செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பொறகால் ஊராட்சியில், நன்னிலம் டாக்டர்.செந்தில்
டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக சுமார் 300 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு கொரோனா
நிவாரண உதவியாக அரிசி 19.05.2020 அன்று வழங்கப்பட்டது.
பொறகால் ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும்
மக்களில் பெரும்பாலானோர் தினக்கூலி வேலைக்கு செல்வதையே தங்களது பிழைப்பாதரமாக கொண்டுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள
கொரோனா தடுப்பு ஊரடங்கு
உத்தரவு காரணமாக பொருளாதார ரீதியாக இப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதால் அவர்களுக்கு
தேவையான அரிசியானது நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.பி.செந்தில் தலைமையில், தானம் வயலக
பரஸ்பர இயக்கத்தின் ஆலோசகர் ஆதி.இராமலிங்கம் முன்னிலையில் வழங்கப்பட்டது. பொதுமக்கள்
சமூக இடைவெளியை பின்பற்றி முறையாக அரிசி பைகளை பெற்றுச் சென்றனர்.
இந்த நலத்திட்ட உதவிகளுக்காக பொறகால் கிராம
மக்கள் டாக்டர்.செந்தில் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தை வெகுவாக பாரட்டினர். இந்த நிகழ்வின்போது
பொறகால் ஊராட்சி திமுக செயலளார் ஜோதி உடனிருந்தார்.
No comments:
Post a Comment