எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
"ம்மா.. என் சாப்பாட்டுல வண்டி இருந்துச்சு.. புழு நெளிந்துச்சும்மா"
என்று பிள்ளைகள் சொன்னதை கேட்டு பெற்றோர்கள் கொதித்து போய்விட்டனர். "உன்
குழந்தையா இருந்தா இப்படி போடுவியா..
அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு
எளக்காரமா?" என்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட கேள்வி கேட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜாரில் அரசு
உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளான
சிவசக்தி நகர், பாரதியார் புதூர், குந்தா கோத்தகிரி, முள்ளிகூர், ஆடா உட்பட
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று
வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். இங்கு
படி க்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆவேசம்
உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா
உங்களுக்கு எளக்காரமா?" என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இதில் தலையிட்டு
சமரசம் பேசி, இது சம்பந்தமான கண்டிப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதி
தந்தார்கள்.
நான்கவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை மிகவும்
சமயோசிதமாக காப்பாற்றிய தாயக்கு இணையதளத்தில் தொடர்ந்து பாராட்டுகள்
குவிந்த வண்ணம் உள்ளது.
அதன்படி கொலம்பியா மாகணத்தில் மெடலின் என்ற பகுதியில் லிப்டில்
இருந்து அம்மாவும் சிறுவனும் வந்தனர், நான்கவது மாடிக்கு வந்த சில
நொடிகளில் சிறுவன் பால்கனியில் உள்ள கம்பியின் பக்கம் சென்று விடுகிறான்.
பின்பு கம்பியை பிடித்தபடி பார்த்த சிறுவனம் தவறி விழ தாய் உடனடியாக
சுதாரித்து சிறுவனின் கால்களை பிடித்து கொள்ள குழந்தை காயம் ஏதுமின்றி
தப்பித்து விட்டான். மேலும் தாய் மெதுவாக அந்த குழந்தையை இழுத்து
காப்பிற்றி விட்டார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்தி
சிசிடிவி காட்சியினை பலரும் பகிர்ந்து தாயின் சமயோசிதமான செயலை
பாரட்டியுள்ளனர். சிலர் அம்மாவினால் மட்டும் தான் நொடியில் செயல்படமுடியும்
என்று கருத்து
தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தாய் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தான் துறுதுறுவென
அங்குமிங்கும் ஓடிய குழந்தை விளையாட்டாக பால்கனியை எட்டிப்பார்த்தது.
பின்பு யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென குழந்தை தவறி கீழே விழுச்
சென்ற நொடியில், சிறிதும் தாமதிக்காமல் தாய் பாய்ந்து குழந்தையின்
காலைப்பிடித்து காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
14 வயதான சிறுவன் ஒருவன் தற்போது ஒரு வைரஸ்வை உருவாக்கியுள்ளான். இதன்
தற்போது இந்த உருவாக்கியுள்ள வைரஸ்சை ஏவியுள்ளதால், தற்போது உலகம்
முழுக்கவும் பரவியுள்ளது.
இதனால் உலகம் முழுக்க உள்ள ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மோடம்கள்
கடும்பாதிப்பில் சிக்கியுள்ளன. இணையம் மூலம் செயல்படும் பொருட்களில் வேகமாக
பரவி தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றது.
கணினி வைரஸ் என்றால்:
கணினி வைரஸ்கள் என்பன, சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணினி
செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணினியின் செயற்பாட்டையோ முழுமையாகவோ
பகுதியாகவோ பாதிக்கக்கூடிய கணினி ப்ரோக்ராம் ஆகும்.
இவற்றிக்கு இருக்கும்
ஒரு முக்கிய பண்பு இவற்றால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு
கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணினிகளுக்கு
பரவிச்செல்ல முடியும்.
ஸ்மார்டிவி, மோடம்களுக்கு பரவும்:
ப்ரோக்ராம்கள், கோப்புகளில் தன்னையும் இணைத்துக்கொள்ளும், இப்படி வைரஸ்
இணைந்துகொண்ட ப்ரோக்ராம்கள், கோப்புக்களை இன்னுமொரு கணனிக்கு எடுத்துச்
செல்லும்போது அந்தக் கணணியிலும் உள்ள கோப்புக்களில் மீண்டும் மீண்டும்
பதிந்துகொள்ளும்.
