வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: January 2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 31, 2019

தன்னை விட 17 வயது சிறியவரான சயீஷாவை மணக்கும் ஆர்யா

ஆர்யா திருமணம் செய்யப் போகும் நடிகை சயீஷா அவரை விட 17 வயது சிறியவர் ஆவார்.




ஆர்யாவும், சயீஷாவும் கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு சூர்யாவின் காப்பான் படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மார்ச் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆர்யா சயீஷா ஆர்யாவை விட 17 வயது சிறியவர். படங்களில் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சயீஷா நிஜத்திலும் சீனியரை திருமணம் செய்கிறார். மனம் ஒத்துப் போனால் வயது முக்கியம் இல்லை என்பதை சயீஷா புரிந்து வைத்துள்ளார்.


நஸ்ரியா  

முன்னதாக மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தன்னை விட 12 வயது சிறியவரான நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்தபோது வயது வித்தியாசம் பற்றி பேச்சு கிளம்பியது. ஆனால் வயது முக்கியம் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.


சாய்ரா பானு  

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் உறவுக்கார பெண் தான் சயீஷா. திலீப் குமாருக்கும் அவரின் மனைவி சாய்ரா பானுவுக்கும் இடையே 22 வயது வித்தியாசம் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மனமொத்த தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள்.


திருமணம் 

ஆர்யா, சயீஷா காதலிப்பதாக பேச்சு கிளம்பிய போது இதுவும் கடந்து போகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள். வாழ்த்துக்கள் ஆர்யா, சயீஷா.

அரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பெற்றோர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், 


பீரோ, இருக்கைகள், மின் விசிறிகள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்களே இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக மேள தாளங்கள் முழங்க பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் உள்ளது அரசு நடுநிலை பள்ளி. இங்கு 150 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.


மாணவ மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள் பீரோ, இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கினார்கள்.


பெற்றோர்கள் அளித்த அனைத்து பொருட்களும் ஊர் சமுதாய நல கூடத்திற்க்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேள தாளம் முழங்க பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். தங்கள் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Wednesday, January 30, 2019

தாய் வீட்டிலிருந்து 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக வந்த மனைவியை கணவர் விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




முத்தலாகிற்கு எதிராக லோக்சபையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அவ்வாறு கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் எட்டாவில் பெண் ஒருவர் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட பாட்டியை நலம் விசாரிக்க சென்றிருந்த அவரை காணாமல் கணவர் போன் செய்துள்ளார்.



உத்தரவு  

அப்போது தாய் வீட்டில் இருப்பதாக கூறிய மனைவியை இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு வர வேண்டும் என கணவர் உத்தரவிட்டதற்கு அவரும் சரி என அடித்து பிடித்து கிளம்பினார்.


பெண் அதிர்ச்சி 

அப்படியும் 10 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் சகோதரருக்கு போன் செய்து முத்தலாக் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.


சிசு கலைந்தது 

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் திருமணத்தின் போது எனது பெற்றோர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் என் கணவர் வீட்டார் என்னை பலமுறை தாக்கியுள்ளனர். இது போல் என்னை அடித்ததால் எனது வயிற்றில் வளர்ந்த சிசு கலைந்து விட்டது.


அரசுக்கு கோரிக்கை 

எனது குடும்பம் வறுமையில் வாடுவதால் கணவர் வீட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது. இந்த ஆத்திரத்தில் வெறும் 10 நிமிடம் தாமதமாக வந்த என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார். இந்த விவகாரத்தில் அரசு எனக்கு உதவ வேண்டும்.


கண்ணீர் விட்ட பெண் 

எனக்கு நீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் எனக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டக திட்டம்

மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார்.





மராட்டியத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்த திட்டத்தை நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு இந்த குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 4 லட்சம் பெண்களுக்கு இது முதல் பிரசவமாகும். இந்த 4 லட்சம் பேருக்கும் குழந்தைகள் நல பரிசு பெட்டகம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பரிசு பெட்டகத்தில் குழந்தைகளின் உடைகள், பிளாஸ்டிக் டைபர், மெத்தை, துண்டு, தெர்மோமீட்டர், மசாஜ் எண்ணெய், கொசு வலை, போர்வை, பிளாஸ்டிக் தரைவிரிப்பு, சாம்பு, பொம்மை, நகவெட்டி மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கியிருக்கும். இந்த பரிசு பெட்டகம் ஒன்றின் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும்.

ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, January 29, 2019

வேலைவாய்ப்பு - மெட்ரோ ரெயில்வேயில் வேலை. விண்ணப்பிக்க கடைசி நாள் 2-2-2019

மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் ஒன்று பெங்களூரு மெட்ரோ.



சுருக்கமாக பி.எம்.ஆர்.சி.எல். என அழைக்கப்படும் இந்த நிறுவனம் தற்போது ஜூனியா் என்ஜினீயா், செக்சன் என்ஜினீயர் மற்றும் மெயின்டனர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 174 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் மெயின்டனர் பணிக்கு 134 இடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 21 இடங்களும், செக்சன் என்ஜினீயர் பணிக்கு 19 இடங்களும் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூ‌னியர் என்ஜினீயர் பணிக்கும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் செக்சன் என்ஜினீயர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-2-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bmrc.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? விண்ணப்பிக்க கடைசி நாள் 31-01-2019

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, பல்வேறு அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர் முதல் உதவி கலெக்டர் வரை பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை தேர்வு மூலம் நிரப்பி வருகிறது.





இவற்றில் பெரும்பாலானவர்கள் எழுதும் தேர்வுகளாக குரூப்-4 மற்றும் குரூப்-2 தேர்வுகள் விளங்குகின்றன. பல்வேறு துறைகளில் ஏராளமான காலியிடங்கள் இந்த தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவது இதற்கு முக்கிய காரணமாகும். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அதே வேளையில் டி.என்.பி. எஸ்.சி. நடத்தும் முக்கிய தேர்வுகளில் ஒன்று குரூப்-1 தேர்வு. தமிழக அரசின் உயர் பதவி களுக்கான தேர்வாக இது விளங்குகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற தமிழக அரசின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்ட தேர்வுகளாக இந்தத் தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உடற்தகுதியும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.
தற்போது குரூப்-1 பணிகளுக்கு 139 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் உள்ள பணியிடங்கள் எண்ணிக்கையை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். வருகிற 31-ந் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சமூகத்தில் சிறந்த மதிப்பும், நல்ல ஊதியமும் பெற்றுத்தரும் குரூப்-1 பணியை பெறுவதில் இளைஞர்கள் மத்தியில் பெருங் கனவு உள்ளது. உங்கள் லட்சியத்தை வென்றுமுடிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வெற்றி நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்...
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பற்றியும், தேர்வு முறை பற்றியும் முதலில் தெளிவாக அறிந்து கொண்டு தயாராக வேண்டும்.

குரூப்-1 தேர்வின் முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு பட்டப் படிப்பு தரத்தில் இருப்பதால் பள்ளிப் கல்லூரி பாடத்திட்டங்களுடன் பொதுவான தகவல் திரட்டுடன் தயாராவது நல்ல பலன் தரும்.
வினாக்களை ரீசனிங், குவான்டிடேடிவ், ஜெனரல் ஸ்டடி என 3 வகையாக பிரிக்கலாம். ஜெனரல் ஸ்டடியில் பாடத்திட்டங்கள் சார்ந்து மட்டுமல்லாமல், பொது அரசியல், நடப்பு நிகழ்வுகள், கலாச்சாரம், பொருளாதாரம் என எந்தத்துறை சார்ந்த கேள்வியும் கேட்கப்படலாம். எனவே அதற்கேற்ப பரந்த தயாரிப்புகள் தேவை.

ரீசனிங் மற்றும் குவான்டிடேடிவ் பகுதி வினாக்கள் பெரும்பாலும் கணிதம் மற்றும் சூழல் சார்ந்ததாக இருக்கும். விதவிதமான மாதிரிகளுக்கு விடைகண்டறிந்து பயிற்சி பெறுவது, எளிதில் விடையளிக்கவும், அதிக மதிப்பெண் பெறவும் துணை செய்யும்.
மெயின் தேர்வு தாள்-1, தாள் 2, தாள் 3 என பிரித்து நடத்தப்படுகிறது. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நேர்காணல் 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.

மெயின் தேர்வில் வரலாறு, அரசியல், அறிவியல் மற்றும் பொது அறிவு, நடப்பு நிகழ்வு பகுதியில் நுட்பமான கேள்விகளும், கட்டுரை எழுதும் பகுதியும் இடம் பெறும். நேர்காணலில் மேலாண்மைப் பண்புகள் சோதிக்கப்படும்.
தேர்வுக்கான பாடத்திட்டங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பி.டி.எப். கோப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பதிவிறக்கம் செய்து படிப்பது நல்ல பலன் தரும்.

குரூப்-1 பாடத்திட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் வாங்கிப்படித்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளின் வினாக்களை நன்கு பயிற்சி செய்வது சிறந்த பலன் தரும்.
பாடங்களை திரும்பத் திரும்ப படிப்பதுடன், தொடர்முயற்சி செய்வது அதிக மதிப்பெண் பெற்று வெயிட்டேஜ் முறையில் முன்னணி பெற துணை செய்யும்.

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வு போல குறிப்பிட்ட முறைக்குமேல் எழுத முடியாது என்ற கட்டாயம் இல்லை என்பதால் வயதுவரம்பு இருக்கும் வரை மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற முயற்சி செய்யலாம்.

பல வழிகளில் தகவல்களை திரட்டுதல், புரிந்து படித்தல், கடினமான வினாக்களுக்கு எளிய வழிகளில் தீர்வு காணும் முறை, படித்ததை நினைவில் ஏற்றுதல், விடா முயற்சியுடன் படித்தல், மனதில் பாரம் ஏற்றாமல் மனஅழுத்தம் குறைத்து, போதிய ஓய்வு எடுத்து படித்தல், குழுவாக முயற்சி செய்தல், தகுந்த பயிற்சியாளர், உதவியாளரின் ஆலோசனைப்படி நடத்தல் என திட்டமிட்ட முயற்சி உங்களுக்கு வெற்றிக் கனியை எளிதாக பறிக்க உதவியாக இருக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வேலைவாய்ப்பு - அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை - 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31

அனல்மின் நிறுவனத்தில் ‘கேட்’ தேர்வு அடிப்படையில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.




தேசிய அனல்மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி-2019 பணியிடங்களை கேட் 2019 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக பணியிடங்கள் விவரம் : எலக்ட்ரிக்கல் - 47, மெக்கானிக்கல் - 95, எலக்ட்ரானிக்ஸ் - 25, இன்ஸ்ட்ருமென்டேசன் - 25, மைனிங் - 15.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31-1-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், புரொடக்சன், தெர்மல், மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேசன், பவர் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், மைன் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து, கேட் 2019 தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 31-ந் தேதியாகும்.

வேலைவாய்ப்பு - ரெயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலை - 220 பேருக்கு வாய்ப்பு

சென்னை ஐ.சி.எப்.-ல் ரெயில்பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 


மொத்தம் 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பட்டதாரிகளுக்கு 100 இடங்களும், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 120 இடங்களும் உள்ளன. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 30 இடங்களும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 70 இடங்களும் உள்ளன. 
டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு 40 இடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 80 இடங்களும் உள்ளன.
அப்ரண்டிஷிப் விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்புடையவர்கள் பயிற்சி யில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் என்ற இணையதளத்தில் 28-2-2019-ந் தேதி வெளியிடப்படும்.

வேலைவாய்ப்பு - துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019

துணை ராணுவ படையில் 429 ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-








மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்த பிரிவில் தற்போது ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 429 போ் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி சேர்க்கையின் மூலம் 328 ஆண்களும், 37 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். 64 பணியிடங்கள் எல்.டி.சி.இ. (துறையினருக்கான போட்டி) இடங்களாகும்.
இந்த பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 20-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பிளஸ்-2 மற்றும் இன்டர்மீடியட் படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

உடல்தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆண்கள் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையளவு, கண்பார்வைத்திறன் பரிசோதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படுகிறது.


தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019-ந் தேதியாகும்.