வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-11
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட  மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் தொடர் கனமழை காரணமாக நாளை 22-11-2018 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை வருவாய் கோட்டத்திற்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். மேலும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


[வேலை வாய்ப்பு] சமையலர், ஓட்டுநர் காலி பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்



சென்னை சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், ஓட்டுநர், சலவையாளர் பணியிடங்களுக்கு டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள 3 சமையலர்கள், 2 ஓட்டுநர்கள், 2 சலவையாளர்கள் பணியிடங்களுக்கு காலமுறை ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
 
இதில், சமையலர், சலவையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் 35 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், இதரப் பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இதரப் பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 15,700 வழங்கப்படும்.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போர் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் 35 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 19,500 வழங்கப்படும்.
 
தொடர்புக்கு: 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு 044 28545123 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

காணோம், தீபிகா கழுத்தில் அதை காணோம்: அழித்துவிட்டாரா, மறைத்துவிட்டாரா?



பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் கழுத்தின் பின்னால் ஆர்.கே. டாட்டூ இல்லாதது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாலிவுட் நடிகை தீபீகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதையடுத்து நாடு திரும்பிய தீபிகா தனது கணவருடன் மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு கிளம்பினார். மும்பை விமான நிலையத்தில் அவர்கள் ஜோடியாக புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர்.

தீபிகா 
தீபிகாவின் கழுத்தின் பின்புறம் ஆர்.கே. என்ற டாட்டூ இருக்கும். ஆனால் மும்பை விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்களில் அந்த டாட்டூ இல்லை. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
திருமணத்திற்கு பிறகு டாட்டூவை அழித்துவிட்டாரா இல்லை மேக்கப் போட்டு மறைத்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்பும் கூட மேக்கப் போட்டு டாட்டூவை 

காதல் 
ரன்வீருக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்தார் தீபிகா. அவர் மீது இருந்த காதலில் அவர் பெயரின் முதல் எழுத்துகளை சேர்த்து ஆர்கே என்று தனது கழுத்தின் பின்புறம் டாட்டூ போட்டார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். ரன்பிர் கபூர் தற்போது நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார்.

பெருமை  
ரன்பிர் கபூரின் பெயரின் இரண்டு எழுத்துக்களை டாட்டூ குத்தியதில் வருத்தம் இல்லை. அவரை பிரிந்த பிறகும் அதை நீக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த டாட்டூவை நான் நீக்கிவிட்டதாக பல முறை செய்திகள் வெளியாகின. ஆனால் அதை நீக்கும் எண்ணம் இல்லை என்று தீபிகா முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பெங்களூரு 
தீபிகா, ரன்வீர் சிங்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற உள்ளது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து வரும் 28ம் தேதி மும்பையில் மீண்டும் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

[வேலை வாய்ப்பு] ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! கடைசி தேதி: 31.12.2018



இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Motor Vehicle Mechanic - 09
பதவி: Motor Vehicle Electrician - 01
பதவி: Welder - 02
பதவி: Tyreman - 01
பதவி: Painter - 01
பதவி: Tinsmith - 01

சம்பளம்:
மாதம் ரூ.19,900
வயதுவரம்பு:
 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தகுதி: 8

தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிக்கும் முறை:

www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

“The Senior Manager, Mail Motor Services,134-A, S. K. AHIRE MARG, WORLl, MUMBA140001"

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2018




அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

என்னய்யா இது, தல ரசிகர்களுக்கு வந்த சோதனை?



விஸ்வாசம் அப்டேட் கேட்டு கேட்டு தல ரசிகர்கள் ஓய்ந்துவிட்டனர். சிவா இயக்கத்தில் அஜித் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்று அறிவித்தார்கள்.
அதன் பிறகு அப்டேட் கொடுக்க மாட்டேன் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் அடம் பிடிக்கிறார்கள். பொங்கல் நெருங்குகிறது ஏதாவது அப்டேட் கொடுங்க என்று அஜித் ரசிகர்கள் தினமும் கேட்கிறார்கள்.



சத்யஜோதி பிலிம்ஸ் 
விஸ்வாசம் பற்றி அப்டேட் கொடுக்காத சிவா மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மீது அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தல, தயவு செய்து இனி இந்த சிவா மற்றும் சத்யஜோதி பிலிம்ஸுடன் சேர்ந்து மட்டும் பணியாற்றாதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பா அஜித்
சிவாவிடம் அப்டேட் கேட்டால் பேபி அனிகா அப்டேட் கொடுத்துள்ளார். தான் அஜித், நயன்தாராவின் மகளாக நடித்துள்ளாக அனிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தான் படம் முழுக்க வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அனிகாவின் பேட்டி தல ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. அனிகா பேட்டி வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.



தர லோக்கல் பாட்டு 
விஸ்வாசம் படத்தில் அப்பா அஜித் தர லோக்கல் பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளதாக அந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தெரிவித்துள்ளார். அந்த பாட்டு ஆலுமா டோலுமாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். வீ ஆர் வெயிட்டிங்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts