வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-12-15
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 25, 2019

மதுராந்தகத்தில் "தூணை பிளந்து காட்சியளிக்கும் ஶ்ரீஉக்கிரநரசிம்மர்" – தமிழகத்திலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார் | Madurantakam Soorakottai Lakshmi Narasimmar

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சூரக்கோட்டை ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில் ஶ்ரீஅனுமந் ஜெயந்தி நாளையொட்டி 108 பால்குட உற்சவ பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. 
இந்த விழாவில் கோயில் நிறுவனர் வேணுதாஸ் சுவாமிகள் தலைமையில் 25.12.2019 காலை 10 மணிக்கு பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஶ்ரீஏரிகாத்தராமர் கோயில் குளத்தின் கரையிலிருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 
 
பின்னர், ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.  பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. 
இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் "தூணை பிளந்து காட்சி தரும் 43 அடி உயர ஶ்ரீஉக்கிரநரசிம்மர் தமிழ்நாட்டிலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார்". அவருக்கு எதிரே 21 அடி உயரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். 
மேலும், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆனைக்குன்னம் ஶ்ரீசஞ்சீவிராயர் திருகோவிலிலும் அனுமந் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

வேலாமூர் மாதா கோவிலில் விமர்சியாக நடைப்பெற்ற "கிறிஸ்துமஸ்" | Velamur Christmas Celebration | Ramapuram

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் பங்கு, வேலாமூர் கிளைப்பங்கில் உள்ள மாதா கோவிலில்  கிறிஸ்துமஸ் பண்டிகையானது வெகுவிமர்சியாக நடைபெற்றது. 


இரவு 2 மணியளவில் ஏசுகிறிஸ்து பிறப்பு திருப்பலி நிகழ்வு நடைபெற்றது. இந்த திருப்பலி நிகழ்வனாது பங்குத்தந்தை அருள்பணி.இம்மானுவேல் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் நடத்தினர். 

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் உலக தாழ்ச்சி, உலக அமைதி, சமாதானம் நிலவவும் மக்கள் நல்ல முன்னேற்றமடையவும் பிராத்தனைகள் நடைப்பெற்றது. 


மேலும், சென்ற ஆண்டு நடந்த அனைத்து பிரச்சனைகளும், தீய பழக்க வழக்கங்களும் மாறி  மனமாற்றத்தோடு இந்த இனிய நாள்முதல் ஆண்டவன் சுகமளிக்கவேண்டும், இருப்பதை பகிர்ந்து வாழவேண்டும், தாழ்ச்சிடன் வாழவேண்டும் போன்ற செய்திகளோடு இந்த திருப்பலியானது 4மணியளவில் முடிவு பெற்றது. 

இத்திருநாளில் ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வேட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் நிறுவனர் டோமினிக் மற்றும் ஏகப்பன், அசோக்ராஜ், திவ்யநாதன், அலெக்சாண்டர், ஹேமாவதி, பிரேமா, பிரமிளா, நிர்மலா ஆகியோர்கள் பங்கேற்றனர். 

Monday, December 23, 2019

இவரு பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க.. இதையெல்லாம் மாத்தமுடியாது.. பிரபல நடிகரை விளாசிய சின்மயி! Chinmayi YG Magendiran Fight

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல நடிகரை நடிகை சின்மயி சரமாரியாக விளாசியிருக்கிறார்.




குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதலில் வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது.
 

அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான இந்த போராட்டம் நாடு முழுவதும் பற்றியது. இதில் மாணவர்களும் இறங்க போராட்டம் வேற மாதிரியாக சென்றது.
 


எதிர்க்கட்சிகள்தான்

தமிழகத்திலும் போரட்டத் தீ பற்றியதால் அலர்ட்டான அரசு, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. எதிர்க்கட்சிகள்தான் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
 


சைட் அடிக்கவே

இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து பிரபல நடிகரான ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்பதை மனதில் வைத்தே போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
 


சின்மயி விமர்சனம்

அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகியான சின்மயி ஒய்ஜி மகேந்திரனின் இந்த கருத்து குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
 


மாத்த முடியாது

அதாவது இந்த மனுஷர் சொல்லும் கருத்தையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை மாற்ற முடியாது. அது நேர விரயம்தான் என்று சாடியிருக்கிறார்.



நெட்டிசன் கருத்து

சின்மயின் இந்த கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. சின்மயின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு கவலையாக உள்ளது. அவருக்கும் மகள் மனைவி இருக்கிறார்கள்.. அவர்கள் எப்படி இதை பார்ப்பார்கள் என்று கேட்டிருக்கிறார்.
 


