வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 11, 2018

கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு



அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்து உள்ளது.


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த 8ந்தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சில மணி நேரத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துவிட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்த தீயில் சிக்கி 6 ஆயிரத்து 700க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் எரிந்து உருக்குலைந்து போய்விட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட்டனர்.

இந்த காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட 9 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் வெளியானது. அவர்களில் 5 பேர் தங்கள் கார்களின் அருகிலும், 3 பேர் வீடுகளுக்கு வெளியேயும், ஒருவர் வீட்டுக்குள்ளும் எரிந்து கரிக்கட்டைகள் போல கிடந்ததாக பட்டி கவுண்டிஷெரீப் கோரி ஹோனியா கூறினார்.

இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.  இது உயர கூடும்.  காணாமல் போன 35 பேரை தேடும் பணியும் நடந்து வருகிறது.  கலிபோர்னியா வரலாற்றில் மிக பெரிய அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இது என ஹோனியா கூறியுள்ளார்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment