வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-11
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 22, 2018

சற்றுமுன் [விடுமுறை] அறிவிப்பு விவரம் கீழே லிங்க்ல்



திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. 


மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி  ஆகிய வட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




[விடுமுறை] சென்னை உட்பட பிற மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை உள்ளதா..?



தொடர் மழை காரணமாக நாளை சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக காலை  தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


உ.பியை உலுக்கிய சம்பவம்... 5 வயது சிறுமிக்கு 12 வயது சிறுவன் பாலியல் தொல்லை!



உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கலான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் புதன் கிழமை நடந்துள்ளது.

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுவன் வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஹரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபாச இணையதளங்களால், பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுபடி, சமீபத்தில் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்தநிலையில், 12 வயது சிறுவன், 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


போதையில் தெருநாயை கூட்டாக பலாத்காரம் செய்த ‘குடி மகன்கள்’..



மும்பையில் போதையில் இருந்த நான்கு ஆண்கள் சேர்ந்து தெருநாய் ஒன்றை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையின் மால்வானி சர்ச் அருகே வசித்து வருபவர் சுதா பெர்னாண்டஸ். தினசரி அப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பது அவரது வாடிக்கை. அப்படியாக கடந்த வாரம் சனிக்கிழமை தெருநாய் ஒன்றிற்கு உணவு அளிக்கச் சென்றுள்ளார் சுதா.


ஆனால், அந்த நாய் மிகுந்த சோர்வுடன் உடலில் காயங்களுடன் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரும் அங்கு விரைந்து வந்தார். எப்போதும் அவர்களைக் கண்டால் பாசத்துடன் ஓடி வரும் அந்த நாய், அன்று இவர்களைக் கண்டு அஞ்சியுள்ளது. அதோடு நகர முடியாமல் அவதிப்பட்டுள்ளது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனால் குழப்பமடைந்த சுதா, நாயை நன்றாக பார்த்தபோது அதன் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு அதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விலங்குகள் நலனுக்காக பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து நாயை கொண்டுபோய் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இதற்கிடையே காயமடைந்த நாயை சம்பவத்தன்று நான்கு இளைஞர்கள் போதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதைப் பார்த்ததாக சுதாவிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அதிகாலையில் 2 மணியளவில் போதையில் இருந்த நான்கு பேர், நாயின் கால்கள் மற்றும் வாயைக் கட்டிப் போட்டுவிட்டு அதனை பலாத்காரம் செய்ததாகவும், நாயின் ஓலத்தைக் கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பார்த்ததும் போதை ஆசாமிகள் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மால்வானி போலீசார் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 11வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் கூறிய குற்றவாளிகள் நான்கு பேரையும் தேடி வருகிறார்கள். போதையில் தெரு நாயை பாலியல் ரீதியாக சிலர் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Post

3 வருடத்தில் 9 சிறுமிகளை வன்புணர்ந்து கொலை.. ராட்சசன் பாணியில் நடுங்க வைக்கும் சைக்கோ கில்லர்!



டெல்லியை சேர்ந்த 20 வயது சைக்கோ கொலைகாரன் 9 சிறுமிகளை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவன் ராட்சசன் பட பாணியில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இவன் பெயர் சுனில் குமார் என்றும், இவன் சொந்த ஊர் ஹரியானா அருகே இருக்கும் குருகிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யும் முன், இவன் அந்த சிறுமிகளை வன்புணர்வு செய்து இருக்கிறான் என்று அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளது.



கைது செய்தார்
கடந்த நவம்பர் 11ம் தேதி குருகிராம் பகுதியில் இவனை போலீசார் கைது செய்தனர். அங்கு 3 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் சந்தேகத்தின் பேரில் இவன் கைது செய்யப்பட்டான். அதன்பின் போலீஸ் விசாரணையில் இவன் சைக்கோ கொலைகாரன் என்று தெரிய வந்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கொலையை ஒப்புக்கொண்டான் 
போலீஸ் விசாரணையில் இவன் சிறுமிகளை கொலை செய்தது குறித்து உளறி இருக்கிறான். அவன் வாக்குமூலத்தின்படி கடந்த மூன்று வருடமாக இவன் கொலை செய்து வந்துள்ளான். மொத்தம் இதுவரை 9 சிறுமிகளை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளான்.


எத்தனை இவன் டெல்லியில் 4 சிறுமியை இப்படி கொலை செய்துள்ளான். ஜான்சி, குவாலியர், குருகிராம் ஆகிய பகுதிகளில் மீதி கொலையை செய்துள்ளான். பழைய கொலை வழக்குகளை தேடி, அவர்களின் பெற்றோர்களிடம் இந்த விவரங்கள் தற்போது தெரியப்படுத்தப்படுகிறது.

எப்படி செய்வான் 
இவன் குழந்தைகளை கொலை செய்யும் முன் காலை உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளான். அதன்பின் வன்புணர்வு செய்துவிட்டு கொலை செய்துள்ளான். மேலும் சிறுமிகளை அதிகமாக சித்ரவதை செய்வான் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சைக்கோ கொலை
கொலை செய்யாத மற்ற நேரங்களில் சாதாரண நபர் போல கூலி வேலை பார்த்துள்ளான். சாப்பாடு கொடுப்பதாக சிறுமிகளை மயக்கி கொலை செய்துள்ளான். இவனுக்கு பெரிய மனநல பிரச்சனை இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

கர்ப்பிணி என்றும் பாராமல் கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..



மாற்று சாதி இளைஞரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர், மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுக்கா எல்லேமாலா கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (30). இவர் கேவிஎம் தொட்டியைச் சேர்ந்த ஜோதியை (25) காதலித்து வந்தார்.

இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் ஜோதியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து முத்துராஜ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் ஜோதியின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஜோதி, முத்துராஜை காதலித்து வந்தார்.


14-ஆம் தேதி 
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜோதி வீட்டை விட்டு வெளியே வந்து முத்துராஜை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் வசித்து வந்தார். ஜோதி கர்ப்பமான நிலையில் இருவரும் கடந்த 14-ஆம் தேதி எல்லேமாலா கிராமத்திற்கு வந்தனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ஜோதி தனியாக இருந்தார்  
அப்போது முத்துராஜும், அவரது பெற்றோரும் வெளியே சென்றிருந்தனர். இதையடுத்து ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் கிருஷ்ணய்யா, வெங்கட லட்சுமம்மா, தாத்தா கோவிந்தய்யா, பாட்டி திருமம்மா, ஜோதியின் மாமா கைவாஸ் ஆகியோர் முத்துராஜின் வீட்டுக்கு சென்று ஜோதியிடம் தகராறு செய்தனர்.


கால்வாயில் உடலை வீசிய கொடூரம் 
பின்னர் அவரை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்தி சென்றனர். ஜோதியை கொள்ளேகால் தாலுக்கா சிவனசமுத்திரா பகுதியில் ஓடும் கால்வாய் அருகே அழைத்து சென்றதுடன் அவரது கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டனர். பின்னர் அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.

தலைமறைவு 
தகவலறிந்த போலீஸார் ஜோதியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகிறார்கள். கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற மகளை கொலை செய்ய இந்த பெற்றோருக்கு எப்படிதான் மனம் வந்ததோ.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Post