வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-10-21
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 27, 2018

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 32 - 27/10/2018

தினம் ஒரு நாலடியார்



பாடல் - 31.

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை
.

அர்த்தம் :



செல்வத்தை விரும்பி அதனைப் பெருக்கிப் பெருஞ்செல்அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! வராவோம் என்றெண்ணி ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், உன் வாழ் நாட்கள் ஒழிந்தன! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தினம் ஒரு திரிகடுகம் அர்த்தத்துடன் - Daily one Thirukadugam with meaning - 22 - 27/10/2018

தினம் ஒரு திரிகடுகம் :


திரிகடுகம் - 22:
பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்
வித்து; அற, வீடும் பிறப்பு
.

அர்த்தம் :



பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning -32 - 27/10/2018

தினம் ஒரு குறள் :


குறள் - 32:

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
.

அர்த்தம் :


ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, October 26, 2018

செவ்வாய்க்கிழமை ராத்திரி கெஸ்ட் ஹவுஸில் மீட் பண்ணலாம்.. ஆசை ஆசையாய் போய் பார்த்தால்!



பெண் பார்க்க தனியாக சென்றவரின் கதி என்ன ஆனது தெரியுமா ?
 சென்னை: கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி, அதற்காக வரன் பேசப்பட்ட ஒரு பெண்ணை நேரில் பார்க்கலாம்னு ஆசை ஆசையா ஓடிசென்ற இளைஞர் ஆடிப்போய் நின்ற அதிர்ச்சி சம்பவம் இது! சென்னை எம்எம்டிஏ காலனி திருக்குறளார் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் நீண்ட காலமாகவே திருமணம் செய்ய அவரிடம் வற்புறுத்தி கொண்டே இருந்தனர். தட்டிக் கழித்துகொண்டே சென்ற காளிசரண், கடைசியாக 2 வருடத்திற்கு முன்புதான் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டார்.

பெண்ணிடம் அழைப்பு
 ஆனால் 2 வருடமாகவே பெண் ஏதும் அமையவில்லை. இதற்காக மேட்ரிமோனியல் அமைப்புகளிடம் எல்லாம் அணுகி தனக்கேற்ற பெண் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுபோல திருமண வரன் பார்க்கும் அமைப்புகளிடம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வைத்திருந்தார். அதில் ஒரு அமைப்பின் மூலம் ஒரு பெண் காளிசரணுக்கு போன் செய்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மீட் பண்ணலாமா?
 "என் பெயர் பிரியா ஐயர், பெங்களூரில் வேலை பார்க்கிறேன், உங்களை பற்றிய தகவல்களை ஆன்லைனில் பார்த்து விட்டோம். உங்களை நேரில் பார்க்க வேண்டுமே... ஒருமுறை நாம் பார்த்துவிட்டால் கல்யாணம் பேசி முடிக்க வேண்டியதுதான்" என்றார். இதற்கு காளிசரணும், "எப்போது, எங்கே பார்க்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள்" என்றார். பிரியா ஐயர், "செவ்வாய்கிழமை ராத்திரி சங்கம் தியேட்டரில் மீட் பண்ணலாம்" என்றார்.



சங்கம் வேண்டாம் 
 ஆனால் காளிசரணுக்கு திரும்பவும் போன் செய்த பிரியா ஐயர், சங்கம் தியேட்டரில் வேண்டாம், வடபழனி மாலில் பாக்கலாம்" என்றார். திரும்பவும் போன் செய்து, "வடபழனி வேண்டாம்... பொன்னம்மாள் தெருவில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு... அங்க வந்திடுங்க" என்றார். இப்படி மாற்றி மாற்றி இடத்தை சொன்னாலும், 2 வருடமாக பெண் கிடைக்காமல் இப்போதுதான் ஒரு பெண் கிடைத்துள்ளதால், சொன்ன இடத்துக்கெல்லாம் காளி சரண் 'வருகிறேன்' என்றே சொன்னார்.


கெஸ்ட் ஹவுஸ் 
அதன்படி கடைசியாக அந்த பெண் சொன்ன இடத்துக்கு காளிசரண் போனார். கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் எப்படி இருப்பார், எப்படி பழகுவார் என்ற எண்ணங்களுடனே காளிசரண் சென்றார். அப்போது பிரியா ஐயர், கெஸ்ட் ஹவுஸ் வாசலில் நின்றிருந்தார். தன்னை ஊர், பெயருடன் அறிமுகப்படுத்தி கொண்டார். பிறகு, "மாடியில் என் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள், வாங்க போகலாம்" என்று காளிசரணை கூட்டிக் கொண்டு ரூமுக்கு சென்றார். அங்கே 3 ஆண்களும் இருந்தனர்.



போட்டோ எடுத்தனர்
 பெண்ணின் சொந்தக்காரர்கள் ஆயிற்றே என்று புன்னகையுடன் சென்றார். ஒரு வார்த்தைகூட காளிசரண் பேச ஆரம்பிக்கவில்லை, அதற்குள் வந்த 3 பேரும் கத்தியை எடுத்து கொண்டு காளிசரணை மிரட்டினர். செயின், மோதிரம், எல்லாத்தையும் கழட்டு என்று மிரட்டி வாங்கியதுடன், செல்போனை மற்றும் ஏடிஎம் கார்டினை பிடுங்கி கொண்டனர். பிறகு ஏடிஎம் பின்கோடு என்ன என்று கேட்டு அதையும் வாங்கி கொண்டனர். கடைசியாக காளிசரணை தனியாக நிற்க வைத்து போட்டோ எடுத்தனர். ஒருவேளை தங்களை பற்றி வெளியே போய் சொன்னால் இந்த போட்டோவை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினர்.


4 பேர் அடையாளங்கள்
 ஆனாலும் இப்படி ஒரு பெண்ணை நம்பி ஏமாந்து எல்லாத்தையும் இழந்து விட்டோமே என்பதை காளிசரணால் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நேராக வடபழனி போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரையும் கொடுத்து, வந்திருந்த 4 பேர் பற்றின அடையாளங்களையும் சொன்னார். இதுகுறித்து போலீசார் சம்பந்தப்பட்ட கெஸ்ட் அவுஸ் சென்று அங்கு விசாரணை நடத்தி வருவதுடன், அந்த தெருவில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்து வருகிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


திருமணமாகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை



திருமணமாகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

 
ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய தம்பி வடிவேலு (வயது 40). இவர் வேலூரில் தங்கி இருந்து பேக்கரிகளுக்கு சரக்கு வினியோகிக்கும் வேலை செய்து வந்தார். வடிவேலுக்கு திருமணமாகவில்லை என்பதால் அவர் மிகுந்த விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடிவேலு, தனது அண்ணன் சங்கரை பார்க்க ஆவடி வந்தார். அப்போது அவர் தனக்கு 40 வயதாகியும் திருமணம் ஆகாததை சங்கரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வடிவேலு பின்னர் வீடு திரும்பவில்லை. இது பற்றி அறிந்து சங்கர் தனது தம்பி, வடிவேலுவை தேடி வந்தார்.


இதற்கிடையே சேக்காடு பிரதான சாலையில் வடிவேலு மயங்கிய நிலையில் கிடப்பதாக சங்கருக்கு தகவல் கிடைத்தது. சங்கர் உடனே அங்கு சென்று பார்த்த போது, வடிவேலு மதுபோதையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சங்கர், வடிவேலுவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.


இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 12.30 மணியளவில் வடிவேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts