வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Ladies Special
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Ladies Special. Show all posts
Showing posts with label Ladies Special. Show all posts

Tuesday, December 28, 2021

திருமணத்திற்கு தயாராகும் பெண்களே.!! முதல்ல இத படிங்க...!

திருமணத்தன்று ஒப்பனை செய்துகொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.


இது திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.

உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும். முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொழில்நுட்ப மற்றும் பொது செய்திகள் 


முந்தைய தொழில்நுட்ப மற்றும் பொது செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 24, 2021

பெண்களுக்கு நடிகை சாய் பல்லவியின் அட்வைஸ்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் சாய்பல்லவி. தற்போது தெலுங்கில் ஷியாம் சிங்கராய், விராட பருவம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. 


சமீபத்தில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில்,
‘‘நாம் செய்யும் பணியினால் சுற்றி இருப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடிந்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். எனது நடிப்பின் மூலம் மற்றவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நன்றி. மகிழ்ச்சியாக இருக்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு நாம் நடித்துள்ள படத்தின் மூலம் வினோதம் கிடைக்க வேண்டும். இப்படி யோசித்துத்தான் கதைகளை நான் தேர்வு செய்கிறேன்.

நடிப்பு, நடனம், மருத்துவம் இதை தவிர்த்து எனக்கு மிகவும் ஆர்வத்தை கொடுக்கும் விஷயம் தியானம். என்னைப் பற்றி என்னை சுற்றி இருக்கும் நிலைமைகளைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசை கொள்கிறேன்.

முக்கியமாக என்னைப்பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தலைமுறை பெண்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் உங்களை நீங்கள் கவுரவித்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் நேசியுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அப்படி இருந்தால்தான் மற்றவர்கள் மீது உங்களுக்கு ஒரு நேர்மறையான உணர்வு ஏற்படும்” என்றார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சினிமா செய்திகள் 


முந்தைய சினிமா செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, May 22, 2019

ஆபீஸ் போற பெண்களா நீங்க? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

ஒரு அலுவலகத்தில் எத்தனை பேர் வேலை செய்தாலும் ஒரு குழுவிற்கான தலைவராக இருப்பது எப்பவுமே தனிச் சிறப்பு தான். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. ஏனெனில், ஒரு குழுவை, அதுவும் மாறுபட்ட மனநிலைக் கொண்ட பணியாளர்களை சரிவர இணைத்து இயக்கும் தலைமைப் பண்பு என்பது கூடுதல் திறனே.

அதிலும், குறிப்பாக நங்கள் ஒரு பெண் பணியாளராக இருந்தால் உங்களின் மீதான ஆதிக்கமும், எதிர்பார்ப்புகளும் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அலுவலக சூழலில் கூட்டத்தில் ஒருவராக இருந்து தனியே தலைவராக உருவெடுக்கும் பெண் பணியாளர்களுக்கான சில சிறந்த வழிமுறைகள் இதோ.

சுய மதீப்பீடு!

உங்களுக்கான தனி மதிப்பீட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை செயல்படுத்திக் காட்டுங்கள். குறிப்பாக, உங்களது மேலாளர் உங்களுக்கு என நிர்ணயித்துள்ள இலக்கை விட கூடுதலாக அமைத்து செயல்படுங்கள்.
 உங்களது குழுவையும் செயல்படுத்த ஊக்குவியுங்கள். இதனை நீங்கள் அடையும் போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும்.

புதிய உத்திகள்!

பிற பணியாளர்கள் செய்வதைப் போலவே தொடர்ந்து செய்து கொண்டிருக்காமல் ஏதேனும் புதிய திட்டத்தை செயல்படுத்துங்கள். அணித் தலைவர் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செயல்படுத்தி அதில் தனித்து காட்ட வேண்டும். இதையே உங்களது குழுவும் விரும்பும்.

முடிவெடுப்பதில் முன்னுரிமை!

ஏதேனும் ஓர் விசயத்தை செய்யும் முன் முடிவெடுப்பதை முன்னுரிமையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது உயரதிகாரிக்காத காத்திருப்பதைக் காட்டிலும் நீங்கள் எடுத்த முடிவை உயரதிகாரி ஏற்கும் வகையில் செயல்படுத்துங்கள்.
 ஒரு வேலை உங்களது உயர் அதிகாரி எடுக்கும் முடிவு தறவாக இருந்தால் தயங்காமல் அதனை தெரிவித்து விடுங்கள். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும். உங்களது தலைமைப் பண்பையும் இது ஊக்கத்தோடு காட்டும்.

திறன் மேம்பாடு! 

ஒரு வேலை ஒதுக்கியுள்ளார்கள், அதனை சிறப்பாக செய்து கொண்டே இருக்கிறேன் என்று இல்லாமல் அடுத்த வேலையை நோக்கி நகருங்கள். அல்லது உங்களது வேலையிலேயே கூடுதல் திறனை இணையுங்கள். புதிதுபுதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். 
அவற்றை சக பணியாளர்களிடமும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால் உங்களை விட கற்ற ஒருவரால் நீங்கள் பின்தள்ளப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுப்புடன் செயல்படுங்கள்!

எனக்குறிய வேலையை முடிப்பது மட்டும் தான் வேலை என்று இல்லாமல் உங்களைச் சுற்றியுள்ள, உங்களது அணியில் உள்ள பிற பணியாளர்களின் வேலையையும் முடிக்க உதவுங்கள். 
செய்த வேலைக்கு ஊதியம் என்று இல்லாமல் இது என் நிறுவனம் என்ற மனநிலையை ஏற்படுத்துங்கள். இங்கே ஏற்படும் லாபத்திலும், நஷ்டத்திலும் எனக்கும் பங்குண்டு என உணர்ந்தால் மட்டுமே ஒரு அலுவலகத்தை வயர்ச்சியை நோக்கிநகர்த்த முடியும்.

கற்றுக்கொள்ளுங்கள்!

 அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்கிறேன், பணி முடிந்தவுடன் வீடு திரும்புகிறேன் என்று இல்லாமல் வேலை நேரத்திலேயே புதிது புதிதான விசயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
 உங்களது பணிக்கு தொடர்புடைய அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் வேற்று துறையினர், வேறு குழு உறுப்பினர்களிடமும் நட்புடன் பழகுங்கள். அவர்களது பணி குறித்தும் கற்றுக் கொள்ளுங்கள்.

எதற்கும் தயங்காதீர்கள்! 

 இது அலுவலகங்களில் பொதுவாக நடக்கும் ஒன்றுதான். ஏதேனும் புதிதாக செய்து தவறாகிவிட்டால் மேல் அதிகாரி திட்டுவார், வேலைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என்று பயந்தே புதிய வேலையை செய்யாமல் இருப்போம். அவ்வாறு இல்லாமல் தைரியத்துடன் உங்களது பணியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துங்கள். எடுத்த புதிய காரியத்தில் வெற்றியை நிலைநாட்டுங்கள். இது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும்.


Sunday, January 20, 2019

டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்

டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களை குறித்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பகீர் தகவலை வாக்குமூலமாக வெளியிட்டார். டப்ஸ்மாஷ் என்ற ஆப் ஒன்று பிரபலம் ஆனது. அதில் வரும் சினிமா பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அனைத்து தரப்பினரும் வாயசைத்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தனர். 
எனினும் இவை சம்பந்தப்பட்டவரின் செல்போனில் மட்டுமே இருக்கும். அவராக பார்த்து யாருக்காவது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்வார்டு செய்தால் உண்டு. ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள டிக் டாக் செயலியில் உலகம் முழுக்க பார்க்கும் படி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஆபாச ஆடை 
இதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் என மிகவும் ஆபாசமாக ஆடை அணிந்து கொண்டு செக்ஸியாக நடனம் ஆடுகின்றனர். இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இதை அனைவரும் பார்க்கின்றனர்.




பரபரப்பு தகவல் 
இது போன்ற பெண்களை குறி வைத்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஐடி நிறுவன ஊழியர்களை குறிவைத்தும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மசாஜ் சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).

குண்டர் சட்டம்
இவர் மீது சென்னை முழுவதும் 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் தப்ப முயன்ற பூங்கா வெங்கடேசனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




டிக் டாக் செயலி 
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் பாலியல் தொழிலை விரிவுப்படுத்த நவீன முறையை பயன்படுத்தலாம் என நினைத்த போதுதான் டிக் டாக் செயலி நினைவுக்கு வந்தது. இதில் பல பெண்கள் வீடியோக்களை வெளியிடுகின்றனர்.


சாட்டிங் 
அவர்களுள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமாக நடனமாடி பெண்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுள் யாருக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது என்பதை வைத்து அவர்களிடம் சாட்டிங்கில் நட்பாக பேசுவோம்.


தொழில் நடத்த 
பின்னர் அவர்களிடம் நைஸாக பேசி பாலியல் தொழிலுக்குள் கொண்டு வருவோம். அதோடு இந்த வீடியோக்களுக்கு மயங்கி ஆபாசமாக கமெண்ட் போடும் ஆண்களையும் விடாமல் சாட் செய்து அவர்களை அந்த பெண்களுடன் உறவு கொள்ள வைப்போம். இப்படித்தான் பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.

Monday, November 19, 2018

ஓடும் பஸ்சில் ஒரு டெலிவரி.. ரபீனாவுக்கு ஆண் குழந்தை.. தாயும் சேயும் நலம்..



