எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில்,
விரக்தி அடைந்த அந்த பெண்ணின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து
கொண்டார்.
வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த
நிலையில், விரக்தி அடைந்த அந்த பெண்ணின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
செய்து கொண்டார். (தொடர்ச்சி கீழே...)
உடன்குடியில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மகளுக்கு நாளை திருமணம்
தூத்துக்குடி
மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 47). இவர்
உடன்குடி தேரியூரில் டீக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி தேவி.
இவர்களுக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மூத்த மகளுக்கும்,
வேறு மதத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவி ஏற்பாடு
செய்ததாக தெரிகிறது. இதற்கு ஜெயபால் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு
தெரிவித்து வந்தார். இருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் தேவி
திருமணத்துக்கு நாள் குறித்து, அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு கொடுத்து
வந்தார். திருமணம் நாளை (வியாழக்கிழமை) நடக்க இருந்தது.
தற்கொலை
தான்
சொல்வதை கேட்காமல் தனது மகளுக்கு வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து
வைக்க மனைவி முடிவு செய்ததால் ஜெயபால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன்
காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் கடையை முடித்து விட்டு ஜெயபால்
வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் யாரும் இல்லை. ஏற்கனவே மனவேதனையில்
இருந்த அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை
பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து உடனடியாக
குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர்
அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு
செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் உடன்குடியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
எச்ஐவி நோய் தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றியதற்கு பதில் எனக்கு விஷ ஊசி
போட்டு கொன்றிருக்கலாமே என விருதுநகர் கர்ப்பிணி பெண் அழுது கொண்டே
கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி
(24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார்.
அவர் சாத்தூரில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது
கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும்
என்று அறிவுறுத்தினர்.
அனுமதி
2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில்
இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. இதில்
எச்ஐவி பாதிப்புக்குள்ளானவரின் ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. இதனால்
அவர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவரிடம் கூறினேன்
இதுகுறித்து எச்ஐவி நோய் தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி ஒரு தனியார்
தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எனக்கு ரத்த பரிசோதனை
எடுத்தனர். நான் எதற்கு என கேட்டதற்கு எப்பவும் எடுப்பதுதான் என்றார்கள்.
மறுநாள் எனது கணவருக்கும் ரத்தப் பரிசோதனை எடுக்க வேண்டும், அதனால் அவரை
வரசொல்லுங்கள் என்று கூறினர். நானும் என் கணவரிடம் கூறினேன்.
ஒதுக்கி வைப்பது
ரத்த பரிசோதனை எடுத்தவுடன் எனக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக என்னிடம் வந்து
சொன்னார்கள். மிகவும் மனவேதனை அடைந்தேன். இந்த வியாதியை எனக்கு கொடுத்தது
தமிழக அரசுதான். நான் தெருவில் நடக்கும் போது என்னை பிறர் பார்ப்பது என்னை
ஒதுக்கி வைப்பது போல் இருக்கிறது.
தாயுள்ளத்துடன்
நான் சிறுவயதில் இருந்து ஒரு ஊசி கூட போட்டதில்லை. இது போல் எச்ஐவி
தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய அரசு, அதற்கு பதில் எனக்கு விஷம் ஊசி போட்டு
கொன்றிருக்கலாம். இது தொடர்பான அனைத்து அதிகாரிகள் மேலும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும். எங்களை யாரும் ஒதுக்க வேண்டாம். எங்களுக்கு
தாயுள்ளத்துடன் மக்கள் ஆதரவு தர வேண்டும்.
தலைநிமிர்ந்து நடக்க முடியாத நோய்
செய்யாத தவறுக்கு எங்களுக்கு ஏன் இந்த தண்டனை. இது போன்று யாருக்கும்
நடைபெறக் கூடாது என்றார். இந்த பேட்டியை அளிக்கும்போதே அவர் மயங்கி கீழே
விழுந்தார். பின்னர் பெண்ணின் கணவர் கூறுகையில் எச்ஐவி நோய் என்பது
சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாத வகையிலான நோயாகும். நான் நல்லவன்
என்ற ரிப்போர்ட்டை நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்ல முடியுமா,
காண்பிக்க முடியுமா.