மீடூவில் புகார்

பாடகி சின்மயி, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திரமேரூரில் குடும்ப அட்டைகளை தாசில்தாரிடம் வீசிய மக்கள் | Pazhaveri Quarrying of Stone Opposing News

போலீசார் பாதுகாப்புடன் கல் குவாரி இயக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பழவேரி கிராமத்தினர், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை, உத்திரமேரூர் தாசில்தார் காலடியில் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், குடியிருப்புகளுக்கு அருகே புதிய கல் குவாரி துவக்கப்பட்டது. இப்பகுதியில், ஏற்கனவே, பல குவாரிகள் இயக்கப்படுவதால், பகுதிமக்கள் அவதிப்படுகின்றனர்.இதனால், புதிய குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், நான்கு மாதங்களாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதியாக, கடந்த வாரம், 14ம் தேதி, குடியிருப்புகளை விட்டு, குடும்பத்தோடு மயானத்தில் குடியேறி, மூன்று நாட்களாக, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, போராடினர். 

வாக்குறுதி 
இதையடுத்து, 16ம் தேதி மாலை, மயானத்திற்கு வந்து மக்களை சந்தித்த காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன், 'கல்குவாரி தற்காலிகமாக செயல்படாது. மேற்கொண்டு,விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, கிராமத்தினர், வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில், குவாரி துவங்க போவதை அறிந்த கிராமத்தினர், நேற்று முன்தினம், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, செங்கல்பட்டு டி.எஸ்.பி., கந்தன், படாளம் மற்றும் சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பில், குவாரி நேற்று காலை இயங்கியது.அப்போது, 100 பெண்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர், போலீசாரிடமும், குவாரி உரிமையாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, குவாரி இயக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆத்திரம்
இதனால், கடும் ஆத்திரமடைந்த கிராமத்தினர், வீடுகளில் இருந்த, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை எடுத்து சென்று, குவாரியில் இருந்த உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரனிடம் கொடுத்தனர்.அவர் வாங்க மறுத்ததையடுத்து, அந்த அட்டைகளை, தாசில்தார் காலடியில் வீசி, 'எங்களுக்கு, அரசின் அடையாளங்கள் தேவையில்லை' எனக்கூறிவிட்டு சென்றனர்.

குடும்ப அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.கல் குவாரி உரிமையாளருக்கு ஆதரவாக, மாவட்ட கலெக்டர், சப் - கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செயல்படுவதாக, பழவேரி கிராமத்தினர் புகார் கூறினர்.'அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என, அவர்கள் கூறினர்.

மாமல்லபுரம் அருகே வேன் - பஸ் மோதல் - ஓட்டுனர் பலி | Mamallapuram Van Bus Accident News | Mahabalipuram Bus Van Accident News

மாமல்லபுரம் அருகே, சரக்கு வேன், ஆம்னி பஸ், நேருக்கு நேர் மோதியதில், வேன் ஓட்டுனர் இறந்தார்.


மரக்காணம் பகுதியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, இளநீர் ஏற்றிய, 'ஈஷர்' வேன், சென்னை சென்று கொண்டிருந்தது.மரக்காணம் தாலுகா, எம்.புதுப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் அய்யனாரப்பன், 39; ஓட்டினார். மற்றொருவர், உடன் பயணம் செய்தார்.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், இரவு, 10:45 மணிக்கு கடந்த போது, சென்னையிலிருந்து, வேதாரண்யத்திற்கு, பயணியருடன் சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், வேனும், நேருக்கு நேர் மோதின.

இதில், வேன் ஓட்டுனர், வேனிலிருந்து துாக்கி எறியப்பட்டு, அங்கேயே இறந்தார். பின்னால் வந்த கார், பஸ்சின் மீது மோதியது. இதில், காரில் இருந்த நான்கு பேர், லேசான காயத்துடன் தப்பினர்; பஸ்சில் இருந்தோர் யாரும் காயமடையவில்லை.

பஸ் ஓட்டுனர் மகேந்திரன், மாமல்லபுரம் போலீசில், இது குறித்து புகார் அளித்தார்.விபத்தால், இத்தடத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீசார், விபத்து வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

Friday, December 20, 2019

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக கள ஆய்வு | Acharapakkam Town Panchayat Field Inspection

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டமும், கருங்குழி பேரூராட்சியில் கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கசடு கழிவுநீர் மேலாண்டை திட்டமானது தமிழகத்திலேயே முதன் முறையாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.

 
இந்த திட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் செயல்படுதவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் மேற்கண்ட திட்டங்களுக்கான கள ஆய்வினை மேற்கொண்டனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவின் பேரில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் இயங்கிவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் கருங்குழியில் உள்ள கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டம் குறித்த பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர். 

இந்த கள ஆய்வின் போது குப்பைகளை தரம் பிரித்தல், குப்பைகளிலிருந்து உரம் தயாரித்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் விளக்கமாக எடுத்துரைத்தார்.  

அதனைத்தொடர்ந்து, கருங்குழி பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டத்தினையும் கன்னியாகுமரி மாவட்ட செயல் அலுவலர்கள் நேரடியாகச் சென்று கழிவறை பயன்படுத்துதல், கழிவறை நீரை வடிகட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.