இவை கணனிக்கு வந்தபின், அதில் இருக்கும் கோப்புகளை அழிப்பது,
செயல்முறைமையின் சில பகுதிகளை செயல்படாமல் தடுப்பது. ஹர்ட்டிஸ்க்களை
செயலிழக்க, கணணிகளை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது என்று பல தலையிடிகளை
உருவாகலாம். தற்போது, ஸ்மார்டிவி, மோடம் உள்ளிட்டவைகளுக்கும் பரவும்.
இணையம் மூலம் செயல்படும் வைரஸ்:
இந்த வைரஸ், இணையம் மூலம் செயல்படும் பொருட்களின் ஸ்டோரேஜ் மற்றும் அதன்
நெட்வோர்க் கட்டமைப்பை முற்றிலுமாக அழித்து அதனை செயல் இழக்க செய்வதாக
கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை 14 வயதாகும் சிறுவன் உருவாக்கி உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைட் லீபன் என்னும் சிறுவன்:
லைட் லீஃபன் (Light Leafon) என்று அறிப்படும் அந்த சிறுவன்,
பிரிக்கர்போட்டை மையமாக வைத்து தான் சிலெக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,
அதனை இன்னும் பலம் வாய்ந்ததாக மாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிப்பு:
2017ஆம் ஆண்டு பிரிக்கர்போட் (BrickerBot) என்ற வைரசால், கிட்டத்தட்ட 60
ஆயிரம் பிஎஸ்என்எல் மோடம்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பிரிக்கர்போட்டை
போன்றே சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸ், சர்வதேச அளவில் இணையம் மூலம்
செயல்படும் பொருட்களில் வேகமாக பரவி வருகிறது.
சிலெக்ஸ் வைரஸ்:
இந்த தாக்குதல் வேகமாக பரவி வருவதால், நமது வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவி
மற்றும் மோடம்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பொது மக்களும் சிந்திக்க
துவங்கியுள்ளனர். மேலும், இந்தியாவுக்குள் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகின்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்ப்பிணியான சாந்தி தேவி(30). இவர்
பிரசவ வலியால் துடித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர்
ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் சேவைக்கு லைன் கிடைக்கவில்லை. அதற்குள் சாந்தி, மயங்கி விழுந்து
விட்டார். மருத்துவமனைக்கு செல்ல 10 கிமீ பயணம் செய்ய வேண்டும்.
சாந்தியின் உடல்நிலை கருதி, அவரது கணவர் உடனடியாக இருசக்கர வாகனத்தில்
சாந்தியை ஏற்றினார். 10கிமீ வாகனத்திலேயே சென்று சிஎச்சி
எனும் மருத்துவமனையை அடைந்தனர். ஆனால், அங்கு சாந்தியை 27 கிலோ மீட்டருக்கு
அப்பால் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள்
கூறியுள்ளனர்.
இதனையடுத்து சிஎம்சி நிர்வாகம் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது.
பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சாந்தி தேவி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சாந்தி தேவியின் கணவர் கமல் கூறுகையில், ‘நாங்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற துடித்தோம். ஆனால், முடியவில்லை.
108 எண்ணுக்கும் முயற்சித்தோம். எவ்வித பலனும் இல்லை. எனவேதான் வேறு வழி இன்றி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றோம்’ என கூறினார்.
சாந்தி
தேவி வசிக்கும் கிராமத்தினை அந்த தொகுதி எம்பி மாதிரி கிராமமாக
தத்தெடுத்தார். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என அப்பகுதி மக்கள்
கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் களையாமல், ஷவரில் குளிக்கும்
வகையிலான குளியல் கவசம் ஒன்று பிரபலமாகி வருகிறது.
நம்ம ஊரில் அடிக்கும் வெளியிலுக்கு ஷவரில் குளிப்பது ஒரு அலாதி சுகம்.
ஆனால் சென்னையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தில், ஷவரில் குளிப்பதெல்லாம்
எட்டாக்கனியாக மாறி வருகிறது.
ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு குடும்பமே
குளிக்க வேண்டிய நிலை தான் இங்கு நிலவுகிறது.
ஆனால் ஷவரில் குளிப்பதற்காக ஒரு பாதுகாப்பு கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
ஒரு நிறுவனம். குளிப்பதற்கு எதற்கு பாதுகாப்பு கவசம் எனும் உங்கள் மைண்ட்
வாய்ஸ் கேட்கிறது. அது எதற்கு என்றால் முகத்தில் போட்டிருக்கும் கேக்கப்
களையாமல் பார்த்துக்கொள்கிறது இந்த கவசம்.
ஹெல்மெட் மாடல்:
நம்ம ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஹெல்மட் போல் தான்
இருக்கிறது இந்த குளியல் கவசம். அதை லைட்டாக பட்டி டிங்கரிங் செய்து இதனை
உருவாக்கியிருக்கிறார்கள். பிளாஸ்டிக்கினால் ஆன இந்த கவசத்தின் மேல்
பகுதியில் ஒரு வில்க்ரோ டேப் இருக்கிறது. முகத்தில் கவசத்தை அணிந்து, அந்த
டேப்பை இறுக்க ஒட்டிவிட்டால் முகல் நனையாமல் குளிக்கமால்.
நல்ல வரவேற்பு:
ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குளியல் கவசத்துக்கு நல்ல
வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பொருளை அறிமுகப்படுத்திய நிறுவனத்தை
சிலாகித்து வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் எதற்கு இந்த குளியல் கவசம்
எனப் புரியாமல் தலையைச் சொரிந்து வருகின்றனர்.
பெரிய சந்தேகம் பாஸ்:
மக்களே நமக்கும் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. அது, ‘குளிக்கிறதே உடம்பில்
உள்ள அழுக்கு போக வேண்டும் என்பதற்காக தான். பல நாட்கள் குளிக்காமல்
இருப்பவர்கள் கூட தினமும் முகம் கழுவுவதை பார்த்திருக்கிறோம். ஆனால்
முகத்தில் தண்ணீர் படாமல் குளிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
வடிவேலு டயலாக்:
என்ன விஞ்ஞானமோ, விநோதமோ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா. அதற்கும்
மேல் அதனை வாங்கியும் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை
என்னவென்று சொல்வது. ‘நடுராத்திரி நாங்க ஏண்டா சுடுகாட்டுக்குப் போறோம்'
என்ற வடிவேலுவின் டயலாக் மாதிரி, மேக்கப் போட்டுட்டு நாங்க ஏண்டா குளிக்கப்
போறோம் என்கிறது நம்ம மைண்ட்வாய்ஸ்.
செல்பியால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை நாம்
கேள்விபட்டியிருக்கின்றோம். செல்போன் வழியாக எமன் நுழைந்து பல உயிர்களை பாச
கயிறு போல செல்பியை வீசி (எடுக்க வைத்து) பலரின் உயிரை பிரித்து விட்டதாக
கூறியுள்ளனர்.
பலரின் வாழ்கையே ஒரு செல்பியால், அடுத்த நெடியே பரிதாமாக பறிபேனானதும்
உண்டு. நாம் எதார்த்தமாக வாழ்கையில் புகைப்படங்களை நின்று ரசிக்கும்
வகையில் எடுத்த போது, அடுத்த நெடியே கூற்றுவன் கூவி வந்து அவனையும் தூக்கி
சென்றுள்ளான்.
குடும்ப பிரச்னையால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவதாக செல்பி எடுத்து
அனுப்பினார். இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் இவர் காப்பாற்றப்பட்ட
விசிஷயம் தான் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.
செல்பியால் பல உயிர்பறிபோனது:
பலர் செல்பி எடுக்க மலையேற்றங்களில் நின்று எடுத்தனர். அப்போது,
எதிர்பாரதவிதமாக தடுக்க விழுந்து இறந்ததும் உண்டும்.
மேலும், சிலர் தண்டவாளத்தின் அருகேவும் ரயில் செல்லும் முன் செல்பி எடுக்க
முயன்ற போது, அவர்களின் உயிர் அடுத்த நொடியே பஸ்பம் ஆனதும் பார்த்து
இருப்போம். பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும், செல்பியால் குடும்ப உயிரிழந்து
சோகத்தில் முழ்கியதையும் பார்த்து இருக்கின்றோம்.
உயிரை காப்பாற்றிய செல்பி:
ஓரே ஒரு செல்பியால் பல்வேறு சம்பவங்களில் பலரின் உயிர்கள் பரிபோனதும் உண்டு
என்பது இருக்கட்டும். தற்போது குடும் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள
சென்ற ஒருவர் எடுத்த செல்பி உயிரை காப்பாற்றியும் உள்ளது. இது பலரையும்
வியக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்துள்ளது கேரளாவில் தான்.
கேரளாவை சேர்ந்த வாலிபர்:
கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த வாலிபர் மணி ( பெயர்
மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
வெறுத்து போன மணி, தன் வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார். நேராக
சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தார்.
தற்கொலைக்கு முன் செல்பி:
யாருமற்ற இடத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு, வாழ்கையே ரொம்ப வெப்பா
இருக்கு நண்பர்களே. வாழ்ந்தது போதும், அதனால் தற்கொலை பண்ணப்போறேன் என்று
பேசியபடி செல்பி எடுத்தார். அதை தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட
தண்டவாளத்தில் படுத்துவிட்டார்.
செல்பி வாட்ஸ் ஆப் குரூப்களில் சேரானது:
இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணி எங்கு தண்டவாளத்தில்
படுத்து கிடக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயன்றனர். அதற்காக செல்பியை
உடனடியாக பல வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட குரூப்களில் சேர் செய்தனர்.
அப்போது அவர் எடுத்த செல்பியில் ஒரு மைல் கல் காணப்பட்டது.
82 என்ற தண்டவாள எண்:
அப்போது அவர் எடுத்த செல்பியில் 82 என்ற எண் தெரிந்தது. அதை வைத்து ரயில்வே
அதிகாரிகளை கொண்டு விசாரித்தனர். அது சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகில்
உள்ள இடம் என தெரியவந்தது. உடனடியாக அங்கியிருந்த கேட் கீப்பருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியை சேந்த சிலரை அழைத்துக் கொண்டு சிலர்
சென்றனர்.
போலீசார் அறிவுரை:
ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக் கொண்டிருந்த மணியை போலீசார்
மீட்டனர். குடும்ப பிரச்னைக்கு தற்கொலை தீர்வாக என்று போலீசார் நீண்ட நேரம்
கவுன்சிலிங் கொடுத்து வழக்குபதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.
முறுக்கு மீசையுடன், கம்பீரமாக நிற்கிறாரே.. இவர்தான் 4 வயசு
குழந்தையை நாசம் செய்து பாத்ரூம் பக்கெட்டில் பிணமாக போட்டவர்.. பலியான
குழந்தையின் பெரியப்பா..
அதிலும் இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது
வெட்கக்கேடு!
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்த தம்பதி
ராஜேந்திரன் - செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு கார்முகிலன் என்ற 7 வயது
மகனும் ,ஷன்மதி என்ற 4 வயது மகளும் உள்ளனர்.
கார்முகிலன் 2-ம் கிளாஸ் படிக்கிறான். அவனை டியூஷனில் விடுவதற்காக
செந்தமிழ்ச்செல்வி நேற்று கிளம்பி சென்றுள்ளார். வீட்டில் ஷன்மதியை தனியாக
இருந்தாள். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து பார்த்தால் ஷன்மதியை காணவில்லை.
பாத்ரூம் பக்கெட்
பதறியடித்து கொண்டு எல்லா இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
அதனால் திருமுல்லைவாயில் போலீசில் புகார் கொடுக்க ஓடினார். திரும்பவும்
வந்து அக்கம்பக்கம் வீடுகளில் நுழைந்து தேடினார். அவருடன் பொதுமக்களும்
சேர்ந்து தேடினார்கள்.
ஒருசிலர் செந்தமிழ்செல்வி வீட்டுக்கே இன்னொரு முறை
வந்து தேடி பார்க்கலாம் என்று பார்த்தபோதுதான, ஷன்மதி, வீட்டின் பாத்ரூமில்
உள்ள பக்கெட்டில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணமாக
கிடந்தாள்.
பிறப்பு உறுப்பு
தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது குழந்தைக்கு பிறப்பு
உறுப்பில் காயம் இருந்தது. முதல் சந்தேகமே பக்கத்து வீட்டுக்காரர் மீதுதான்
விழுந்தது. அவர் செந்தமிழ்செல்வியின் சொந்தக்காரர்தானாம். பெயர் மீனாட்சி
சுந்தரம், ஓய்வுபெற்ற ராணுவ வீரர். வயசு 60!
கம்மல், தலைமுடி
முதலில் சந்தேகத்தின்பேரில்தான் அவரது வீட்டுக்குள் சென்று போலீசார்
சோதனையிட்டனர். அப்போது படுக்கை அறையில் குழந்தையின் உடைந்த கம்மல்,
தலைமுடி கிடந்தது. அதேபோல மீனாட்சி சுந்தரத்தின் உடையிலும் ரத்தக்கறை
இருந்தது.
அவரது வீட்டின் பாத்ரூமில் பினாயில் வாடையும் வந்தது. இப்போது
போலீசார் தங்கள் பாணியில் வேலையை காட்டினர். கடைசியில் குழந்தையை பாலியல்
வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டார்.
