறுத்துங்கள், உங்கள் செயல்களால் நீங்கள் முழுமை பெறுகிறீர்கள் என்பதை இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ளுங்கள்.


எண் 3  

உங்கள் முன்ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தின் ஆரம்ப நிலைகளில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தீர்கள் என்று உங்களால் கூற முடியாது. உங்கள் மனதில் உள்ள கருத்துகளை உங்களால் சரியாக வெளியில் சொல்ல முடியாது. எப்போதும் ஒரு அசௌகரிய மனநிலை, தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், சுய மதிப்பு குறைபாடு ஆகியவற்றுடன் இருப்பீர்கள். ஒருவித அடக்குமுறை காரணமாக உங்கள் தனித்தன்மையை வெளிபடுத்தும் வாய்ப்பு சிறிதளவு கூட இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த ஜென்மத்தில் உங்களுக்கான பாடம், நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்களை முழுவதும் வெளிபடுத்துவது என்பதாகும் . வாய் திறந்து பேசுவதால் உண்டாகும் நன்மைகள் இப்போது உங்களுக்கு புரிய தொடங்கும்.


எண் 4  

பாரம்பரியம், குடும்பம், வீடு என்று வரும்போது ஒரு சந்தோசம் இல்லாத சூழ்நிலை உங்கள் முன்ஜென்மத்தில் இருந்திருக்கும். எண்கணிதம் மற்றும் முன்ஜென்ம நிலைகளை ஆராயும்போது, 4ம் எண்ணைக் கொண்டவர்கள் அனாதையாக , கைவிடப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். சின்ன சின்ன சந்தோஷங்களும் தடை செய்யப்பட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எதற்காகவும் உங்கள் மனதைரியத்தை இழக்க வேண்டாம், இந்த வாழ்க்கையில் நீங்கள் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுக்கலாம். அன்பு செய்ய கற்றுக் கொள்ளலாம். அன்பு, ஆதரவு, கருணை, இரக்கம் ஆகியவற்றுடன் நீங்கள் ஆதரவாக இருக்கலாம். உங்களுக்கும் இந்த இன்பம் கிடைக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் இந்த சந்தோஷத்தை பகிர்ந்தளிக்கலாம்.


எண் 5  

முன்ஜென்மத்தில் மற்றவரிடம் இருந்து நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்கான வழிகள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் நீங்கள் சுயநலவாதியாகவும் தேவைகேற்ப செயல்படும் ஆளாகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு வேண்டியதை செய்ய முடியாதவர்களை நீங்கள் மதிப்பதில்லை. இந்த முறை, மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் அவர்களை மதிப்பீடு செய்யாமல், அவர்கள் யார் என்ற நோக்கத்தில் மதிப்பீடு செய்வது நல்லது. உங்கள் சொந்த நம்பகத் தன்மை மற்றும் உறுதிப்பாட்டைக் கண்டறிவதற்கு போதுமான அளவுக்கு உங்களை மதிக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.


எண் 6

கடந்த காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருந்திருக்காது. வாழ்க்கை முழுவதும் உடல்நலக் குறைபாடு, மனநிலையில் மாற்றம், உணர்வுரீதியான தொந்தரவு ஆகியவை இருந்திருக்கும். எதிலும் ஈடுபாடு இருக்காது. உங்கள் குடும்பதில் உள்ளவர்களுக்கு உங்கள் மேல் அக்கறை செலுத்துவது கடினமாக இருப்பதால் நீங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருப்பீர்கள். நீங்கள் அன்புக்காக ஏங்குவீர்கள். இந்த ஜென்மத்தில் எல்லா விதத்திலும் ஒரு சமநிலை உண்டாக, ஒரு அனுபவப்பெற்ற வளர்ச்சி மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர வேண்டும். உங்கள் உடல், மனம், ஆன்மீகம், உணர்வு ஆகியவற்றை சார்ந்த தேவைகளைக் குறித்து கவனம் செலுத்துங்கள். இதனை செய்யவில்லை என்றால், சுய நாசம் அல்லது போதைக்கு அடிமையாவது போன்ற நிலை உண்டாகும்.


எண் 7 

நீங்கள் ஒரு போட்டி மனநிலையில் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த ஜென்மம் தேவையே இல்லை. ஆனால் இப்போது இந்த ஜென்மத்தில் வாழ்வில் ஒன்றோடொன்று இணையும் தன்மையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கருணை மற்றும் புரிதலை விதைக்க வேண்டும். மற்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். முன்ஜென்மத்தில் மற்றவர்களுடன் இணைவதில் உங்களுக்கு பெரிய போராட்டம் இருந்திருக்கும், நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தீர்கள்; சூழ்நிலைகளால் இந்த நிலை உந்தப்பட்டிருக்கலாம், அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவாகவும் இருக்கலாம்.


எண் 8  

உங்கள் எண் கணிப்பு அறிக்கையில் இந்த எண் தோன்றுகையில், கடந்த காலத்தில் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழித்தீர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்த நிலை உங்கள் முன்ஜென்மத்தில் மட்டுமில்லாமல் இந்த ஜென்மத்தின் கடந்த காலத்தில் கூட இருக்கலாம். உண்மை என்ன என்று பார்ப்பதை விட நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பார்க்கும் தன்மை உடையவராக இருக்கிறீர்கள். எதையும் சாதிப்பதற்கு நீங்கள் உந்தப்படவில்லை. மாறாக நீங்களே நகர்ந்து செல்கிறீர்கள். உங்கள் இருப்பு பற்றிய உண்மையை அறிந்து கொள்ள கடுமையாக முயற்சியுங்கள், நீங்கள் வாழ்வதன் நோக்கத்தைக் கண்டு பிடியுங்கள். கற்பனை மாயைக்கு சரண் அடையாதீர்கள். இதுவே இந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
எண் 9

உங்கள் முன்ஜென்மத்தில் உங்களுக்கு நடந்த நல்லவற்றை ஆராய்ந்து அறிவது மிகவும் கடினம், ஏனென்றால் உங்களை கீழே விழச் செய்த விஷயங்கள் ஏராளம். ஒருவேளை நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கலாம்,, அழுக்கால் சூழப்பட்டிருக்கலாம் , அல்லது உலகம் முழுவதும் போர், மரணம், அநாகரீகம் நிறைந்த ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கலாம். வாழ்வதற்கு ஏற்ற நிலை இதுவல்ல என்று உங்கள் ஆன்மா உணர்ந்திருக்கிறது. உங்களைச் சுற்றி இருந்தவற்றை நீங்கள் வெறுத்தீர்கள். அழகு, சந்தோசம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க இந்த ஜென்மம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. எல்லா சூழ்நிலையிலும் நேர்மறை நிலையை எப்படி அடைவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.


எண் 11 

எண்கணிதம் மற்றும் கடந்த காலம் பற்றி அறிந்து கொள்ளும் சோதனையில் 11 மற்றும் 22 ஆகிய எண்கள் சிறப்பானவை. உங்கள் முன்ஜென்மத்தில் மிகவும் வசதியாக இருந்தீர்கள். இது உங்களுக்கு மனநிறைவையும் கொடுத்தது. வெற்றியின் உயரத்தையும் தோல்வியின் ஆழத்தையும் நீங்கள் உணர்ந்திருக்கவில்லை. நீங்கள் மிகவும் அடக்கமாக இருந்தீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. உங்கள் ஆன்மாவின் குரலை நீங்கள் கேட்கவில்லை. அந்த குரல் வளர்ந்து வளர்ந்து ஜென்மம் முழுவதும் தொடர்ந்து , ஒரு வாய்ப்பிற்காக இன்று அறியப்படாத ஒரு செயலில் இப்போது இறங்கும் நிலையில் உள்ளீர்கள். சாதனையின் உண்மையான உணர்வை நீங்கள் பெறுவதற்கு உங்கள் வசதி மற்றும் தன்னிறைவை அடமானம் வைக்கலாம்


எண் 22  

நீங்கள் எப்போதும் திறமை உள்ளவராக இருந்திருக்கிறீர்கள், ஆனால் அதனை பகிர்ந்ததில்லை. ஒருவேளை அது உங்களால் முடியாமல் இருந்திருக்கலாம், அல்லது உங்கள் பெருமையை பறைசாற்றிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். உங்கள் தனித்தன்மையை கொண்டாடுவதற்கு பதிலாக அந்த தன்மைக்குள் உங்களை பொருத்திக் கொண்டு வாழ்ந்திருக்கலாம்.


ஆழ்மனம் 

இந்த ஜென்மத்திற்கான உங்கள் பாடம், உங்கள் படைப்பாற்றலை ஜொலிக்க வையுங்கள், நிழலில் ஒளிந்து கொள்ளாமல் நிஜத்தில் மிளிர்ந்திடுங்கள். மற்றவர் யாராலும் செய்ய முடியாத செயல்களை செய்யும் திறமை உங்களுக்கு உண்டு. உங்கள் மனதின் விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்தால், சந்தோஷத்தின் உச்சிக்கும், வெற்றியின் எல்லைக்கும் நீங்கள் சென்று வரலாம். இந்த ஜென்மத்தில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பற்றி புரிந்து கொள்வதற்கு முன் ஜென்மத்து பிறப்பு எண்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. கடந்த ஜென்மத்தில் இருந்து நீங்கள் கொண்டு வந்த கர்மம் மற்றும் ஆற்றல் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது இந்த ஜென்மத்தை கையாள்வதில் ஒரு ஆழ்ந்த நுண்ணறிவை வழங்குகிறது.



முடிவுரை  

உங்கள் வாழ்க்கை பாதை எண், உங்கள் கடந்த கால வாழ்க்கை கணக்கீடு உங்கள் விதியை மற்றும் உங்கள் பாதையை தீர்மானிக்க உதவுகிறது, இதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையை இன்னும் சீராக செலுத்த முடியும்.