வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-06-28
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, July 05, 2020

FO போலீஸ்-க்கு தடை | முழு காரணம் என்ன..? | Will stop Friends of Police | Vil Ambu News

போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு விழுப்புரம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் நெல்லை சரகத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.




போலீஸ் என்ற வார்த்தை மரியாதைக்குரியதும், பயபக்தியுடன் சட்டத்தை மதிக்க வைப்பதற்கும் ஓர் மந்திர வார்த்தையாக உள்ளது. மக்களில் சிலர் கூறுவர் போலீஸ்தான் நாட்டை ஆளுகிறது என...! ஆம் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என ஆயிரம் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அது போலீஸ்காரர்கள் மூலமாகதான் பிரதிபலிக்கிறது.


போலீஸ்காரர்களுக்கு போதிய நேர நிர்ணயம் இன்றி பணி செய்து வந்த நாட்களில் பணிச்சுமையை குறைப்பதற்காக காவல் துறை மூலமாக 1946 -ம் ஆண்டு சைனோ-இந்தியன் போருக்கு பிறகு பலகட்டங்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஊர்காவல்படையினர் (Home Guard Police).


தற்போது அதிகரித்துவரும் காவல் துறையினரின் பணிச்சுமையின் காரணமாக போக்குவரத்து சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள்தான் தற்போதைய போலீஸ் நண்பர்கள் குழு (Friends of Police)


இவர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. காவல் துறையினரால் தன்னார்வலராக பணியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். ஆனால் இவர்கள் தங்களை நிஜ போலீசாக பாவித்துக் கொண்டு செய்யாத அட்டகாசமே இல்லை.


போக்குவரத்து சோதனைச் சாவடிகள் அல்லது ஏதேனும் பந்தோபஸ்துகளில் காவல் துறையினருடன் சேர்ந்து பணியாற்றும்போது உண்மையான போலீஸ் முறையாக ஓர் நபரிடம் கேள்வி கேட்டு குறிப்பிட்ட நபரை விசாரணை செய்வதற்கு முன்னரே முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு குறிப்பிட்ட நபரை பாடாய் படுத்துபவர்களும் இவர்களே (FOP).


இதையெல்லாம் யோசித்தால் ஊர்காவல்படையினருக்கே ஓர் சல்யூட் அடிக்கலாம். ஆம்...! காவல் துறையினரின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி முறையாக பணியாற்றிவரும் ஊர்காவல் படையினர்கள் எங்கே..? ஊரைச் சுற்றித் திரிந்த இந்த புள்ளிங்கோக்கள் எங்கே..?


பொதுமக்கள் கூறுவது என்னவென்றால்... நேற்றுவரை எனது ஏரியாவில் சுற்றித் திரிந்த புள்ளீங்கோ கும்பல் இன்று போலீசாருடன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற போர்வையில் சுற்றித் திரிவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது இவர்களுக்கு பதிலாக ஊர்காவல்படை மற்றும் முன்னாள் இராணுவத்தினரை பணியமர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.


அதாவது, சட்டம் என்றால் என்ன..? பொதுமக்களை எப்படி வழிநடத்த வேண்டும்...?  நமக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை சிறிதும் அறியாத இந்த FOP பசங்களின் பணி தற்போது சாத்தான்குளம் பிரச்சனை காரணமாக பறிபோய் உள்ளது என்பதை பொதுமக்கள் பலரும் வரவேற்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் இந்த தடை அமல்படுத்தப்படவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். யுனிபார்ம் போட்டுகிட்டு கெத்தாக திரிந்த இவர்கள் மறுபடியும் புள்ளீங்கோக்களாக திரிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்லும் நாள் எங்கே....???
-வில் அம்பு ஆசிரியர், பழனிவேல் பாலாஜி

Saturday, July 04, 2020

பப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்: பின்னர் சிறுவனுக்கு நேர்ந்தது என்ன..? | PUBG Loss | Vil Ambu News

பப்ஜி விளையாட்டில் 17 வயது சிறுவன் பெற்றோரின் சேமிப்பான ரூ.16 லட்சத்தை செலவழித்தான்.



பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் சீன விளையாட்டு செயலியான பப்ஜி கேம்-ஐ விளையாடியே அடிமையாகிருந்தான். அதற்காக தனது அம்மாவின் ஸ்மார்ட் போனை பயன்படுத்திவந்தான். சிறுவன் அதிக நேரம் மொபைல்  போனை பயன்படுத்துவதைக் கண்டு பெற்றோர் கேட்கும்போது, ஆன்லைனில் படிப்பதாக அவன் பொய் கூறியுள்ளான்.


இந்நிலையில் பப்ஜி விளையாட்டில் அடுத்தடுத்த கட்டங்கள்  எட்டவும் புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளான். இப்படியே அடிமையாகிய சிறுவன் ரூ.16 லட்சம் ரூபாயினை செலவழித்துள்ளான்.


வங்கியில் பணம் எடுத்ததற்காக வந்த மெசேஜ்களை உடனடியாக அழித்துவிடுவானம் இந்த சிறுவன். இந்த பணம் இந்த சிறுவனின் எதிர்கால செலவுகள் மற்றும் குடும்பத்தின் அவசர செலவுகளுக்காக கஷ்டப்பட்டு சேர்த்த பணம் என பெற்றோர்கள் குமுறுகின்றனர். சிறுவனின் தந்தை ஓர் அரசு அலுவலர் ஆவார்.


இதனால் அதிர்ச்சியுற்ற சிறுவனின் தந்தை உடனடியாக போலீசீல் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை மீட்க முடியாது என போலீஸார் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து மனம் விரக்தியடைந்த சிறுவனின் தந்தை அந்த சிறுவனை ஓர் இருசக்கர வாகன பழுதுநீக்க கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

அச்சிறுபாக்கத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் | Acharapakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம்  பேரூராட்சி சமுதாய கூடத்தில் 03.07.2020 அன்று மாலை 5 மணிக்கு பேரூராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்  மற்றும்  குடியிருப்போர் சங்கத்தினர்களோடு ஆலோசனை கூட்டமானது அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமையில்  நடைபெற்றது.
இதில், அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ் முன்னிலை வகித்து கொரோனா வைரஸிலிருந்து தம்மையும், சமுதாயத்தையும் பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், பேரூராட்சி  பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த தருணத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறக்கூடாது எனவும் காவல் ஆய்வாளர் சரவணன் கேட்டுக் கொண்டார்.


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறைகள், முகக்கவசம்  மற்றும்  கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டது.
 
இதில் அனைத்து வியாபாரிகளும் கடைமுன்பு கோடு போடுவது, கடைதிறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரத்தை நிர்ணயம் செய்வது, முகக்கவசம் அணியவில்லையென்றால் பொருட்கள் கிடையாது என்று பொதுமக்களுக்கு கூறவேண்டும் எனவும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்து வியாபாரம் செய்யவேண்டும் போன்ற உறுதிமொழிகள் ஆலோசனை கூட்டத்தில் மூலமாக எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 


 


Friday, July 03, 2020

மதுராந்தகத்தில் அரசு மருத்துவர், தனியார் மருந்தக உரிமையாளர் கொரோனா தொற்றால் பலி | Madurantakam Sugumar Doctor Death News | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  
அதே போல மதுராந்தகத்தில் கொரோனா தொற்று இப்போது அதிகரித்து வருவதால் நேற்று மதுராந்தகத்தில் மட்டும் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர். சுகுமாரன் மற்றும் மதுராந்தகம் பஜார் வீதியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் பாலாஜி ஆகிய இருவர் பலியாகியுள்ளனர்.   
நேற்று மட்டும் மதுராந்தகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 

Thursday, July 02, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பிளஸ் 2 ரிசல்ட் எப்போது?தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | TN 12th Result 2020 | Vil Ambu News

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.




ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  12-ம் வகுப்பு தேர்வு முடிவை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. 


இதனைபோல், தமிழகத்திலும், முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனவைரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்த தீவிரமாக ஈடுபட்ட நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்தால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11-ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்தப் பின்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட்டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும் என்றார். 

ஜூலை முதல் வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.

மேலும், அனைத்துத் துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

Wednesday, July 01, 2020

தெரிஞ்சிகோங்க..! ஏற்கெனவே டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட ஆப்கள் டவுன்லோட் செய்திருந்தால் அவை வழக்கம் போல் இயங்குமா? மத்திய அரசு விளக்கம் | Tiktok and 59 China Apps Banned | Indian Govt Explanation | Vil Ambu News

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.


இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


டிக்டாக், ஹெலோ, ஷேர் இட், கேம் ஸ்கேனர் என்று கோடிக்கணக்கான இந்தியர்கள் தினசரி பயன்படுத்தும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தடை குறித்த சந்தேகங்களும் எழுந்துள்ளன. அதாவது, புதிதாக டவுன்லோடு செய்ய முடியாது என்றால் பழைய யூசர்கள் தொடர்ந்து மேற்கண்ட செயலிகளை பயன்படுத்தலாமா? போன்ற கேள்விகள் எழுந்தன.


தடை தொடர்பாக சீனாவைச் சேர்ந்த பைடன்ஸ் நிறுவனம் (டிக்டாக் & ஹலோ செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனம்) கூறுகையில், மத்திய அரசின் தடை புதிதாக செயலிகளை டவுன்லோடு செய்ய மட்டுமே. பழைய யூசர்கள் தொடர்ந்து செயலியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. மேலும், மத்திய அரசின் தடை தற்போதைய வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்றும் கூறியிருந்தது.
 

ஆனால், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்தும் மேற்கண்ட செயலிகள் நீக்கப்படும். மேலும், இந்த 59 செயலிகளை பயன்படுத்த முடியாதவாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் (ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள்) தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த வகையிலும் மேற்கண்ட செயலிகளை பயன்படுத்த முடியாது.

Tuesday, June 30, 2020

திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராம கணக்குகளை ஆய்வு | Thirukazhukundram Jamabandhi News | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம் , திருக்கழுக்குன்றம் தாலுக்காவில் 1429-ல் பசலிக்கான வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி துவங்கியது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் .ஜான்லூயிஸ் திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டு தாலுக்காவிற்குட்பட்ட மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய குறுவட்டங்களுக்கான வருவாய் கணக்குகளை பார்வையிட்டார்


இது குறித்து மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகையில் நடப்பு பசலி (1429) வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி 29.06.2020 முதல் அடுத்த மாதம் 15.07.2020 வரை நடைபெறுகிறது

தாலுக்காவிற்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மேற்க்கண்ட தினங்களில் -சேவை மையங்கள் அல்லது URL http://gdp.tn.gov.in/Jamabandhi என்ற இணையதளம் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம் என கேட்டுக் கொண்டார்

வட்டாட்சியர் தங்கராஜ், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்ரகுநாத்,   தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சக்திவேல், வட்ட துணை ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மாரியம்மாள், ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.