தவறை செய்யவில்லை
தமிழக மக்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு
உண்டு. மற்ற யாருக்கும் இதுபோன்ற பாதிப்பு வரக் கூடாது. நோயை நாங்கள்
பரப்பியிருந்தால் நாங்களும் கொலையாளிதான். நாங்கள் இருவரும் எந்த தவறையும்
செய்யவில்லை. எங்களை அறியாமல் இந்த நோயை நாங்கள் யாருக்காவது
பரப்பியிருந்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்தானே என்றார்.
மும்பை கிர்கான் பகுதியில் நடைபெற்ற இந்த அதிர்ச்சியளிக்கும்
சம்பவத்தில், 47 வயதான மகளிர் விடுதி உரிமையாளர் ஒருவர் அவ்விடுதியில்
தங்கியிருந்த அப்பாவி பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பித்த பெண் ஒருவர் டிபி ரோடு காவல்நிலையத்தில் அளித்த
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று
வருகிறது. (தொடர்ச்சி கீழே...)
மும்பை
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மும்பையை சேர்ந்த அந்த
குற்றஞ்சாட்டப்பட்ட நபர், பெண்களுக்கான உண்டு உறைவிட விடுதியை
நடத்திக்கொண்டு அங்கேயே பெற்றொருடன் வசித்துவருகிறார். பாதிக்கப்பட்ட
பெண்கள் ஓராண்டிற்கும் மேலாக அங்கு வசித்து வந்தாலும், கடந்த சில நாட்களாக
அப்பெண்கள் தனியறையில் பேசிய உரையாடல்களை குற்றஞ்சாற்றப்பட்ட இந்த நபர்
மிமிக்ரி செய்துள்ளார்.
சிறிய எலெக்ட்ரிக் அடாப்டரை கண்டறிந்தனர்.
துவக்கத்தில், அவர் தங்களின் உரையாடலை கேட்டிருக்கலாம் என நினைத்த பெண்கள்,
ஒருநாள் தங்கள் அறையில் சிறிய எலெக்ட்ரிக் அடாப்டரை கண்டறிந்தனர். அதை
பெண்கள் கைக்குட்டை கொண்டு மறைத்த நிலையில், பின்னர் அங்கு வந்த விடுதி
உரிமையாளர் கைகுட்டையை கருவியில் இருந்து நீக்குமாறு கூறியுள்ளார்.
புகார்
இதனால் சந்தேகமடைந்த அப்பெண்கள், அக்கருவி தொடர்பாக இணையத்தில் தேடி அது
உண்மையில் ஒரு கேமரா என்பதை கண்டறிந்தனர். கோபமும், அதிர்ச்சியும் அடைந்த
பெண்கள் ,உடனடியாக டிபி ரோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பான ஐபிசி பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்
அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, டிசம்பர் 19 அன்று விடுதி உரிமையாளரை
கைது செய்தது காவல்துறை.
மின்விசிறி, ஜன்னல்கள்
அதிர்ச்சிகரமாக, அந்த நபர் மின்விசிறி, ஜன்னல்கள், மின் சுவிட்ச்கள்
மற்றும் கழிப்பறையிலும் கேமரா பொருத்தியதாக ஒப்புக்கொண்டார். அவருடைய
லேப்டாப்பில் பழைய வீடியோக்களையும் கண்டறிந்துள்ளது போலீஸ் குழு. இந்த
வீடியோக்கள் வேறு யாருடனாவது பகிரப்பட்டுள்ளதா என்பதையும் போலீசார்
விசாரித்து வருகின்றனர். எனினும் வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை
தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
வை-வை கேமரா:
ஒரு சில கேமராக்களில் வை-வை தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்களை
பொருத்தியுள்ளார். இதனால் பதிவாகும் காட்சிகள் இவரின் செல்போனில் இருந்தே
பார்த்துக் கொள்ள முடியும். அதில், எல்இடி பல்ப் போன்றும் கேராக்கள்
இருந்துள்ளன. இதை போலீஸ் வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை வரும் 31ஆம் தேதி நள்ளிரவு 1 மணியுடன்
முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு
சென்னை காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய நீடிக்கும். சென்னை
மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பீச், கிழக்கு கடற்கரை சாலை என புத்தாண்டு
கொண்டாட்டங்கள் களைகட்டும்.
இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில்
ஆண்டுதோறும் சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு விடைபெற்று 2019 புத்தாண்டு பிறக்க உள்ளது.
போலீஸ் கட்டுப்பாடுகள்
சென்னையில் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதி நிர்வாகிகளுடன்
காவல்துறையினர் ஆலோசனை சென்னை ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும், வருகிற 31ஆம்
தேதி இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும்
என நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடு
விதித்துள்ளது.
மேடை அமைக்க தடை
நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளில் நீச்சல் குளங்களை திறந்து வைக்க
கூடாது, அதன்மீது மேடை அமைக்கவும் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை
காவல்துறை விதித்துள்ளது.
பத்திரமாக அனுப்பி வைக்கனும்
மது மயக்கத்தில் இருப்பவர்களை விடுதி நிர்வாகம் பத்திரமாக அனுப்பி வைக்க
வேண்டும் என்றும் அனுப்பப்பட்டவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் சென்னை காவல்துறை தெவித்துள்ளது.
தண்ணீரை வெளியேற்றுக
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது
என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை
முழுமையாக வெளியேற்றி நீச்சல் குளத்தை மூடி வைக்க வேண்டும் என்றும் சென்னை
காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மதுவிற்பனை செய்ய வேண்டும் என்றும்
காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன்,
அவரது நண்பர் என மூவரையும் இரண்டே நாளில் கைது செய்து சிறையில் அடைத்து
காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா திருக்கூர்ணம் பகுதியைச்
சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் மணிவண்ணன் (26).
(தொடர்ச்சி கீழே...)
கடந்த 23-ஆம் தேதி இரவு கரூரை அடுத்த மணல்மேடு பகுதியில் மணிவண்ணனை
கல்லால் தலையை நசுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை
நடத்தி வந்தனர். இதில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மணிவண்ணனை கொலை
செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மணிவண்ணனின் மனைவி காயத்ரி தேவி (21), அவரது கள்ளக்காதலன் கரூர்
மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா கிழக்கூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி
மகன் கமலக்கண்ணன் (20), இவரது நண்பர் ரூபன் ஆகியோரை போலீஸார் கைது
செய்தனர்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி
மத்திய சிறையில் அடைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர்.
கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரண்டே நாட்களில் கண்டுபிடித்த
அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தெரிவித்தார்.
முதல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொலை செய்து விட்டு, அவர்
உயிரோடு இருப்பது போல் மற்றவர்களை நம்ப வைக்க ஆறு மாத காலம் அவரது பேஸ்புக்
பக்கத்தை பயன்படுத்தி வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரச் சேர்ந்த மணிஷ் சின்ஹாவின் மனைவி ராஜேஸ்வரி. கடந்த பிப்ரவரி மாதம்
இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஜுன் மாதம்
தேனிலவிற்காக நேபாளம் சென்றுள்ளனர்.
அங்கு போக்ரா மலைக்குகை அருகே
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, மனைவியை அங்கேயே விட்டு விட்டு
மணிஷ் மட்டும் பீகார் திரும்பினார்.
பின்னர் மனைவியிடம் பேச அவர் பலமுறை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர்
அழைப்பை ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து அவர் கோபத்தில் இருப்பதாக மணிஷ்
நினைத்துள்ளார்.
போலீசில் புகார்:
இந்நிலையில் தனது தங்கையைக் காணவில்லை என ராஜேஸ்வரியின் சகோதரன் போலீசில்
புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மணிஷ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நடந்ததைக் கூறியுள்ளார். அதோடு கடந்த
ஆறுமாத காலமாக ராஜேஸ்வரி அவரது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகள்
வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் உயிருடன் இருப்பதாக
போலீசாரும் கருதினர். தொடர்ந்து அவரைத் தேடும் பணியையும் அவர்கள்
தொடங்கினர்.
சிக்கிய சிக்னல்:
அப்போது அவரது செல்போன் ஆன் ஆனது. செல்போன் சிக்னல் அடிப்படையில் போன்
இருந்த பகுதியை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், ராஜேஸ்வரியின் செல்போனை
ஹரியானா மாநிலம் கோரக்பூரின் பிச்சியா பகுதியைச் சேர்ந்த பிரபல சர்ஜரி
ஸ்பெசலிஸ்ட் தர்மேந்திர பிரதாப் பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. அதனைத்
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் மிகப்பெரிய
திருப்பம் ஏற்பட்டது.
திருமணம்:
தர்மேந்திர பிரதாப் ராஜேஸ்வரியின் முதல் கணவர் ஆவார். தந்தையின்
சிகிச்சைக்காக உடனிருந்தபோது, தர்மேந்திராவுடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம்
ஏற்பட்டுள்ளது. அப்போது இருவீட்டாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம்
செய்து கொண்டனர். பின்னர் தான் தர்மேந்திரா ஏற்கனவே திருமணமானவர் என்பது
ராஜேஸ்வரிக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தர்மேந்திராவைப் பிரிந்த
அவர், அவரது சொத்தில் பங்கு கேட்டு மிரட்டியுள்ளார்.
மிரட்டல்:
இது ஒருபுறம் இருக்க, ராஜேஸ்வரிக்கும் மணிஷுக்கு இருவீட்டார் சம்மதத்துடன்
கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனபோதும்
தொடர்ந்து பணம் கேட்டு தர்மேந்திராவை ராஜேஸ்வரி மிரட்டி வந்ததாகக்
கூறப்படுகிறது. இதனால் அவரைத் தீர்த்துக் கட்ட தர்மேந்திரா திட்டம் தீட்டி
வந்துள்ளார்.
கொல்ல சதித்திட்டம்:
இந்த சூழ்நிலையில் தான், மணிஷும், ராஜேஸ்வரியும் நேபாளம் சென்றது
தர்மேந்திராவுக்கு தெரியவந்தது. நேபாளத்தில் வைத்தே ராஜேஸ்வரியைக் கொலை
செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் தன் நண்பர்கள் இருவருடன் போக்ரா
மலைப்பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அங்கு தான் வந்திருப்பதை ராஜேஸ்வரிக்கு
அவர் தெரியப்படுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத் தான் ராஜேஸ்வரி வேண்டும்
என்றே கணவருடன் சண்டையிட்டு அவரை அங்கிருந்து விரட்டியுள்ளார்.
பேஸ்புக் பதிவு:
பின்னர் தர்மேந்திராவைச் சந்திக்க தனியாகச் சென்றுள்ளார் ராஜேஸ்வரி. அங்கு
திட்டமிட்டபடி ராஜேஸ்வரியை மது அருந்தச் செய்து, நண்பர்கள் உதவியுடன் அவரை
மலையில் இருந்து தள்ளிக் கொலை செய்துள்ளார் தர்மேந்திரா. பின்னர் அவரின்
செல்போனை எடுத்துச் சென்ற தர்மேந்திரா, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக
ராஜேஸ்வரியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இதன்
மூலமாக, ராஜேஸ்வரி உயிருடனே இருந்ததாக இந்த 7 மாத காலம் அனைவரையும்
நம்பவைத்துமுள்ளார்.
கூட்டாளிகளுடன் கைது:
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தர்மேந்திராவையும், கொலைக்கு ஸ்கெட்ச்
போட்டு தந்த அவரது கூட்டாளிகள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
3 மனைவி, 4 இலட்சம் சம்பாத்தியம்... ஒருப் பிச்சைக் காரர் சாரின் ஏகபோக வாழ்க்கை!

தமிழ் படங்கள் பலவற்றில் நீங்கள் இந்த காமெடியை கண்டிருக்கலாம்.
பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நபரிடம் ஆயிரங்களில் பணம் புரளும். அட
எப்படிப்பா இம்புட்டு பணம் என காமெடி காட்சிகள் நகரும். முக்கியமாக மருதமலை
படத்தில் அர்ஜுன், வடிவேலு போண்டா மணி காமெடியை இதற்கு சிறந்த எடுத்துக்
காட்டாக காண முடியும்.
இது சினிமாவில் மட்டும் நிகழும் காட்சி அல்ல. நிஜத்திலும் சில பிச்சைக்
காரர்கள் இலட்சங்களில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு
தெரியாது. அப்படிப் பட்ட ஒரு பிச்சைக் காரர் பற்றி தான் நாம் இந்த
தொகுப்பில் காணவிருக்கிறோம்.
சாக்ரத்பூர் ரயில் நிலையம்
ஜார்கண்டில் இருக்கும் சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் சோட்டூவை எப்போது
போனாலும், பார்க்க முடியும். சில ரயில்கள் கூட இங்கு வாரத்திற்கு ஒருமுறை,
இருமுறை தான் வரும். ஆனால், சோட்டூ வாரம் முழுக்க தினம் தவறாமல் வருகிறார்.
இந்த ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பலர் மாறினாலும், இந்த ரயில்
நிலையத்தை விட்டு மாறவில்லை சோட்டூ.
பிச்சைக் காரர்!
யார் இந்த சோட்டூ? இவர் ஒரு பிச்சைக் காரர். சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில்
தினமும் பிச்சை எடுப்பது தான் இவரது வேலை. அட, பிச்சைக் காரனா... என
ஏளனமாக எண்ண வேண்டாம். ஏனெனில், சோட்டூவின் மாத வருமானம் முப்பது,
நாற்ப்பது ஆயிரங்களை தாண்டுகிறது. இவருக்கு கடைகள் எல்லாம் இருக்கிறது
என்றும் கூறப்படுகிறது.
வெஸ்ட்ஜ்
சோட்டூ வெறும் பிச்சைக் காரர் மட்டுமல்ல, இவர் வெஸ்ட்ஜ் எனும்
சுய சுகாதார பொருட்களை (Health and Personal Care Products) விற்கும்
மெம்பராகவும் இருந்து வருகிறார். சோட்டூ விற்கு கீழ் உடல் இயங்காது. இவரால்
நடக்க முடியாது. தற்போது சோட்டூவிற்கு நாப்பது வயதாகிறது.
சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் வரும் எல்லா ரயில் பயணிகளிடம் பிச்சை
எடுத்துக் கொண்டிருக்கும் சோட்டூ, தனது ரிலாக்ஸ் நேரத்தில் மொபைல்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
4 இலட்சம்!
ஏறத்தாழ தனது பல வேலைகள் மூலம் ஒரு வருடத்திற்கு நான்கு இலட்சம் வரை
சம்பாதிக்கிறார் சோட்டூ. இந்த வருமானத்தை வைத்து, சிம்தேகா (Simdega) எனும்
மாவட்டத்தில் இருக்கும் பந்தி (Bandi) எனும் கிராமத்தில் சொந்தமாக
பாத்திரக் கடை வைத்துள்ளார் சோட்டூ.
3 மனைவிகள்!
சோட்டூவிற்கு மொத்தம் மூன்று மனைவிகள். இவர்கள் மூவரும் இவரது தொழில்
மற்றும் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்கள். மனைவிகளுக்கு ஒரு குறையும்
வைப்பதில்லை சோட்டூ. ஒவ்வொருவருக்கும் மாதாமாதம் எவ்வளவு பணம் வேண்டுமோ,
அதை தவறாமல் கொடுத்துவிடுகிறார் சோட்டூ
ஐ.டி. கார்டு
வெஸ்ட்ஜ் உறுப்பினர் என்ற பெயரில் சோட்டூவுக்கு ஐ.டி. கார்டு கூட
இருக்கிறது. பிச்சை எடுப்பது, வெஸ்ட்ஜ் உறுப்பினராக இருந்து சுகாதாரப்
பொருட்களை விற்பது மற்றும் பாத்திரக் கடை வியாபாரம் என ஏகபோகமாக வாழ்ந்து
வருகிறார் சோட்டூ. இதற்கெல்லாம் மூலதனம் பிச்சை எடுத்த பணம் தான்
என்றாலும், அதில் சோட்டூவின் உழைப்பும் அதிகமாக இருக்கிறது என்பதை யாராலும்
மறுக்க முடியாது.
வாய் மூடி!
எப்போதும் தனது சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் வெளியே பேசமாட்டார் சோட்டூ.
வெகு சிலரிடம் மட்டுமே தனது சொந்த வாழ்க்கை மற்றும் இதர தொழில் குறித்துத்
தெரிவித்துள்ளார். சோட்டூ. இவரது வீடு போட்கா எனும் கிராமத்தில்
இருக்கிறது, அங்கே தான் இவரது மனைவியரும் வாழ்ந்து வருகிறார்கள் என
கூறப்படுகிறது.
குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ் உடல் ஊனமாக இருப்பவர் சோட்டூ. இவர்
ஆரம்பத்தில் பசியின் காரணமாகவே இந்த ரயில் நிலைத்திற்கு பிச்சை எடுக்க
வந்துள்ளார். ஆனால், அப்போது இவர் ஒரு நாளுக்கு 1,000 - 1,200 ரூபாய் வரை
பிச்சை மூலம் வருமானம் ஈட்டியுலாளர். அதன் பிறகு, இவரது வாழ்க்கை மாறியது,
மூன்று திருமணம், வருடம் நான்கு லட்சம் வருமானம் என இப்போது நிம்மதியாக
வாழ்ந்து வருகிறார் சோட்டூ.
மற்றுமொரு உண்மை சம்பவம்...
உண்மையில் இதுப் போன்ற சம்பவம் என் வாழ்விலும் நடந்துள்ளது. எங்கள்
ஏரியாவில் இருந்த கோவில் வெளியே பிச்சைக்கார தாத்தா ஒருவர் திடீரென பகல்
10.30 மணியளவில் இறந்து கிடந்தார். அவரை யாரும் தீண்டக் கூட வரவில்லை.
போலீஸ் வரவழைத்து வரை அப்புறப்படுத்த அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது போலீஸ் வந்து அவரது உடைமைகளை எடுத்து ஜீப்பில் வீசும் போது ஒரு
மூட்டையில் இருந்து செல்லரித்துப் பணக்கட்டுகள் உதிரிந்து கீழே விழுந்தன.
அனைவருக்கும் அதிர்ச்சி.
ஐந்து இலட்சம்!
உடனே அங்கிருந்த போலீஸ் மற்றும் மக்கள் உட்பட அனைவரும் அதை எடுத்து கணக்கிட
ஆரம்பித்தனர். செல்லரித்துப் போன பணத்தை தவிர்த்து, செல்லும் வகையில்
இருந்த பணத்தின் மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட ஐந்து இலட்சத்தை எட்டியது.
அந்த ஐந்து இலட்சம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பிறகு என்ன ஆனது என்பது
யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு ஏன் அவர்
கோவில் வாசலில் பிச்சை எடுத்தார் என்பது மட்டும் அன்றில் இருந்து இன்று வரை
பெரும் கேள்வியாக விளங்கி வருகிறது.
ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28 தேதி வெளியாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட.
சன்
பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன்,
நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.
பேட்ட படத்தின் புரோமோஷனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இப்படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை ஏற்கனவே
வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்ட
திரைப்படத்தின் டிரைலர் வரும் 28ம் தேதி வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினி பிறந்தநாளை
யொட்டி வெளியாக டீசர் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.
பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை காஜல், மொபைல் கேம் விளையாடியதால்
பார்வை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை காஜல் பசுபதி.
