வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-08-11
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, August 23, 2019

வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா? வெளியான புகைப்படம் | Run World Media

இந்தியாவில் வயிற்று வலி மற்றும் வாந்தியால் கடும் அவதிப்பட்டு வந்த சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது , சிறுமியின் வயிற்றின் உள்ளே சுமார் 1 கிலோவிற்கு மேல் முடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Gonda-வைச் சேர்ந்த பூஜா என்ற 14 வயது சிறுமி கடுமையான வயிற்று வலி மற்றும் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளார். இதனால் பூஜாவின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிடிஸ்கேன் எடுக்கும் படி கூறியுள்ளனர்.


அதன் பின் சிசிஸ்கேன் சோதனையில் வயிற்றின் உள்ளே எதோ உருண்டையாக இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையில், சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் 1.4 கிலோவிற்கு முடி உருண்டை போன்று இருந்துள்ளது.

அந்த சிறுமியிடம் விசாரித்த போது அவருக்கு முடி திண்ணும் பழக்கம்(Rapunzel syndrome) இருந்துள்ளது, இதை அந்த சிறுமியே மருத்துவர்களிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து சிறுமிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் கூறுகையில், இதை அப்படியே கவனிக்காமல் விட்டிருந்தால், சிறுமியின் உயிருக்கூட ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

Thursday, August 22, 2019

ஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி!

கட்டின கணவரை 11 முறை வெட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மனைவி.. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது. நல்லசோப்ரா பகுதியில் வசித்து வரும் தம்பதி சுனில் கதம் - ப்ரனாலி. ஒருத்தருக்கொருத்தர் உயிருக்குயிராக காதலித்தவர்கள்.. கடந்த 2011ம் வருஷம் கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். ப்ரனாலிக்கு 33 வயதாகிறது.


ஆனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையும் தகராறும் நடந்து கொண்டே இருந்தது. நேற்று விடிகாலை 5 மணிக்கு கூட இவர்கள் இருவருக்கும் பயங்கரமான சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, விருட்டென கிச்சனுக்குள் நுழைந்தார்.
 அங்கே காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கணவரை சரமாரியாக வெட்டினார். தொடர்ச்சியாக கத்தியால் 11 முறை கணவரை வெட்டினார். அப்பவும் ஆவேசம் அடங்கவில்லை.. அதனால் இறுக்க பிடித்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார்.

 பிறகு, மாமனார், மாமியாரிடம் கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மருமகள் பேச்சை நம்பவே இல்லை. அதனால் மகனின் கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் சொன்னார்கள்.

இதையடுத்து, சுனிலின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் மனைவியின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கணவனை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.!



விண்வெளி ஆராய்ச்சி உலகை இந்தியா மீது திரும்ப வைத்ததற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம். எனினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் சிவன், படித்ததெல்லாம் அரசுப்பள்ளியில் தான்.

அதிலும் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர் தான் இஸ்ரோ தலைவர் சிவன். இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.! இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அப்துல்கலாம விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார்

சுதந்திர தினம் அன்று சிவனால் வரமுடியாத சூழ்நிலையில் தற்போது தலைமை செயலகத்தில் நேரடியாக வந்து முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார். மேலும் சிவனை பொறுத்தவரை பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்றுள்ளார்.


விக்ரம் சாராபாய் விருது 
அதன்படி 1999-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2017-ம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012-ம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


குடும்பத்தில் முதல் பட்டதாரி 
 சிவன் அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். சிவன் அவர்களின் இரண்டு சகோதரிகளும், சகோதரர் ஒருவரும் வறுமையின் காரணமாக உயர்கல்வியை கூட படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்பு கல்லூரியில் படித்த போது அவரது தந்தைக்கு விவசாயம் செய்ய உதவியதாகவும், அதன் காரணமாகவே அவரது தந்தை அருகில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

37 ஆண்டுகாலம்

சிவன் இளங்களை அறிவியல் கணிதவியல் படிப்பில் 100சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் மனம் மாறிய அவரது தந்தை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவின் சிவனுக்கு வேலை கிடைத்தது, அதுமுதல் கிட்டத்தட்ட 37 ஆண்டுகாலம் இஸ்ரோவில் பணியாற்றிய சிவன் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, க்ரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கம், மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் ஏவும் வாகனம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

"ராக்கெட் மேன்" 

மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக கடந்த ஜனவரி 2018-ம் நியமனம் செய்யப்பட்ட சிவன் இஸ்ரோவின் அனைத்துவிதமான ராக்கெட் ஏவும் நிகழ்ச்சிகளிலும் பங்குவகித்தவர் என்பதால் "ராக்கெட் மேன்" என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நான் பள்ளியில் படிக்கும்போது அணிந்துகொள்ள செருப்பு கூட இல்லை என்றும், தான் முதலில் பேண்ட் அணிந்தது தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த பின்புதான் என்று ஒருமுறை சிவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நைட் நேரம்.. காய் வாங்க கடைக்கு போன 50 வயது பெண்ணை.. கடத்தி சீரழித்த 20 வயது இளைஞர்கள்!

காய் வாங்க போன 50 வயது பெண்மணியை 4 பேர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 2 பேரை தேடும் படலம் நடந்து வருகிறது. காரைக்காலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவர். கணவனை இழந்தவர். ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். மகளை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, மகனுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.


இவர், பரவை மார்க்கெட்டில்தான் காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென பொலிரோ காரில் 4 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் அனைவருமே 20 வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தனர். அந்த பெண்மணியை, 4 பேரும் இழுத்து சென்று காருக்குள் தள்ளி, கடத்திச் சென்றனர்.


பைபாஸ் சாலை அருகே இருட்டு பகுதிக்கு பெண்ணை தரதரவென இழுத்து போன அவர்கள், அங்கு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு காய்கள் வாங்க வைத்திருந்த 6,000 ரூபாய் பணம், செல்போன், நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

 வீட்டுக்கு சென்ற பெண், மகனிடம் நகை,பணம் திருடு போனது பற்றி மட்டும் சொல்லி உள்ளார். நடந்த அக்கிரமத்தை சொன்னால், அசிங்கமாயிடும் என்று நினைத்து சொல்லாமல் இருந்திருக்கிறார். பணம், நகை திருடு போனதால், ஆத்திரமடைந்த மகன், தாயை கூப்பிட்டு கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு போலீசாரிடம் பெண்மணி இதைதான் சொன்னார்.


ஆனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவும்தான், துருவி துருவி கேட்டனர். அதன்பிறகுதான் கூட்டு பாலியல் பற்றி விஷயத்தை சொன்னார் பெண்மணி. இதையடுத்து, போலீசார், உடனடியாகக் அந்தப் பெண்ணை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 காரின் தடயங்கள், சென்ற வழி, இளைஞர்களின் அடையாளங்களை வைத்து நகரில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதன்மூலம் கடத்தப்பட்ட பொலிரோ காரையும், சம்பந்தப்பட்ட சின்னையா, விஜய் ஆகிய 2 இளைஞர்களையும் கைது செய்து, நகை, பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராமு, வெங்கடேஷ் ஆகிய மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.


Tuesday, August 20, 2019

புதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் .

புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே முதியோர் உதவித்தொகை வாங்குவது என்பது யாருக்கெக்கலாம் சாத்தியம்.? எப்படி மற்றும் யாரை அணுகுவது என்பதை பார்ப்போம். 

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று சேலத்தில் முதல்வர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த குறைதீர் முகாம் தமிழகம் முழுவதும் அதிகாரிகளால் அவ்வப்போது நடத்தப்பட உள்ளது. இதுவரை நடந்த சிறப்பு கூட்ட குறைதீர் கூட்டத்தில் முதியோர் ஓய்பூதியத்திற்கான மனுக்கள் தான் அதிகம் வந்துள்ளதாக முதல்வல் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.



 மேலும் புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே எனவே முதியோர் உதவித்தொகை வாங்குவது என்பது யாருக்கெக்கலாம் சாத்தியம்.? எப்படி மற்றும் யாரை அணுகுவது என்பதை பார்ப்போம்.
தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் என்ற ஒரு திட்டத்தினை 22.1.1962ம் ஆண்டில் தமிழக அரசு கொண்டுவந்தது. இந்த திட்டத்தில் ஆரம்பத்தில் 20 ரூபாய் நிதியுதவினை அரசு வழங்கியது.படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ.1000 அரசால் வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டம் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை திட்டம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 15லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது



விண்ணப்பிக்க யாருக்கு தகுதிகள் 
 60வயதை கடந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் தகுதியுடையவர்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மகன் / 18 வயதுக்கு மேற்பட்ட மகன் வழி பேரன் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் (விவாகரத்து நடந்த 5 ஆண்டுகள்) விதவை பெண்கள் (40வயது கடந்தவர்கள்) மாற்று திறனாளிகள் (60சதவீதம் ஊனம்) கண்பார்வை அற்றவர்கள். ஆதரவற்ற கண்பார்வையற்றவர்களுக்கு மற்றும் ஆதரவற்ற உடல் ஊனமுற்றோருக்கு வயது வரம்பில்லாமல் முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.


எப்படி விண்ணப்பிப்பது 
முதியோர் உதவித்தொகை படிவத்தின் படி விண்ணப்பிக்க வட்டாட்சியரிடம் வேண்டும். விண்ணப்பத்தில் முத்திரை கட்டண வில்லை எதுவும் ஒட்ட தேவையில்லை. மனுதாரரின் வயதுக்கு ஆதாரமாக வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொள்ளலாம்(அல்லது) அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அல்லது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வயது குறித்தான சான்று பெறலாம்.



வட்டாட்சியர் விசாரிப்பார் 
 உரிய விசாராணைக்குப் பின்னர் வட்டாட்சியர் முதியோர் உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட அதே மாதத்தில் முதல் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் இது குறித்து விண்ணப்பதாரர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதி முடிவு.
 போட்டோ நகல்கள் 
 வட்டாட்சியர் உத்தரவிட்டவுடன் மனுதாரர் மூன்று புகைப்பட நகல்கள் எடுத்து வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். உத்தரவில் புகைப்படம் ஒட்டப்பெற்று வட்டாட்சியரால் அத்தாட்சி செய்யப்பட்டு ஒரு நகல் மனுதாரருக்கும் ஒரு நகல் கிராம நிர்வாக அலுவலருக்கும் அனுப்பப்படும். ஒரு போட்டோ நகல் வட்டாட்சியர் அலுவலக பதிவேட்டில் ஒட்டப்பெற்று மனுதாரரின் கைரேகை அல்லது கையொப்பம் பெற்று வைக்கப்படும். அதன்பிறகு மாதம் மாதம் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.




ஒரு வருஷத்துல 2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..? அப்ப மத்தவங்களுக்கு.. ?

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் மீண்டும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருப்பது போலத் தான் தெரிகிறது. இந்த வேலை இழப்புப் பிரச்னை ஆட்டோமொபைல் துறையில் தொடங்கியதை கண் கூடாகப் பார்த்தோம். மற்ற துறைகளில்..? வங்கி, 

 

இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல், லாஜிஸ்டிக்ஸ், உள் கட்டமைப்புத் துறை என பல துறை சார் நிறுவனங்கள் வழக்கத்தை விட குறைவாகவே ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என கேர் ரேட்டிங் நிறுவனம் சொல்லி இருக்கிறது.
 இந்த விவரங்களை சுமாராக 1,000 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளில் இருந்து திரட்டி இருக்கிறார்களாம். இந்தியாவின் சேவைத் துறை தான் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுத்து இருக்கிறார்களாம்


 இமேஜ் பிரச்னை
 இப்படி வழக்கத்தை விட குறைவாக ஆட்களை வேலைக்கு எடுப்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் 2019 காலாண்டில் வளர்ச்சி சரிந்திருப்பதற்கும், நுகர்வோர் தேவை குறைந்திருப்பதற்கும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறதாம். பிரதமர் நரேந்திர மோடிக்கோ, இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்னையால், சர்வதேச அளவில் முதலீடு செய்யத் தக்க நாடாக இருக்கும் இந்தியாவின் இமேஜ் பெரிய அளவில் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

 2017 - 18-ல்.

 இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு கடந்த மார்ச் 2017-ல் 54.4 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 2018 முடிவில் இந்த எண்ணிக்கை வெறும் 57.8 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறது. ஆக சுமாராக 6.2 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் கடந்த 2017 முதல் 2018 வரையான ஒரு வருடத்தில் அதிகரித்து இருக்கின்றன என திடுக்கிடும் தகவலைச் சொல்லி இருக்கிறது கேர் ரேட்டிங் அமைப்பு

 தற்போதைய நிலை 

 அதை விட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா..? மார்ச் 2019-ல் நிலவரப்படி இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு வெறும் 60.3 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறதாம். அதாவது மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரையான ஒரு வருடத்தில் சுமாராக 4.3 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. ஆக கண் முன்னே வேலை வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டு இருப்பதை பகிரங்கமாகப் பார்க்க முடிகிறது. உற்பத்திப் பிரச்னை

 உற்பத்திப் பிரச்னை

 இரும்பு, ஸ்டீல் மற்றும் சுரங்கம் சார் வேலைகளில் உற்பத்தி குறைந்து இருப்பதாலும், வங்கி சார் கடன் பிரச்னைகளாலும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதாம். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற விருந்தோம்பல் துறைகளில் பணியாளர்களை வேலைக்கு எடுத்து சம்பளம் என்கிற பெயரில் செலவை அதிகரித்துக் கொள்ள விரும்பாமல், அவுட் சோர்ஸிங் செய்வது அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறதாம்.
 வங்கிகள்

 இந்த வேலை இழப்பு பிரச்னைகளில் வங்கிகளும் தப்பவில்லை. வங்கிகளில் கூட தங்கள் வேலைகளைச் செய்து கொடுக்க, வேறு ஒரு நிறுவனத்திடம் அவுட் சோர்ஸ் செய்வது, இருக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அல்லது செயல்பாடுகள் அடிப்படையில் வேலையில் இருந்து நீக்குவது என பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டே தன இருக்கிறார்களாம். அதையும் தாண்டி பல பலவீனமான அரசு வங்கிகளில் புதிதாக ஆட்களை எடுப்பதற்கும் தடை விதித்து இருக்கிறார்களாம்.

.

ATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ..! இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..?.


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான். இப்போது இந்தியாவில் ஏடிஎம் கார்ட்களைப் பயன்படுத்தும் அனைவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறது. டிஜிட்டல் பேமென்டுகளை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் கார்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் கார்டு சேவைகளை யை அகற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் முறையை ஊக்குவிக்கும் விதமாக, இந்த பிளாஸ்டிக் கார்டு திட்டத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள எஸ்.பி.ஐ, இதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.



ஐந்தில் ஒரு பங்கு
  டெபிட் கார்டுகளையே என்றும், இது நாட்டின் மக்கள் தொகை அளவில் ஐந்தில் ஒரு பங்கினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கூறியுள்ள எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னேஷ் குமார், டெபிட் கார்டுகளை அகற்றுவது எங்கள் விருப்பம், அவற்றை எங்களால் அகற்ற முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றும் கடந்த திங்கட்கிழமையன்று annual Fibacல் கூறியுள்ளார். மேலும் நாட்டில் 3 கோடி கிரெடிட் கார்டுகளும், 90 கோடி டெபிட் கார்டுகளும் உள்ளன என்றும் கூறி உள்ளார்.


பிளாஸ்டிக் பயன்பாடு
  இந்த பிளாஸ்டிக் அட்டைகளை குறைப்பதன் மூலம், நாட்டை டெபிட் கார்டு குறைவாக உள்ள நாடாக மாற்றுவதற்கு, எஸ்.பி.ஐ திறவுகோலாக இருக்கும். மேலும் இதற்காக தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு வசதியாக, மொபைல் மூலம் பணம் பெறும் யோனோ கேஷ் ஆப்பை பற்றியும் கூறியுள்ளார். மேலும் இந்த யோனோ கேஸ் ஆப்பை ஒருவர் பயன்படுத்தும் போது, அவர்களுக்கு ஏடிஎம்கள் தேவை இருக்காது. .
நோ கார்ட் 
 அவை இல்லாமலேயே அவரால் பணத்தை எடுக்க முடியும். அதோடு கார்டு இல்லாமலேயே, கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு, அதன் வணிக நிறுவனத்திற்கு பணங்கள் செலுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது 68,000 யோனோ கேஸ் பாயிண்டுகள் அமைத்துள்ளதாகவும், இது இன்னும் 18 மாதங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விரிவாக்கம் மேலும் டெபிட் கார்டு உபயோகத்தை குறைக்கலாம் என்றும் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.


யோனோ 
 இது தவிர இந்த யோனோ தளம் கிரெடிட் கார்டு தளமாகவும், சில பொருட்களை வாங்குவதற்கு கடனையும் கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டெபிட் கார்டுகள், உங்களது பாக்கெட்களின் இருக்கும் தேவை குறைவாகவே இருக்கும் என்றும் குமார் கூறியுள்ளார். ஒருவேளை இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால், இனி டெபிட் கார்ட்கள் எனப்படுகின்ற ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் இந்தியாவில் ஏழை எளிய மக்கள் எப்படி வங்கிச் சேவையைப் பயன்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை. .




விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..!

மத்திய அமைச்சகம் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,351 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இது குறித்து சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-


 மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெற உள்ளது. இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்ற தகவல்களை ssc.nic.in அல்லது sscsr.gov.in என்னும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம். 


 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.


Monday, August 19, 2019

வீடு வாங்கப் போறீங்களா..? எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..! அது என்ன..?



 இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியிடம், ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப் போகிறதாம். மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகித அடிப்படையில் ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறதாம். இந்த நடவடிக்கையால் வங்கியில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை, 2019- 20 நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலாவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்களாம். காஷ்மீர்ல ஒரு வீட்ட வாங்கிப் போட்ருவோமா..? சதுர அடிக்கு சுமாராக ரூ. 3,000 தானாம்..! 


 
குறைப்பு 
 கடந்த ஜூலை 2019-ல் தான் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன்களைக் கொடுக்கத் தொடங்கியது. ஆக புதிதாக ஜூலை 2019-க்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே ஆர்பிஐயின் ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைத்தன. ஜூலை 2019-க்கு முன் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கவில்லை.


 ஆலோசனை 
 தற்போது ஜூலை 2019-க்கு முன் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருந்தவர்களுக்கும், ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைக்க ஆலோசித்து வருவதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னேஷ் குமார் சொல்லி இருக்கிறார். இப்படி ஜூலை 2019-க்கு முன்பே கடன் வாங்கியவர்களுக்கு ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதப் படி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் கணக்கிட்டால் சுமார் 0.30% முதல் 0.70% வரை வட்டி குறையுமாம்.
 
 கணக்கு
 தற்போது ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 2.25 சதவிகிதம் கூடுதல் வட்டி கணக்கிட்டால் 7.65 சதவிகிதம். இது தான் ரெப்போ வட்டி விகித அடிப்படையில் வரும் வட்டி. இதன் மீது 0.40% முதல் 0.55 சதவிகிதம் வரை கூடுதல் வட்டியை வைத்துக் கணக்கிட்டால் 8.05 முதல் 8.20 சதவிகிதம் வரை வட்டி வருகிறது. எஸ்பிஐ வங்கி, ரெப்போ ரேட் அடிப்படையிலான வட்டி விகிதத்தை அனைத்து வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் அமல்படுத்தினால் சுமாராக 8.05% முதல் 8.20%-க்குள் வீட்டுக் கடன் வாங்கலாம்.


 தற்போதைய நிலை 
 தற்போதைய நிலை ஜூலை 2019-க்கு முன், 75 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிய வீட்டுக் கடன்களுக்கு, எஸ்பிஐ வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு 8.35 சதவிகிதம் முதல் 8.90 சதவிகிதம் வரை வீட்டுக் கடனுக்கு வட்டி வசூலித்து வருகிறார்கள். இது முந்தைய மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்ட் லெண்டிங் ரேட் அடிப்படையில் கணக்கிடப்பட்டவை. கடந்த பிப்ரவரி 2019-ல் இந்த எம் சி எல் ஆர் வட்டி விகிதமும் 0.30 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.

Saturday, August 17, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் | Anaikunnam stone Quarry issue | Run World Media

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் ஊராட்சியில் சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கிராம பொது மக்களால் கிராம சபை கூட்டமானது புறக்கணிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.


மேற்கண்ட புறக்கணிப்பு போராட்டத்திற்கு காரணம் என்னவெனில் "ஆனைக்குன்னம் ஊராட்சியில் கல்குவாரி வரப்போகிறது" என்பதை அறிந்து கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016-2017 மற்றும் 2017-2018, 2018-2019 ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொது மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்படி இயற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இதுநாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத ஊரக வளர்ச்சி துறை, கனிம வளத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டு  போராட்டம் நடைபெற்றது.

மேற்படி ஆனைக்குன்னம் கிராமத்தில் தற்போது கல்குவாரி உள்ள பகுதிக்கு அருகே தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்குவாரியின் வழியேதான் எலப்பாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் செல்வதில் மிகவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கல்குவாரியின் அதிக சப்தம் மற்றும் சிதறல்களின் காரணமாக ஆனைக்குன்னம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் "மான், மயில்" போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் அழிந்து கொண்டே வருகிறது.

எனவே, இந்த "கல்குவாரியினை சீல் வைத்து பொதுமக்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துமா இந்த அரசு...?" என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | கனமழை காரணமாக விடுமுறை | Run World Media

கனமழை காரணமாக  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் மழை பொழிந்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் திரு.மோகனசுந்தரம் அறிவித்தார்.