வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-04-12
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 22, 2020

ஓய்வு பெற்ற தபால் அதிகாரி தனது சொந்த செலவில் 350 குடும்பளுக்கு அளித்த கொரோனா நிவாரண உதவி | Lathur Block Palur Retired Post Master giving Corona Relief to People | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம், பாலூர் கிராமத்தில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால் குடும்பம் நடத்த முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்
இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தபால் அதிகாரி சையத் ஹுமாயூன் தனது சொந்த செலவில் அதே கிராமத்தை சேர்ந்த 350 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையினை வழங்கி, ஏதாவது வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள், முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

நிகழ்வின் போது கிராம நிர்வாக அலுவலர் பாலு மற்றும் கிராம உதவியாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பனை மரத்திலிருந்து விழுந்த வாலிபர் பலி | கொரோனா ஊரடங்கு நேரத்தில் பரிதாபம் | The person died in Karumbakkam Thiruporur Block

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் பகுதியில் விளையாடச் சென்ற வாலிபர் மரத்திலிருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கரும்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீதர் என்ற இளைஞர் ஊரடங்கு உத்தரவு போது ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார் அப்போது அவர்களால் அடிக்கப்பட்ட பந்து பணமரத்தின் உச்சியில் மாட்டிக்கொண்டது.

அதனை எடுக்க முயற்சி செய்து மேலே ஏறிய ஸ்ரீதர் தவறிவிழுந்து படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த ஸ்ரீதருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறி அழும் காட்சி பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கிறது.
-செங்கல்பட்டு செய்தியாளர் பூபதிராஜா

Tuesday, April 21, 2020

ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக வழங்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் | Corona Relief given by Anmiga Makkal Thondu Eyakkam


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி தவிக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள், ஊனமுற்றோர்கள் என அனைவருக்கும் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அவர்களின் இடத்திற்கே சென்று தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், இராமாபுரம், மதுராந்தகம், பாக்கம் , மாம்பாக்கம், கருங்குழி, படலாம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் என அனைவருக்கும் கோ..அன்பழகனின் ஆணைப்படி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பாக சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாவட்டத்தின் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம்  சார்பாகவும் இயலாதவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி யாரும் கண்டுக்கொள்ளப்படாமல் சாலையில் சுற்றித் திரியும் நாய்கள் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.