வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-02-16
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, February 20, 2020

பெண் பயணிகளுடன் ‛கடலைபோட' பஸ் டிரைவர்களுக்கு தடை | Bus Drivers are getting warning to talk with Ladies Passengers

பேருந்தில் முன் பக்கம் அமரும் பெண் பயணிகளிடம் பேசிக்கொண்டே ஓட்டுவதற்கு டிரைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




பயணம் என்றாலே பஸ், ரயில் தான் பாதுகாப்பானது என்ற நிலையில், அப்படியான பஸ் பயணத்தையும் சில டிரைவர்களும், அவருடன் முன் பக்கம் அமர்ந்து பேச்சு கொடுத்து வருபவர்களும் பரலோகத்திற்கு செல்லும் பயணமாக மாற்றுகின்றனர்.


தொலைதூர பயணத்தில் டிரைவர் அசதியாக இருந்து தூங்கி விடக்கூடாது என்பதற்காக அவருடன் அவ்வப்போது பேச்சு கொடுத்து வரலாம். ஆனால், அதையே வசதியாக வைத்துக்கொண்டு பெண்களிடம் டிரைவர்கள் கடலை போட்டுக் கொண்டே வருவதால் வண்டியில் இருக்கும் மற்றவர்களின் நிலை அதோகதியாகி விடுகிறது.
 

பேச்சில் கவனம் செலுத்தும் டிரைவர்கள், ரோட்டில் கவனம் செலுத்தாமல் வண்டியை எங்கேயோ கவிழ்த்து விடுகின்றனர். பெண்களுடன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்கள், பெண்கள் முன்னே தனது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட, மொத்த பயணிகளின் உயிரையும் பணயம் வைப்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. இதனால், பஸ்சின் உள்ளே இருக்கும் சில பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.


இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், நேற்று (பிப்.,19) சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பஸ்சின் முன் பக்கம் அமரும் பெண்களிடம், பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் பேசக்கூடாது.


அவ்வாறு விதியை மீறி நடக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கண் இமைக்கும் நேரத்தில் கூட விபத்து நிகழும் என்பதால், டிரைவர்கள் கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிடுவது நல்லது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

இனி டோல்கேட்டுகளில் நோ பிஸினஸ் | Small Buisness are not allowed here after at any toll plazza | Run World Media

சுங்கச் சாவடிகள் என்றாலே நினைவுக்கு வருவது நேர விரயம் மற்றும் பண விரயம் தான். ஆனால் தற்போது Fastag செயல்முறைக்கு வந்தபின்னர் நேர விரயம் என்பது ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.



ஆனால், இதற்கும் அப்பாற்பட்டு நமக்கு நினைவில் வருவது என்னவெனில் டோல்கேட் அருகிலே உள்ள சிறு கடைகளும், கையேந்தி வியாபாரிகளும் தான்.


ஓடும் வாகனங்களில் ஏறி, இறங்கி இவர்கள் தங்களுடைய வயிற்றுப்பிழைப்பிற்காகவே சில அபாயகரமான வேலைகளைச் செய்கின்றனர்.

சில சமயங்களில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவதன் காரணமாக அருகே வரும் வாகனங்களை கவனிக்காமல் இவர்களுக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமோ அல்லது சில சமயங்களில் உயிர்போகும் நிலையோ கூட ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் இதே நிலையே.


இதனால் சுங்கச்சாவடி அருகே உள்ள வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்வதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக சுங்கச்சாவடி அருகே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்படி இந்த தடையை மீறுவோர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையினையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அவர்கள் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடியருகே உள்ள சிறு வியாபாரிகளுக்கு துண்டுபிரச்சுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




என்னதான் இதுபோன்ற சிறுவியாபாரிகளின் பிழைப்பு கெட்டாலும், இந்த வியாபாரிகளின் உயிர், இவர்களின் குடும்பத்தின் நிலை மற்றும் வாகன ஓட்டிகளின் குடும்பம் நிலையை யோசிக்கும் பட்சத்தில் இதுபோன்ற சில எச்சரிக்கைகள் வரவேற்கத்தக்கதே என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

Tuesday, February 18, 2020

சோத்துப்பாக்கத்தில் வேப்ப மரத்தில் திடீரென வடியும் பால் | கூட்டம் அலைமோதுகிறது | Neem Tree Milk in Sothupakkam Temple

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கத்தில் (மேல்மருவத்தூர்)உள்ள ஶ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வேப்ப மரத்தில் சுமார் 4.30 மணியளவில் திடீரென பால் வடிவதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.



சோத்துப்பாக்கம் - வந்தவாசி சாலையில் NVM திருமண மண்டபம் அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள இந்த கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதைக் காண தற்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர்.

 


பொண்டாட்டிக்கு 4 பேரோட தொடர்பு.. சந்தேகப்பட்ட கணவர்.. "கம்" போட்டு ஒட்டி.. ஷாக்கடிக்கும் சம்பவம்! Wife Husband Crime News

இப்படி ஒரு கொடுமை எந்த ஊரிலும் நடந்திருக்குமான்னு தெரியலை. மனைவிக்கு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்ட கணவர், ஒரு சூப்பர் க்ளூ கம்மை வாங்கி மனைவியின் பிறப்புறுப்பில் ஒட்டி விட்டார். இதனால் வலியில் துடித்து அலறிய அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துள்ளனர். 
 

அந்த கிறுக்குப் பிடிச்ச கணவரின் பெயர் டென்னிஸ் முமோ. 36 வயதாகிறது. இவருக்கு எப்பப் பார்த்தாலும் தன்னோட மனைவி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டார். குறிப்பாக நான்கு ஆண்களுடன் உறவு இருப்பதாக அவரே நினைத்துக் கொண்டார்.


இதனால் கோபமடைந்த அவர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். இந்த நிலையில்தான் ருவாண்டா நாட்டுக்கு ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது. தான் போய் விட்டால் மனைவி என்னவெல்லாம் செய்வாளோ என்று பயந்த அவரது குறுக்குப் புத்தி வேறு விதமாக யோசித்தது. விலை உயர்ந்த சூப்பர் க்ளூ கம்மை வாங்கினார். 

பின்னர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி கம்மை அவரது பிறப்புறுப்பில் தடவி ஒட்டி விட்டார். பின்னர் ருவாண்டா கிளம்பிப் போய் விட்டார். கம் ஒட்டப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளானார் முமோ மனைவி. சிறு நீர் கழிக்கக் கூட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டார். வலியில் அலறித் துடித்த அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

டாக்டர்கள் அவருக்கு அவசரமாக சிகிச்சை அளித்து கம்மை அகற்றி நிவாரணம் அளித்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முட்டாள் முமோவைக் கைது செய்தனர். தற்போது முமோ வேறு மார்க்கமாக தனது மனைவியை பழி வாங்கக் கிளம்பியுள்ளாராம். 

அதாவது அந்த நாட்டுச் சட்டப்படி கணவருக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்குத் தெரியாமல் கணவரோ தகாத உறவு வைத்திருந்தால் 100 சவுக்கடி தண்டனையாக தரப்படும். அந்த தண்டனையை தனது மனைவிக்குத் தர வேண்டும் என்று இப்போது அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் முமோ. இதுதொடர்பாக அவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளாராம். 
இதுதொடர்பாக முமோ கூறுகையில், அவளது செல்போன் மெசேஜ் எல்லாம் ஆண்களுக்கே போயுள்ளது. பல ஆண்களுக்கு தனது நிர்வாணப் படத்தையும் அனுப்பியுள்ளார். எனவே அவர் என்னை ஏமாற்றி விட்டார். துரோகம் செய்து விட்டார். அதனால்தான் நான் கம் ஒட்டினேன். நான் ருவாண்டோ செல்லவிருந்த சமயத்தில் சில ஆண்களை சந்தித்து ஜாலியாக இருக்க திட்டமிட்டிருந்தார். 

இதனால்தான் வேறு வழி தெரியாமல் கம்மை ஒட்டினேன் என்று கூறியுள்ளார் முமோ. அதுக்காக இப்படியாப்பா பண்ணுவ.. என்னவோ போங்கடா!!

கவலைய விடுங்க.. சொந்த ஊரில் இல்லாவிட்டாலும் இனி வாக்களிக்கலாம்! Voter at anywhere... Indian Elections


இனி நீங்கள் சொந்த ஊரில் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்!
 தேர்தலின் போது நீங்கள் சொந்த ஊரில் இல்லாமல் வெளியூரில் இருப்பதால் வாக்களிக்க வீட்டிற்கு வர முடியவில்லையா? இதற்கு தீர்வு வந்துவிட்டது.


சென்னை ஐஐடி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் சேர்ந்து  புதிய தொழில்நுட்பத்துடன் இந்த பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது. இந்த தொழில்நுட்பப்படி நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இனி உங்கள் தொகுதிக்கு வாக்களிக்க முடியாது.  
பிளாக் செயின் சிஸ்டம் மூலம் புதிய தொழில்நுட்பத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உங்களுடைய வாக்குச்சாவடிக்கு  செல்லாமலே, வாக்கு செலுத்தலாம்.

கடந்த பொதுத் தேர்தலில் 30 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் வாக்களிக்க முடியவில்லை. இதில் பலர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வரமுடியவில்லை. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, இந்திய தேர்தல் ஆணையம் சென்னை ..டி.யுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கவுள்ளது.  
இந்த திட்டம் தற்போது ஆராய்ச்சி வடிவில் இருப்பதால் இந்த தொழில்நுட்பம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த தொழில்நுட்பம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியிருப்பதாவது, "வெவ்வேறு பகுதிகளில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் தங்கள் வாக்குரிமையை மாற்றுவர், ஆனால் இது தற்காலிகமாகக் குடியிருக்கும் மக்களுக்கு வாக்களிக்கக் கடினமாக இருக்கும், விரைவில் வாக்காளர் .டியுடன் ஆதார் இணைப்பதற்கான திட்டம் சட்ட அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும்  இனிவரும் நாட்களில், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் மாதிரி நடத்தை நெறிமுறை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
 
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், வாக்காளர் எந்தவொரு பகுதியில் இருந்தும் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் இந்த நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.