வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Health Department News Tamilnadu
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Health Department News Tamilnadu. Show all posts
Showing posts with label Health Department News Tamilnadu. Show all posts

Tuesday, June 06, 2023

லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டு... அகற்றாமல் தையல் போட்ட செவிலியர்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்திருக்கும் உதயேந்திரம் பகுதியைச்சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன், வயது 45. இவர், நேற்று காலை மாதனூர் அருகே லாரியை ஓட்டிச் சென்றபோது, பின்னால்வந்த தனியார் பேருந்து மோதியது.


இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பணிநேரத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், கார்த்திகேயனுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்த செவிலியர்களே தலையில் ஏடாகூடமாகத் தையல் போட்டு சாதாரண வார்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போதும் தையல் போடப்பட்ட தலைப் பகுதியிலிருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை. அவருக்குத் தலையில் கடுமையான வலியும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால், அதிருப்தியடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீபுரம் மலைக்கோடி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 தனியார் மருத்துவர்கள் மீண்டும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் 'இரும்பு நட்டு' இருப்பதைக் கண்டு மருத்துவர்களும், கார்த்திகேயனின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டு அகற்றப்பட்டது.
இரும்பு நட்டு பாய்ந்திருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்

`தொற்று காரணமாக அவருக்கு இரண்டு நாள்கள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும்' என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே, கோபமடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் கேள்வியெழுப்பினர். 

அப்போதும் அவர்கள் உரிய பதில் அளிக்காமல், அலட்சியப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாப்பாத்தி விசாரணை மேற்கொண்டுவருகிறார். மேலும், விரிவான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் அரசு மருத்துவமனை தரப்பில்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் 


திருப்பத்தூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 04, 2022

மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்த 35 பேருக்கு கொரோனா உறுதி..!

இரண்டு தினங்களுக்கு முன் மொத்த 3 பேருந்துகளில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்திருந்தனர். 


இதில் 2 பேருந்துகளில் பயணித்தோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 35 பேருக்கு, இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன்முடிவில் கூடுதலாகவும் சிலருக்கு தொற்று உறுதிசெய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது. 
இதனையடுத்து மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும், அன்னை ஆதிபராசக்தி திருவருளால் பக்தர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மேல்மருவத்தூர் செய்திகள் 


முந்தைய ேல்மருவத்தூர் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 24, 2021

ஒமைக்ரான் பரவல் எதிரொலி.!! முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு.!

ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒமைக்ரான் பரவல் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்க்கூட்டம் நடத்தினார்.


இந்த நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மு. க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; -

பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து, கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி முகாம்களுக்கு சென்று மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஓமிக்ரான் தொடர்பான செய்திகள் 


முந்தைய ஓமிக்ரான் தொடர்பான செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 23, 2021

🧬👹🦠3வது இடத்தில் தமிழகம் - ஒமிக்ரான் பாதிப்பில் சிக்கிய தமிழக மக்கள்.!

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்ந்ததையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.


உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. முதலில் தென்ஆப்பிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் பரவாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், நைஜீரியா Non Risk கொரோனா ஆபத்தில்லா நாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தில்லா நாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படாது. பயணிகளில் 2% பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும். ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டு நேரடியாக வராமல் வேறு நாடுகள் வழியாகவும் பயணித்து வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி மாதிரிகள் எடுக்கப்படும்.

அதன்படி கடந்த 10ம் தேதி இந்த நபரின் மாதிரி சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அவர் ஆபத்தில்லா நாட்டிலிருந்து வந்ததால் முடிவுகள் வரும் வரை விமான நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே மாதிரி எடுக்கப்பட்டவுடன் அவர் சென்னையில் தனது வீட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. உடனே அவரை வீட்டிலிருந்து அழைத்து வந்து கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களை பரசோதனை செய்ய முடிவில் செய்யப்பட்டது. அதன்படி அவருடன் தொடர்பில் இருந்த 6 குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. எனினும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு நெகடிவ் என வந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அவர்களுக்கு அறிகுறிகள் தென்படவே மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் 7 பேருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த போது அதில் S Gene Drop கண்டறியப்பட்டது. S Gene Drop என்றால் இது வரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகள் அல்லாமல் வேறு கொரோனாவாகா இருக்கலாம் என்று அர்த்தம். எனவே இந்த 7 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

மேலும், அவர்களுடன் தொடர்பு மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் டெல்லியும் உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சுகாதார துறை செய்திகள் 


முந்தைய சுகாதார துறை செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்