வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-05-10
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 21, 2020

பொறகால் ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Doctor Senthil Trust at Poragal | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பொறகால் ஊராட்சியில், நன்னிலம் டாக்டர்.செந்தில் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக சுமார் 300 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி 19.05.2020 அன்று வழங்கப்பட்டது.
பொறகால் ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தினக்கூலி வேலைக்கு செல்வதையே தங்களது பிழைப்பாதரமாக கொண்டுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதார ரீதியாக இப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதால் அவர்களுக்கு தேவையான அரிசியானது நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.பி.செந்தில் தலைமையில், தானம் வயலக பரஸ்பர இயக்கத்தின் ஆலோசகர் ஆதி.இராமலிங்கம் முன்னிலையில் வழங்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முறையாக அரிசி பைகளை பெற்றுச் சென்றனர். 
இந்த நலத்திட்ட உதவிகளுக்காக பொறகால் கிராம மக்கள் டாக்டர்.செந்தில் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தை வெகுவாக பாரட்டினர். இந்த நிகழ்வின்போது பொறகால் ஊராட்சி திமுக செயலளார் ஜோதி உடனிருந்தார். 
2019-ம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ள நல்லமாங்குடி எனுமிடத்தில் டாக்டர். செந்தில் அவர்களால் துவங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனமானது ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், இயற்கை வளங்களை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளையும், கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் பாதித்துள்ள இந்த தருணத்தில் ஏழை மக்களுக்கு தேவையான நல உதவிகளை செய்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான முகக்கவசங்கள் அளித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இராமாபுரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given to Ramapuram Auto Drivers Family | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் மதுரா இராமாபுரம் பகுதியில் மதர் தெரேசா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் முனைவர்.ஜி.கே.தாஸ் ஏற்பாட்டிற்கிணங்க, அன்னை தெரேசா பேரவையின் செங்கை மாவட்ட செயலாளர் அ.டோமினிக் தலைமையில், இராமாபுரம் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் பக்தவட்சலம் முன்னிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைளுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பானது அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு தருணத்தில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்திற்கு இ.எம்.ஐ செலுத்த இயலாமலும், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்தினர்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று ஆதரவற்ற விதவைகளுக்கும் 19.05.2020 அன்று வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்வின்போது, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் இரமேஷ், சைமன் விக்னேஷ் மற்றும் வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Sunday, May 17, 2020

1000 குடும்பங்களுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பில் திருக்கழுக்குன்றம் அருகே அ.தி.மு.க வழங்கிய கொரோணா நிவாரணம் | ADMK Giving Corona Relief at Periyakattupakkam Thirukazhukundram | Vil Ambu News


கொரோணா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
அது போல் காஞ்சி மத்திய மாவட்டம்  (செங்கல்பட்டு மாவட்டம்), திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகாட்டுப் பாக்கம், அமிஞ்சிகரை, வீராபுரம், ரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு  ஒன்றிய அதிமுக அவைத் தலைவரும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான  ரகுராமன் ரெட்டியார் ஏற்பாட்டில் காஞ்சி மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் என கொரோனா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். 
மேலும், ஏழை எளியோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் தமிழக அரசுக்கும், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய அவைத் தலைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 
இதில் மத்திய  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மத்திய மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர். பிரவீன் குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன்,  நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சந்திரபாபு, வள்ளிபுரம் ரவிக்குமார், ஹரிதாஸ், துரை, செந்தில்குமார், மணிகன்டன், அர்ஜுணன் உள்பட பலர் உடனிருந்தனர்

கருங்குழியில் 3 லட்சம் மதிப்பிலானா நிவாரணப் பொருட்களை வழங்கிய தொண்டு நிறுவனம் | Corona Relief given at Karunguzhi Town Panchayat Office | Vil Ambu News


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில் சென்னை சேவாலயா தொண்டு நிறுவனம் மற்றும் எப்.சி.ஏ நிறுவனம் இணைந்து 3 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை 350 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு நேற்று வழங்கினர்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 கிலோ அரிசி, அனைத்து விதமாக பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு, பேஸ்ட், சர்க்கரை, உப்பு உள்ளிட்ட 15 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளுடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 10 முகக்கவசம் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரச்சுரம் போன்றவற்றை சேவாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவர் முரளிதரன் மற்றும் எப்.சி.ஏ. நிறுவனத்தின் மேஜர்.ஆசிஷ் சர்மா ஆகியோர் இணைந்து வழங்கினர்.
மேலும், சமூக இடைவெளியுடன் மக்கள் நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்வதற்காக வட்டம் வரைதல், பொதுமக்களின் கைகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.