வா.. விளையாடலாம்
போலீசாரிடம் சொல்லும்போது, "வீட்டில் குழந்தை தனியாக இருந்தது. வா..
விளையாடலாம் என்று என் வீட்டிற்கு கூட்டி சென்றேன். என் படுக்கை அறையில்
வைத்து மூர்க்கத்தனமாக பலாத்காரம் செய்தேன். இதில் குழந்தை இறந்துவிட்டாள்.
பயந்து போன நான், குழந்தையின் சடலத்தை பாத்ரூமுக்கு எடுத்துச்சென்று
கோணிப்பையில் கட்டி வைத்தேன்" என்றார்.
தாத்தா.. தாத்தா
இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்
அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட கொடுமை, இந்த
மீனாட்சி சுந்தரம் பெரியப்பா முறை என்றாலும், எப்பவுமே தாத்தா, தாத்தா
என்றுதான் கூப்பிட்டு கொண்டு ஆசை ஆசையாக ஓடிவருவாளாம் குழந்தை!
தாலி கட்டின உடனேயே அதனை அறுத்து எறிந்துவிட்டு, தனக்கு பிடிச்ச
காதலனை கல்யாணம் செய்து கொண்டுள்ளார் ஈஸ்வரி!
திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர்
ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். ஈஸ்வரி அதே ஊரை சேர்ந்த பெண்தான். 5
வருடங்களுக்கும் மேலாக இவர்கள் காதலித்து வந்தனர்.
இருவரும் வேறு வேறு சாதி.. வழக்கமான எதிர்ப்பு வீட்டிலிருந்து
கிளம்பியது. இதனால் ஈஸ்வரிக்கு அவரது வீட்டில் கட்டாய திருமணம் செய்து
வைத்தனர்.
ஆனால் ஈஸ்வரி, கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, காதலன் குமாரை அழைத்து
கொண்டு, ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து
கொண்டார். உடனடியாக சென்னைக்கும் குடியேறினார்.
இந்த விஷயம் ஈஸ்வரி வீட்டுக்கு தெரிந்ததையடுத்து ஆத்திரமடைந்த
அவர்கள், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல்
விடுத்ததுடன், குமாரின் குடும்பத்தாரையும் ஊருக்குள் சேர்க்கக்கூடாது என்று
ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதைதவிர ஒரு லட்சம் ரூபாய்
அந்த குடும்பத்தினருக்கு அபராதமும் விதித்தார்களாம்.
எனவே, ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும்,
திருமணமான தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், திருவண்ணாமலை
மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பியிடம் மணமக்களே நேரடியாக புகார்
அளித்துள்ளனர்.
கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, இளம்பெண் ஒருவர் சாதி
மறுப்பு திருமணம் செய்த கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.
மனைவி உயிரிழக்கக் காரணமான டாஸ்மாக் கடையை போராடி மூட வைத்ததுடன்,
அவரது உடலை, விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே கணவன் புதைத்த சம்பவம்
நம்மை புரட்டி போட்டுள்ளது.
கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரமேஷ். இவர் ஒரு
டாக்டர். இயற்கை ஆர்வலரும்கூட. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல
காரியங்களை முன்னெடுத்து செய்து வருபவர்.
இவருக்கு ஷோபனா என்ற மனைவி, சாந்திதேவி என்ற மகள் உள்ளனர். மகள்
ஆனைகட்டியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இவரை ஸ்கூலிலிருந்து தினமும்
அழைத்து வருவது ஷோபனாதானாம்.
உயிரிழந்தார்
அப்படித்தான் வண்டியில் உட்காரவைத்து மகளை அழைத்து வந்தபோது, தாறுமாறாக
வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஷோபனா
சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சாந்திதேவி பலத்த அடியோடு
உயிருக்குப் போராடினார்.
கதறினார்
பைக்கில் வந்த பாலாஜி என்பவர் ஃபுல் போதையில் வண்டியை ஓட்டிவந்து இப்படி
மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. விரைந்து வந்த போலீசார், இந்த
விபத்து குறித்து உடனடியாக ரமேஷூக்கு தகவல் சொன்னார்கள். கண்ணெதிரே ரத்த
வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ்
கதறினார்.
டாஸ்மாக்
உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். ஷோபனாவின் உடலை
கட்டிப்பிடித்து கதறி அழுதார். மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து,
டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேச போராட்டம் நடத்த துவங்கிவிட்டார்.
அவருக்கு ஆதரவாக பழங்குடியின மக்களும் போராட்டத்தில் இறங்கி விட்டனர்.
இதனால் விஷயம் பெரிசானது. "மதுவால் இனியொரு குடும்பம் பாதிக்கப்படக்
கூடாது. உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று ஆவேசமாக சொன்னார்
சீமான். இதையேதான் டாக்டர் ராமதாசும் அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.
சமரசம்
விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் ரமேஷிடம் சமரசம் பேசினர். ஆனால் ரமேஷின்
உறுதியை பார்த்து மிரண்ட அதிகாரிகள் கடையை அங்கிருந்து மாற்றுவதாக எழுத்து
பூர்வமாக எழுதி தந்தார்கள்.
இதையடுத்து சொன்னபடியே குறிப்பிட்ட மதுக்கடை
மூடப்பட்டது. சோபனாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்து, ரமேஷிடம்
ஒப்படைக்கப்பட்டது.
நல்லடக்கம்
மனைவியின் சடலத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், விபத்து நடந்த இடத்திற்கு
அருகிலேயே உள்ள மயானத்தில் பழங்குடியின முறைப்படி அடக்கம் செய்தார். தண்ணி
அடித்துவிட்டு வண்டியை ஓட்டி, இனி யார் உயிரையும் பறித்துவிடக்கூடாது
என்பதற்கான அடையாளமாகத்தான் ஷோபனாவின் நல்லடக்கத்தை நடத்தி உள்ளார் ரமேஷ்.
கோரிக்கை
நம்மில், எத்தனை பேருக்கு ரமேஷின் இந்த மனநிலையும், அந்த மனநிலையின்போது
வெளிப்படுத்தும் நிலைப்பாட்டின் உறுதியும் இருக்கும் என்று தெரியாது. ஆனால்
இனி ஒரு உசுரு இப்படி அநியாயமாக போய்விடக்கூடாது என்பதுதான் அனைவரின்
எதிர்பார்ப்பும்!
உலகம் முழுவதும் நடக்கும் கொலைகளுக்குக் காரணம் மண்ணாசை பொன்னாசையும்,
பெண்ணாசையும் தான் சமீபகாலமாக கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
கலிபோர்னியாவில் காம ஆசைக்கு ஆட்பட்ட ஒருவன், பத்து மாத குழந்தைக்கு தாயான
பெண்ணை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறான். தவறான ஆசைக்கு மறுத்த அந்த
பெண்ணை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். இதில் அந்த பச்சிளம் குழந்தை
படுகாயம் அடைந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட அந்த படுபாதகனின் பெயர் மார்கோஸ் எசார்டி என்பதாகும்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் டெஸிரி மேனாக். 18 வயதான அந்த இளம்
பெண் கடந்த வாரம் தனது பத்துமாத குழந்தையோடு பிறந்தநாள் பார்ட்டிக்கு
சென்றிருந்தார்.
அங்கே நண்பர்களுடன் மார்கோஸ் எசார்டியும் வந்திருந்தான். டெஸிரியை
பார்த்த உடன் அவள் மீது ஆசைப்பட்டு கையை பிடித்து இழுத்தான். அவனது தொடுகை
டெஸிரிக்கு அருவெறுப்பாக இருக்கவே கையை உதறிக்கொண்டு அவனைப் பிடித்து
திட்டினாள்.
ஆனாலும் விடாத எசார்ட்டி தகாத முறையில் நடந்து கொண்டான்.
வலுக்கட்டாயமாக இழுத்து அணைக்க முயற்சி செய்தான்.
அவனை தள்ளிவிட்டு விட்டு தனது குழந்தையோடு நண்பரின் காரில் ஏறி
புறப்பட்டாள். அந்த காரை பின்தொடர்ந்து சென்ற எசார்ட்டி தன்னிடம் இருந்த
துப்பாக்கியால் சுட்டான்.
இதில் துப்பாக்கிக்குண்டு காருக்குள் இருந்த
பத்துமாத குழந்தையின் மீது பாய்ந்தது. கார் டிரைவர் வேகமாக காரை
ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தையை
சிகிச்சைக்காக அனுமதித்தார்.
குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் பாய்ந்திருந்த
துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது என்றாலும் அந்த பச்சிளம் குழந்தை
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை மீது
துப்பாக்கிச்சூடு நடந்த அந்த வெறியன் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியின்றி
மீது பார்ட்டியில் பங்கேற்கச் சென்று விட்டான்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில்
கலிபோர்னியா மாகாண போலீசார் எசார்ட்டி மீது வழக்குப் பதிவு செய்து கைது
செய்து சிறையில் அடைத்தனர்.
குடிகாரன் சொன்ன பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள். அவர்கள் சொல்ற
விஷயம் மட்டுமல்ல செய்கின்ற செயலும் அப்படித்தான். ஆல்கஹால் உள்ளே போனால்
ஆப்போஷிட்ல யார் வர்றாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு குடிக்கிறது தான் நிறைய
பேரோட பழக்கமாக உள்ளது.
அளவுக்கு அதிகமாக குடிப்பது தன்நிலை மறந்து
உயிருக்கே சில நேரங்களில் ஆபத்தாகக் கூட முடிந்து விடுகிறது.
அப்படித்தான் ஒருவர் எக்குத் தப்பா குடிச்சு பேதையில என்ன செய்ஞ்சு
இருக்காருன்னு பாருங்க. குடிச்சாலே போதும் சிலர் முரட்டுத்தனமாக கூட
நடந்துப்பாங்க.
நினைவே இல்லாமல் இருந்தால் இந்த பையன் நிலைமை தான்
உங்களுக்கும்.
தன்னுடைய குடிபோதையில் சைடிஸ்னு நினைச்சு சாவிய விழுங்கின கொடுமைய பாருங்க.
நடந்த விபரீதம்
ஷாங் என்ற சீன நாட்டைச் சார்ந்த 26 வயது இளைஞன் தன்னுடைய வார விடுமுறையை
கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
பார்ட்டியில்
நல்லா தண்ணிய போட்டு ஆடி கூத்தடிச்சுட்டு வீட்டுக்கு வரும் போது தான்
வீட்டுச் சாவி காணோம்ங்றது தெரிய வந்துள்ளது. வீட்டிற்கு உள்ளே தூங்கிக்
கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி தன்னுடைய சாவி தொலைந்ததை
தெரிவித்துள்ளார்.
மார்பகத்தில் வலி
அடுத்த நாள் காலையில் எழும் போது அவனுக்கு நெஞ்சு முழுவதும் எரிச்சல்
ஏற்பட்டுள்ளது. உடனே அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையை நாடி
உள்ளார்.
அப்பொழுது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது தான்
அவனது மூச்சுக் குழாயில் சாவி சிக்கியது தெரிய வந்திருந்தது. அந்த
பையனுக்கே தெரியவில்லை கீ எப்படி தன் வாய்க்குள் போனது என்று. அந்தளவுக்கு
இரவில் பேதை தலைக்கேறி இருந்துள்ளான்.
அறுவை சிகிச்சை செய்யும் நிலை
மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்து சாவியின் நிலையை கண்டறிந்து அறுவை
சிகிச்சை செய்து அதை நீக்கி உள்ளனர். மேலும் இந்த சாவி அந்த பையனின் குடலை
கிழித்து உள்ளதாகவும் உணஙுக்குழாயையும் கிழித்து உள்ளதாகவும் மருத்துவர்கள்
கூறுகின்றனர். எப்படியோ மருத்துவர்கள் சாவியை எடுத்துவிட்டனர்.
என்ன ஆகும்?
காயங்கள் ஆற மாதங்கள் ஆகும் என்றும் அதுவரை இவர் குடிக்காமல் இருந்தால்
நல்லது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத பத்தி நீங்க
என்ன நினைக்கீங்க. தன்நிலை மறக்கும் குடி அவசியம் தான, யோசிங்க மக்களே!
அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப்
போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை
ஆங்கிலத்தில் "மெடிகல் மிராக்கில்" என்று கூறுவா். அது போல் ஒரு வினோத
சம்பவத்தைத் தான் நாம் கானவிருக்கிறோம்.
பொதுவாக நாம் நமது பிள்ளைகளைத் திட்டும்போது," நான் என் இரத்தத்தை
வியர்வையாக்கி உன்னை படிக்க வைக்கிறேன்.. " என்று கூறுவோம். நாம் அவ்வளவு
கடினமாக உழைக்கிறோம் என்ற பொருளில் இப்படி நாம் கூறுகிறோம். ஆனால்
உண்மையில் ஒரு பெண்ணுக்கு வியர்வையாக இரத்தமே வெளியாகிறது என்று கேட்டால்
உங்களுக்கு எப்படி இருக்கும். தலை சுற்றுகிறதா? வாருங்கள் தொடர்ந்து இதனைப்
பற்றி அறிந்துக் கொள்வோம்.
மருத்துவ உலகில் சில வழக்குகள்
எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்வி எழ வைக்கும். இதுவும் அப்படி ஒரு அரிய
செயல் தான். 10 மில்லியன் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இத்தகைய சம்பவம்
நடைபெறும் சாத்தியம் உண்டு.
ஒரு 21 வயது பெண். அவரைப் பற்றிய மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த
பெண்ணை ஒரு முற்றிலும் விச்சிதிரமான நிலைக்காக மருத்துவமனையில்
அனுமதித்திருந்தார்கள். அதாவது அவருக்கு வியர்க்கும்போது அவருடைய முகம்,
உள்ளங்கை போன்ற இடங்களில் வியர்வையாக இரத்தம் வெளியேறுகிறது. குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?
நம்ப முடிகிறதா?
இதனை கேட்பதற்கு நம்பமுடியாமல் இருந்தாலும், இது ஒரு உண்மையான நிலை ஆகும்.
இப்படி சில வழக்குகள் மிகவும் அரிதாக மருத்துவ வரலாற்றில் காணப்படுகிறது.
இத்தாலிய மருத்துவர்கள் இந்த பெண்ணை பரிசோதித்து அவருடைய திகிலூட்டும்
அறிகுறியை எண்ணி இந்த நிலை பற்றிய குழப்பத்தில் இருந்தனர்.
மேலும் அந்தப்
பெண்ணின் சருமத்தில் இரத்தம் வெளியேறுவதற்கான எந்த ஒப்ரு புண்ணும் அல்லது
சிராய்ப்பும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்தியாக
இருந்தது.
ரத்தப்போக்கு
திடீரென்று இப்படி இரத்தப்போக்கு ஏற்படும் நிலை உருவாகக்கூடிய எந்த ஒரு
குறிப்பிட்ட காரணமும் அந்தப் பெண்ணின் உடல் நிலையில் இல்லை என்பது மருத்துவ
பரிசோதனையில் தெரிய வந்தது.
மேலும் அந்தப் பெண் உறங்கும்போதும் உடல்
செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்போதும் இரத்தம் வெளியேறுவது
அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
வியர்வை
இப்படி வியர்வையாக இரத்தம் கடுமையாக வெளியேறுவதைக் கண்ட அந்தப் பெண்
மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்டார். அவருடைய வழக்கு பற்றி கனடா மருத்துவ
நிறுவன பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன.
இந்தப் பெண்ணின் நிலை பற்றி மருத்துவர்கள் இன்னும் விரிவாக விளக்கும்போது,
இந்த வித அசாதாரண அறிகுறியைக் கொண்டு இந்த பெண் கடந்த மூன்று ஆடுகளாக
அவதிப்படுவதாகவும், ஒவ்வொரு முறை இப்படி ஏற்படும்போது இந்த நிலை தொடர்ந்து
ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் நீடிப்பதாகவும் கூறினர்.
இந்த வகை அரிய
பாதிப்பு காரணமாக, உணர்வு ரீதியாக அந்தப் பெண் பெருமளவில்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எப்போதும் தனித்து இருப்பதாகவும் கூறினர்.
ரத்த அணுக்கள்
எண்ணிக்கை
அந்தப் பெண்ணின் இரத்த அணுக்கள் எண்னிக்கை மற்றும் இரத்த உறைவு செயல்பாடு
போன்றவை வழக்கமான நிலையில் இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறுதியாக இந்தப் பெண்ணுக்கு ஹெமடோஹிட்ரோசிஸ் (hematohidrosis) என்ற
பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை பாதிப்பு 10 மில்லியன்
மக்களில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் என்பதும் அறியப்படுகிறது.&bsp;
அவரது
மருத்துவ சிகிச்சை பற்றி மருத்துவர்கள் விளக்கினர்.
அந்தப் பெண்ணிற்கு ப்ரோப்ரன்னோலோல்(propranolol) என்னும் பீட்டா ப்ளாக்கர்
மருந்து கொடுக்கப்படுவதாக கூறினர்.
இந்த மருந்து அவருடைய அறிகுறிகளைக்
கணிசமாகக் குறைக்கும் என்றும் துரதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பில் இருந்து
அவர் முற்றிலும் வெளிவர முடியாது என்றும் தெரிவித்தனர்.
இந்த நோய் பாதிப்பிற்கான காரணம் பற்றி முற்றிலும் தெரியவில்லை என்றாலும்,
மிக அதிக அழுத்தம் மற்றும் பயம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று
கூறப்படுகிறது.