வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Omicron India
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Omicron India. Show all posts
Showing posts with label Omicron India. Show all posts

Friday, December 24, 2021

ஒமைக்ரான் பரவல் எதிரொலி.!! முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு.!

ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஒமைக்ரான் பரவல் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்க்கூட்டம் நடத்தினார்.


இந்த நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மு. க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; -

பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து, கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி முகாம்களுக்கு சென்று மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஓமிக்ரான் தொடர்பான செய்திகள் 


முந்தைய ஓமிக்ரான் தொடர்பான செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 23, 2021

🧬👹🦠3வது இடத்தில் தமிழகம் - ஒமிக்ரான் பாதிப்பில் சிக்கிய தமிழக மக்கள்.!

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்ந்ததையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.


உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. முதலில் தென்ஆப்பிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் பரவாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், நைஜீரியா Non Risk கொரோனா ஆபத்தில்லா நாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தில்லா நாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படாது. பயணிகளில் 2% பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும். ஒரு நாட்டிலிருந்து புறப்பட்டு நேரடியாக வராமல் வேறு நாடுகள் வழியாகவும் பயணித்து வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி மாதிரிகள் எடுக்கப்படும்.

அதன்படி கடந்த 10ம் தேதி இந்த நபரின் மாதிரி சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அவர் ஆபத்தில்லா நாட்டிலிருந்து வந்ததால் முடிவுகள் வரும் வரை விமான நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே மாதிரி எடுக்கப்பட்டவுடன் அவர் சென்னையில் தனது வீட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. உடனே அவரை வீட்டிலிருந்து அழைத்து வந்து கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களை பரசோதனை செய்ய முடிவில் செய்யப்பட்டது. அதன்படி அவருடன் தொடர்பில் இருந்த 6 குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை. எனினும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு நெகடிவ் என வந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அவர்களுக்கு அறிகுறிகள் தென்படவே மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் 7 பேருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த போது அதில் S Gene Drop கண்டறியப்பட்டது. S Gene Drop என்றால் இது வரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகள் அல்லாமல் வேறு கொரோனாவாகா இருக்கலாம் என்று அர்த்தம். எனவே இந்த 7 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

மேலும், அவர்களுடன் தொடர்பு மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் டெல்லியும் உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சுகாதார துறை செய்திகள் 


முந்தைய சுகாதார துறை செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 19, 2021

சென்னையில் மீண்டும் லாக்டவுனா..? தலைநகரில் தலைகாட்டிய ஒமைக்ரான்...! வெளியான அறிவிப்பு.!!!

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டதால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 


தற்போது தான்மக்கள் மெல்ல மெல்ல தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் டெல்டா வைரஸ் என்ற உருமாறி கொரோனா தற்போது ஓமைக்ரானாக மீண்டும் உருமாற்றம் பெற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் "தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

இதனால் இனி அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப் வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த முடியும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் வீட்டில் அல்லது அரச அமைந்துள்ள மையங்களில் கட்டாயம் ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதோடு, எட்டாவது நாளில் பரிசோதனை மேற்கொள்ளும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" தெரிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா மூன்றாவது அலை எனப்படும் ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Thursday, December 16, 2021

கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் உறுதி.!


கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்