வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சற்றுமுன்] - மதுராந்தகத்தில் இறுதி ஊர்வல வாகனம் மீது மோதிய இருசக்கர வாகனம் தீப்பிடிப்பு | Madurantakam Bike Accident Fire News | Vil Ambu News | Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 09, 2021

[சற்றுமுன்] - மதுராந்தகத்தில் இறுதி ஊர்வல வாகனம் மீது மோதிய இருசக்கர வாகனம் தீப்பிடிப்பு | Madurantakam Bike Accident Fire News | Vil Ambu News | Tamil Latest News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இறுதி ஊர்வல வாகனம் சென்றுகொண்டிருந்தது. அச்சமயத்தில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல் வேன் இறுதி ஊர்வல வாகனத்தின் மீது மோதியது. 



இதனால் இறுதி ஊர்வல வாகனம் தனித்தனியாக கழன்று உருகுலைந்தது. மேலும், இறுதி ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்ட வயதானவரின் உடல் தூக்கி வீசப்பட்டது. மேலும், பின்னால் வந்த இருசக்கர வாகனமானது இறுதி ஊர்வல வாகனத்தின்மீது பலமாக மோதியதால், இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. 

இந்த விபத்தில் சுமார் 5-ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர்சேதம் ஏதுமில்லை. சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


No comments:

Post a Comment