இவர் சிம்பு, ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானதை அடுத்து, இவருக்கு
நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. அதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் மட்டும்
நடித்து வந்தார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர் காஜல். ஆனால்
கடந்த சில நாட்களாக அவரை சமூக வலைதளப் பக்கம் அதிகம் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து அவரது ரசிகர் ஒருவர் காஜலுக்கு என்னாச்சு என கேள்வி
எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துள்ள அவர், மொபைல் கேம் விளையாடி கண் பார்வை
காலியாகிடிச்சு. மொபைலை தொடக்கூடாதுன்னு டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லிட்டார்
என பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள்,
காஜலுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
அகிலேஷுக்கு வாக்களியுங்கள் என கூறியதால் ஆத்திரமடைந்த பாஜக தலைவர்
ஒருவர், அந்த நபர் மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது வாயில்
குச்சியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவை
எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் முயற்சித்து
வருகின்றன. (தொடர்ச்சி கீழே...)
இதற்காக பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன.
இந்நிலையில் சம்பல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்
பாஜகவுக்கு எதிராக பேசி வந்தார்.
மேலும் அகிலேஷ் யாதவுக்கே ஓட்டுகளை போடுமாறு சொல்லி வந்தார். அப்போது
அவ்வழியாக வந்த பாஜக தலைவர் முகமது மியா இதை கேட்டு ஆத்திரம் அடைந்தார்.
இதையடுத்து அந்த நபர் மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது வாயில்
குச்சியை விட்டு மியா குத்துகிறார். இது பார்க்கும் போது பாஜகவின்
சகிப்புத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை காட்டுகிறது.
சேலம் அருகே ஆத்தூரில் பள்ளி சிறுவனின் வாயில் துணியை போட்டு அடைத்து
சாக்குப் பைக்குள் போட்டு கடத்த முயன்ற மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகர் அரசு மேல்நிலை பள்ளி அருகே வட
மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்தார். அவர் அவ்வழியாக
பள்ளிக்கு சென்ற ஒரு சிறுவனிடம் பேச்சு கொடுத்தார்.
(தொடர்ச்சி கீழே...)
கையை பிடித்து இழுத்து
பாஷை புரியாததால் அந்த சிறுவனும் ஏதோ விளக்கிக் கொண்டிருந்தான். அப்போது
அந்த மூதாட்டி திடீரென சிறுவனின் கையை பிடித்து இழுத்து சென்றார்.
கோணிப்பை
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாயில் துணியை வைத்து அடைத்து ஒரு
கோணிப்பையில் போட்டு அடைத்தார். இதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து
விட்டனர்.
போலீஸுக்கு தகவல்
பின்னர் அந்த மூதாட்டியை விரட்டி பிடித்து கோணிப்பையை திறந்து பார்த்தனர்.
அதில் சிறுவன் இருந்தான். இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
கைது
அவர்கள் வருவதற்குள் மூதாட்டியை போட்டு சரமாரியாக அடித்தனர். இதையடுத்து
காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு
ஏற்பட்டது.
`பேட்ட' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், அதற்கு அடுத்ததாக
அஜித் பட இயக்குநருடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
`2.0' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்
இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் வருகிற பொங்கலுக்கு
ரிலீசாகிறது.
`பேட்ட' படத்திற்கு பிறகு ரஜினி
முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்
அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம்
லஞ்சம், ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. `முதல்வன்' பட பாணியில்
முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினி அமெரிக்காவில்
இருந்து திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்த
பிறகு ரஜினி அடுத்ததாக `சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத்
இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்துபோனதாகவும், அதன் திரைக்கதையை
மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல்
வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தனுசும் இணைந்து நடிக்க
இருப்பதாக கூறப்படுகிறது.
வினோத் தற்போது,
அஜித்தை வைத்து `பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.
தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்கவிருப்பதாக தகவல்
வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களையும் முடித்த பிறகு ரஜினி - வினோத்
கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் இயக்கும் இரு படங்களையும் முடித்த பிறகே ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.