வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-02-03
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, February 10, 2019

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம், முள்ளிகொளத்தூரில் தி. மு. க. சார்பில் கிராமசபை கூட்டம்




காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகொளத்தூர் கிராமசபை கூட்டத்திற்கு வருகை புரிந்த காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் 
திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், கிராம பொதுமக்களிடையே உரையாற்றி குறைகளை கேட்டறிந்தார்.



மேலும்  முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்.திரு.V.தமிழ்மணி, முள்ளிகொளத்தூர் கிராம தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் திரு. R.K.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.







Thursday, February 07, 2019

இனி ஹெல்மெட் அணிந்து தான் பேட்டி...

பாஜக தலைவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் செய்தியாளர்கள் ஹெல்மெட் அணிந்து பேட்டி எடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் சுமண் பாண்டே என்ற உள்ளூர் செய்தியாளர், நான்கு பாஜக பிரமுகர்களால் மோசமாக தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் ராஜீவ் அகர்வால் மற்றும் 3 பாஜக பிரமுகர்களை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்நிலையில், புதன்கிழமை அன்று செய்தியாளர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பாஜக தலைவர்களிடம் பேட்டி எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.


தலைகவசம்  

இது தொடர்பாக ராய்பூர் பிரஸ் கிளப் தலைவர் டாமு அமேதரே கூறுகையில், எங்கு நிகழ்ச்சிகள் நடந்தாலும், செய்தியாளர் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தாலும், யாரையாவது சந்தித்து பேட்டி எடுத்தாலும், எங்களை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க ஹெல்மெட் அணிந்துள்ளோம்
என்றார்.


பாஜக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் 

பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து 600 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் ராய்பூரில் பேரணியாக வந்தனர். தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு குவிந்த பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இரண்டு நிபந்தனைகள்  

ஹெல்மெட்டை கழற்ற வேண்டும் என்றால் இரண்டு நிபந்தனைகளை அவர்கள் விதித்துள்ளனர். ஒன்று, தாக்குதல் நடத்திய மாவட்ட பாஜக தலைவர் அகர்வாலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இரண்டாவதாக பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ரகசியமாக வீடியோ  

கடந்த சனிக்கிழமை அன்று சத்தீஸ்கர் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் மாநில பொறுப்பாளர் சுபாஷ் ராவ் தலைமையில் கூட்டம் நடந்தது. இதனை படம் பிடிக்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் சுமன் பாண்டே என்ற பத்திரிக்கையாளர் மட்டும் பாஜக ஆலோசனை கூட்டத்தை ரகசியமாக வீடியோ எடுத்தார்.


பாஜக விளக்கம்  

இதனை கண்ட பாஜக தலைவர் அகர்வால் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் நான்கு பேர் சுமன் பாண்டேவை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக மாநில பொறுப்பாளர் சுபாஷ் ராவ் விளக்கமளித்துள்ளார். பத்திரிக்கையாளரை தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எங்களை என்ன செய்ய சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.






இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சிவக்குமார் சென்று இருந்தார்.
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அங்கு இருந்த நபர் ஒருவர் சிவக்குமாருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார். முகத்திற்கு நேராக செல்போனை கொண்டு வந்து அந்த நபர் நீட்டியபோது, சிவக்குமார் அதனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த நபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய செல்போன் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 06, 2019

கூட்டிபெருக்கி சுத்தம் செய்யும் ஸ்வீப்பர் வேலைக்கு விண்ணப்பித்த BE, MBA, MCom, MTech பட்டதாரிகள்..?

தலைப்பைப் படித்த உடனேயே இது அரசு வேலை என புரிந்து கொண்டீர்களா..! சபாஷ் சரி தான். 


 தமிழக அரசு 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு கல்வித் தகுதி தேவை இல்லாதவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வழக்கம் போல அடித்து நொறுக்கிவிட்டார்கள் நம் தமிழக இளைஞர்கள். 14 பணி இடங்களுக்கு 4,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றன. இந்த தேர்வுக்கே சராசரியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்களாம். 70 பேரின் விண்ணப்பங்கள் ரத்து செய்யபப்ட்டு 3,930 பேருக்கு தேர்வு அனுமதிக் கடிதத்தை டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்களாம்.


அரசாங்க காசு  

இந்த 10 ஸ்வீப்பர்கள் மற்றும் 04 சுத்தம் செய்யும் பணியாட்கள் வேலைக்கு 15,700 முதல் 50,000 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயித்திருக்கிறார்களாம். இதில் இட ஒதுக்கீடும் செய்திருக்கிறார்களாம். மொத்த 14 பணி இடங்களில் 4 General Category, 4 OBC, 3 MBC, 2 SC, 1 STs.


யோகி ஆதியநாத் மாநிலத்தில் 

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் உத்திரப் ப்ரிஅதேசத்தின் 62 பியூன் வேலைக்கு 93,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இந்த 93,000 பேரில் தங்கள் துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முனைவர் பட்டங்கள் (டாக்டர் பட்டம்) பெற்றவர்களும் உண்டு.


மும்பையில்  

மகாராஷ்டிரத்தில் மந்திரலயாவில் 13 உணவு பரிமாறுபவர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பிட்த்திருந்தனர். இதிலும் கணிசமாக பட்டப் படிப்பு படித்தவர்கள் எல்லாம் சரமாறியாக விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் கேட்கப்பட்டிருந்த கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி தான்.


NSSO  

சமீபத்தில் மோடி அரசின் அராஜக நடவடிக்கைகளில் ஒன்றாக தேர்சிய மாதிரி சர்வே அமைப்பின் தரவுகள் மத்திய அரசால் வெளியிடப் படாமல் இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018லேயே வெளியாகி இருக்க வேண்டிய வேலைவாய்ப்பு விவரங்கள் வரும் மார்ச் 2019-ல் தான் வெளியிட இருக்கிறார்களாம். அதில் சொல்லப்பட்டது போலவே இந்தியவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புகள் சரிந்து வருவதையே இது காட்டுகிறது.

டிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! பெண்களே உஷார்

சோஷியல் மீடியாவில் நீங்கள் ஷேர் செய்யக்கூடிய புகைப்படம் அல்லது வீடியோ உங்களுக்கே தொல்லையாக மாறும் என்பதற்கு, பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும். 
 

சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒரு பகிர்வு அடிக்கடி வைரல் ஆகுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சோஷியல் மீடியா ஆப் வைரலாகி வருகிறது என்றால் அது டிக்டாக்தான் (Tik Tok). 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

சிறிய அளவிலான வீடியோக்களை ஷேர் செய்ய அறிமுகமான தளம்தான் இது. ஆனால் இன்று இளைஞர்களை, அதிலும் இளம் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.


தமிழகம் டாப் 

டிக்டாக்கில் பாடலுக்கு நடனமாடி அதை பதிவேற்றம் செய்வதில் இளம் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாநிலங்களில் தமிழகம் மற்றும் கர்நாடகா பெண்கள் டிக்டாக் வீடியோ அப்லோடிங்கில், கணிசமாக உள்ளனர். இந்த வீடியோக்களுக்கு வரும் லைக்ஸ், பாராட்டு கமெண்ட்டுகள் இவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக டிக்டாக்கில் அடிமையாக வைத்திருக்க உதவுகிறது.


ஆபாசம்  

ஆனால் இதில் மற்றொரு விபரீதமும் உள்ளது. ஆபாச கருத்துக்களை கமெண்ட்டுகளாக போடும் நெட்டிசன்கள் ஒருபக்கம் என்றால், இந்த குடும்ப பெண்களின் வீடியோ, மற்றும் அவர்கள் உருவ படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதை ஆபாசமாக சித்தரித்து அதற்குரிய வெப்சைட்டுகளில் பதிவேற்றி ரசிப்போர் மற்றொரு பக்கம். இதனால் பல குடும்ப பெண்களின் வாழ்க்கை கெட்டழிகிறது.


பெங்களூரில் பிரபலம்  

இப்படியான ஒரு சம்பவம், பெங்களூர் நகரையடுத்து ஆனேக்கல் பகுதியிலுள்ள ஒரு 20 வயது கல்லூரி பெண்ணுக்கும் நடந்துள்ளது. கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்தான் அந்த பெண். இவருக்கு சுமார் 1.3 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு இவர் டிக்டாக் ஆப்பில் பிரபலம் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். இதுவரை அவர் பெற்ற லைக்ஸ் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டுமாம்.


ஆபாச சித்தரிப்பு  

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் முதல், கவிதாவை ஆபாச பட நடிகை போல சித்தரித்து, மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் சுற்ற ஆரம்பித்துள்ளன. இது கவிதா கவனத்திற்கு வந்தபோது இடிந்தே போய்விட்டார். என்ன செய்வது என்று யோசித்து, இந்த தகவலையும் அவரே ஒரு வீடியோவில் கூறி, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து அதையும் டிக்டாக்கில் பதிவேற்றினார். ஆனால், பிரச்சினை அதிகரித்ததே தவிர, ஓய்ந்தபாடில்லை.


விடமாட்டேன்  

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான, கவிதா, இதுகுறித்து, பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி கவிதா நிருபர்களிடம் கூறுகையில், எனது நடிப்பு திறமையை காட்டவே டிக்டாக்கை பயன்படுத்தினேன். இது ஃபன்னுக்காகத்தான். ஆனால், ஒரு சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக நான் டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேங்க் அக்கவுண்டை செக் பண்ணிட்டீங்களா..? 2,000 வந்திருக்கலாம்... அதிரடியாக அசரடிக்கும் மோடி..!




தேர்தல் நெருங்கி வருவதால் இம்மாதம் 2 ஆயிரம் ரூபாயையும், தேர்தலுக்கு முன் 2 ஆயிரம் ரூபாயையும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.



பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாயும், 2018-2019 நிதி ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை 2,000 ரூபாய் என 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாக அறிவித்திருந்தது. 



தற்போது தேர்தலுக்கு முன்பு இந்த நிதி உதவியை விவசாயிகளுக்கு அளித்தால் வாக்குகளை எளிதாகக் கவர முடியும் என கருதிய பாஜக தலைமையிலான மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் முதல் தவணையை இம்மாத இறுதிக்குள் வழங்கி விட்டால் தேர்தலுக்கு முன்பு இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் அளிக்க முடியும் என கணக்குபோட்டுள்ளது.



இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் அதிகப்படியான விவசாயிகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ளதால் யோகி ஆதித்யநாத் இந்த நிதி உதவியை வேகமாக அளிக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளார். இது தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள உத்திரப்பிரதேச மாநில எதிர் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய அரசிடமிருந்து நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.