பஸ் நடுரோட்டில் போய்க் கொண்டிருந்தபோதே அந்த பெண்ணுக்கு டெலிவரி ஆகிவிட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆலமியான். இவரது மனைவி ரபீனா. தங்கள் மாநிலத்தில் வேலை எதுவும் கிடைக்காமல் பிழைப்பு தேடி இங்கே வந்தார்கள். பழனி அருகே ஒரு உள்ள கோழிப்பண்ணையில் ரெண்டு பேரும் வேலை செய்து வந்தார்கள்.

 இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இப்போது ரபீனா 3-வது நிறைமாத கர்ப்பம். இந்நிலையில், ஆலமியான், ரபீனாவையும் 2 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு, 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு பழனிக்கு பஸ்ஸில் ஏறினார். நிறைமாத ரபீனாவை ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் பஸ்சில் ஏற்றினார்.



பிரசவ வலி 
பஸ் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பக்கம் போய் கொண்டிருந்தது. அப்போது ரபீனாவுக்கு திடீரென பிரசவ வலி வந்துவிட்டது. அதனால் வலி தாங்க முடியாமல் ரபீனா கத்தினார். இதை பார்த்து மற்ற பயணிகளும் ஷாக் ஆனார்கள். நடுவழியில் என்ன செய்வதென்றும் யாருக்குமே தெரியவில்லை.

பெண்கள் உதவி 
ஒரு சில பெண்கள் மட்டும் ரபீனாவுக்கு உதவ வந்தார்கள். மேலும் டிரைவரிடம் சென்று வண்டியை ஓரங்கட்ட சொன்னார்கள். அது அது புறநகர் பகுதி வேறு. பக்கத்தில் கடைகள், வீடுகள், ஆஸ்பத்திரி என எதுவுமே கிடையாது. அதனால் டிரைவரும் பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தினார்.


திக் திக் நிமிடங்கள் 
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் எல்லோரும் கீழே இறங்கிவிட்டார்கள். உதவிக்கு வந்த பெண்கள் மட்டும் பஸ்சுக்குளேயே இருந்து ரபீனாவிற்கு உதவினார்கள். கீழே நின்றிருந்த டிரைவர், கண்டக்டர், ஆலமியான் உள்ளிட்ட எல்லா பயணிகளுக்கும் திக் திக் என்றே இருந்தது.

ஆண் குழந்தை 
கொஞ்ச நேரத்தில் குழந்தை சத்தம் கேட்டுவிட்ட பிறகுதான் எல்லோருக்கும் நிம்மதியும் சிரிப்பும் வந்தது. ரபீனாவுக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இப்போது பிறந்திருப்பது ஆண் குழந்தை. அதன் பின்னர் எல்லோரும் பஸ்சுக்குள் ஏறி குழந்தையை பார்த்தனர்.


சிகிச்சை டிரைவரும் 
இப்போது வண்டியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஓட்டினார். அங்கு ரபீனாவை பத்திரமாக இறக்கிவிட்டு விட்டு அனைவரும் பஸ்சில் திரும்பி சென்றார்கள். பிறகு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரபீனாவிற்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாயும் - சேயும் நலம் 
ஓடுகிற பஸ்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற செய்தி அந்த பகுதியில் பரவிவிடவும், எல்லோரும் குழந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வர ஆரம்பித்துவிட்டனர். இப்போது தாயும் - சேயும் சவுக்கியமாக இருக்கிறார்கள்!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Friday, November 09, 2018

பெண்கள் பிரசவத்திற்கு பிறகு எவ்வளவு நாட்கள் வெளியில் செல்லக்கூடாது


பிரசவித்த பெண்கள் ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
பிரசவித்த பெண்கள் ஒரு மாதத்திற்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய பெண்களுக்கு அது சாத்தியமில்லை என்றாலும், இந்த ஒரு மாதத்திற்கு நாள் நம்பிக்கையில் ஏதேனும் உண்மைகள் உண்டா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.


‘‘கர்ப்பத்தின் 9 - 10 மாதங்கள் வரை பெண்ணின் உடல் ஏகப்பட்ட ஹார்மோன் மாறுதல்களைச் சந்திக்கிறது. அவளது தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பிலும் மாற்றத்தை உணர்ந்திருப்பாள். பிரசவமானதும் இயற்கையாக அவளது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்துவிடும். எளிதில் தொற்றுகளுக்கு உள்ளாகக்கூடும் என்பதால்தான் அவளை பாதுகாப்பான சூழலில் ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.


இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.


சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.


அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும். இவற்றையும் கருத்தில் கொண்டுதான் 40 நாள் ஓய்வு வலியுறுத்தப்படுகிறது.


தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’  

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts