வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-12-29
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 04, 2020

வந்தவாசியில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி திமுக மறியல் | DMK Strike in Road


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், 1வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பச்சையம்மாள், 30 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், தி.மு.க.,வினர் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வந்தவாசியில், காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் பேசி மறியலை கைவிட செய்தனர்.



* திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில், திருவண்ணாமலை யூனியன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அங்கு ஒரு ஓட்டுப்பெட்டி காலியாக திறந்து கிடந்தது. இதனால், தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம், அந்த ஓட்டுப்பெட்டி மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த பயன்படுத்தப்பட்டவை என கூறியதையடுத்து, வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


* செய்யாறில் தபால் ஓட்டுப்பெட்டியின் சாவி, திடீரென காணாமல் போனதால், பெட்டியின் ஸ்குருவை கழற்றி பெட்டியை திறந்தனர். வந்தவாசி ஓட்டு எண்ணும் மையத்தில், கண்டவரப்பட்டி பகுதிக்கான ஓட்டுப்பெட்டி பூட்டை சாவி மூலம் திறக்க முடியாததால், கல்லால் பூட்டை உடைத்து திறந்தனர். இந்நிலையில், செங்கத்தில் நடந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

[காட்டாங்கொளத்தூர்] பொங்கல் பரிசில் அ.தி.மு.க., விளம்பரம்? | ADMK Ads in Pongal Price in Kattankolathur

அரசின் பொங்கல் பரிசு பையில், அ.தி.மு.க., விளம்பரம் இடம் பெறுவதாக, காட்டாங்கொளத்துார் ஒன்றிய தி.மு.க.,வினர், மாவட்ட கலெக்டரிடம், நேற்று புகார் மனு அளித்தனர்.




மனு விபரம்:தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாயுடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.


இந்நிலையில், பொங்கல் பரிசு பைகளில், அரசு முத்திரைக்கு பதிலாக, அ.தி.மு.க.,வினர் படங்கள் அச்சிட்டு, வினியோகம் செய்வதற்கு, அக்கட்சியினர் தயார் நிலையில், பைகளை வைத்துள்ளனர்.


இது போன்ற பைகள், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அதிகம் உள்ளன.இதை தடுத்து, பொங்கல் பரிசுகளை, அரசு முத்திரையிட்ட பைகளில் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, January 03, 2020

நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கலை...? Unfortunate News

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி என்ற வாசகத்துடன் முருகேசன் என்பவர் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கேதுவார்பட்டியில் வார்டு உறுப்பினராக போட்டியிட்ட முருகேசன் டெபாசிட்டை இழந்தார். 

இந்நிலையில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி கூறி வித்தியாசமான முறையில் அவர் போஸ்டர் அடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



வித்தியாச போஸ்டர் 
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கேதுவார்பட்டியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டு இருந்தார். ஆனால் நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார்.




விரக்தி 
இதனால் விரக்தியடைந்த முருகேசன், நீங்க இப்படி செய்வீங்கன்னு, கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்றும், தோற்கடித்த மக்களுக்கு நன்றி எனவும் கூறி போஸ்டர் ரெடி செய்துள்ளார். இந்த போஸ்டரை டிஜிட்டல் வடிவிலும் சமூக வலைதளங்களில் அவர் உலவ விட்டுள்ளார்.



லந்து 
மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ தெரியவில்லை, எப்போதும் மதுரை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் அடிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலேயே இருக்கும். அந்தளவுக்கு அதில் வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.



உலக அளவில் 
உலகிலேயே தோற்கடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட முதல் போஸ்டர் இது தான் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

[மகிழ்ச்சி தகவல்] | பள்ளி திறக்கும் நாட்கள் ஒத்திவைப்பு | School Leave Extension News Tamilnadu

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேல் அரையாண்டுத் தேர்வையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுப்ட்டிருந்த காரணங்களினால் பள்ளி திறக்கும் தேதி ஜனவரி,4 2020 என அறிவிக்கப்பட்டிருந்தது.




ஆனால், நாளை சனிக்கிழமை முடிந்து மறுநாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் தொடர் விடுமுறை அளித்துவிடலாம் என்ற நோக்கம் மட்டுமல்லாமல், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வரை தொடர்ந்து இழுபறியில் உள்ளதால் ஆசிரியர்கள் பணிக்கு செல்வதில் காலதாமதமாகும் என்ற நோக்கத்திற்காகவும் பள்ளி மறுதிறப்பு தேதியானது ஜனவரி,6 - 2020 திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Wednesday, January 01, 2020

1 லட்சம் ரூபாயுடன் 2020 புத்தாண்டில் அசத்திய மதுராந்தகம் விநாயகர் | Madurantakam Vinayagar Statue decreated with 1 lakh rupees notes

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2020 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்கதர்கள் அன்பளிப்போடு மதுராந்தகம் நகரில் உள்ள ஶ்ரீசக்திபுஷ்ப விநாயகர் திருக்கோயிலில் 1 லட்சம் ரூபாயில் கோர்க்கப்பட்ட மாலையினால் ஜொலிப்புடன் அருள்பாளித்தார் விநாயகர். இதனைக் காண மதுராந்தகத்தினை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பக்கதர்கள் குவிந்தனர். 

 

தென்திருப்பதி திருமலைவையாவூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி படி உற்சவம் | Malaimaiyavur Temple New year celebration news 2020


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேடந்தாங்கல் செல்லும் வழியில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைவையாவூர் மலை மீது  ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 
இத்திருத்தலத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலை மற்றும் திருக்கோயில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது.  
மூலவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வஜ்ராங்கி சேவையிலும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் முத்தங்கி சேவையிலும், மற்றொரு உற்சவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமி பரமபதநாதன் திருக்கோலத்திலும் அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வரிசையில் சென்று பெருமாளை வழிபட்டனர்.  
உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை வேலூர் இணை ஆணையர் செ.மாரிமுத்து,  உதவி ஆணையர்  கே.ரேணுகாதேவி, கோயில் ஆய்வாளர் ஜீவா, கோயில் நிர்வாக அதிகாரி  சோ. செந்தில்குமார் ஆகியோர் வெகுசிறப்பாக செய்திருந்தனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ரூ.75 இலட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆன்மீககுரு பங்காரு அடிகளார் | Melmaruvathur New Year Celebration


2020 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு சித்தர் பீடம் முழுவதும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
மேலும், தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் அதிக பக்தர்களை கொண்ட பெருமைக்குரியதும் ஆன்மீக நம்பிகைக்கும் உரிய ஸ்தலமாக விளங்குகிறது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம். இரவு 11 மணிக்கு ஆங்கில புத்தாண்டை வரவேற்க வழிபாடுகளை மேற்கொண்டு காலை சுமார் 05.00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூசைகள் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் அவர்கள் துவக்கத்துடன் நடைபெற்றது. 
மேலும், ஆன்மீக இயக்கத் துணைத்தலைவர்  கோ.ப செந்தில்குமார் தலைமையில் காலை 06.30 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. விழாவின் தொடர்ச்சியாக காலை 09.30 மணியளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு பக்தர்கர் பாத பூசைகளை நடத்தி வரவேற்றனர். பின்னர் இயக்கத் துணைத்தலைர் ஶ்ரீதேவி இரமேஷ் அன்னதானத்தை துவக்கி வைத்தார். 
காலை 11.30 மணியளவில் கர்நாடக மாநில கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சக்தி கே.எஸ்.ஈஸ்வரப்பா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மடிக்கணினி, தையல் இயந்திரம், மருத்துவ நெபுலைஸர் கருவிகள், எலக்ட்ரிக்கல் பழுதுபார்க்கும் கருவிகள், செயற்கை கால்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதனை கருவிகள் என 113 பயனாளர்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 
மேலும் 3 பேருக்கு பயணிகள் ஆட்டோ வழங்கப்பட்டன. மேலும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பள்ளி போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு 26 இலட்சம் நன்கொடையாகவும் மேல்மருவத்தூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கு 1 பேருந்தும் என 75 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து ஆன்மீக இயக்கத்தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார்  விழாப் பேருரை ஆற்றினார். ஆன்மீக இயக்கத் தலைவர் உமாதேவி, மோனலட்சுமி ஆகியோர் விழாவினை சிறப்பித்தனர். விழா ஏர்பாடுகளை கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர்கள் இராஜகோபால், உதயகுமார் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

[முக்கிய அறிவிப்பு] சலூன் கடைகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

அனைத்து பொருட்களின் விலைகளும் தற்போதைய காலக்கட்டங்களில் உயர்ந்து வரும் நிலையில் அழகு சாதன பொருட்கள், மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சலுான் கடைகளில், முடி வெட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு, இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய கட்டணத்தைவிட, 10 ரூபாய் அதிகரித்துள்ளது.



திருப்போரூர் அடுத்த கொளத்துாரில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணம் விபரம்:
சாதாரண சலுான்
  1. முடி வெட்ட மற்றும் முக சவரம் -180
  2. முடி வெட்ட மட்டும்- 120
  3. முகச்சவரம் மட்டும் - 70
  4. சிறுவருக்கு முடி வெட்ட - 110
  5. முடி வெட்ட, முகச்சவரம், சாயம் பூசல் - 350

ஏசி சலுான்
  1. முடி வெட்ட மற்றும் முக சவரம் -200
  2. முடி வெட்ட மட்டும்- 140
  3. முகச்சவரம் மட்டும் - 80
  4. சிறுவருக்கு முடி வெட்ட - 120
  5. முடி வெட்ட, முகச்சவரம், சாயம் பூசல் - 450

Monday, December 30, 2019

போதையில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கினேனா? நடிகை விளக்கம் | Did a beer bottle hit the intoxicated producer?

தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா. சஞ்சனா தற்போது போடா முண்டம் தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அவர் மீது பெண் தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
பெங்களூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் சஞ்சனாவும், வந்தனாவும் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றவே சஞ்சனா வந்தனாவை பீர் பாட்டிலால் அடித்ததாக கூறப்படுகிறது. சஞ்சனா தன்னை தாக்கியதாக வந்தனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் சஞ்சனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
 
பிரச்சனை
 பாார்ட்டியில் வந்தனாவுடன் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நான் அவரை பீர் பாட்டிலால் தாக்கவில்லை. நான் தாக்கியதாக கூறும் அந்த பெண்ணிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர் என் அம்மா, குடும்பத்தாரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். 
அதனால் நான் திட்டியதற்கு என்னை கைது செய்ய வைப்பதாக மிரட்டினார். என் கெரியரை நாசமாக்கி, என் பெயரை கெடுத்து, என் குடும்பத்தாரை காலி செய்து, என்னை சிறையில் தள்ளுவதாக மிரட்டினார்.
சினிமா
அவர் எப்பொழுதுமே சீப்பாக விளம்பரம் தேட விரும்புவார். அதனால் ஒரு முடிவுக்கு வரும் முன்பு அவரை பற்றி தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் கடுமையாக உழைக்கிறேன். எனக்கு உழைப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. 
என் செல்போனை பறித்துக் கொண்டு, என் கையை பிடித்து அவர் முறுக்கிய வீடியோ தான் சான்று. அந்த வீடியோவில் அவர் முகத்தில் ஏதாவது காயம் உள்ளதா?. பாட்டில் உடைக்கப்பட்டால் காயமோ, ரத்தமோ இருக்கும். அது போன்று பொறுப்பில்லாமல் நான் நடந்து கொள்ள மாட்டேன். இது என் பெயரை கெடுக்கும் சதி என்று தெரிவித்துள்ளார் சஞ்சனா.

ஊராட்சி தேர்தலில் கல்லூரி மாணவி போட்டி | Collage Girl participating as candidate in LB Election at Thiruthani

திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகள் தா.நிவேதா, 21, என்பவர், போட்டியிட்டுள்ளார்.




இவர், சென்னை காய்தே மில்லத் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று, எஸ்.அக்ரஹாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட்டார்.ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்காக தான் கல்லுாரியில் படிக்கும் போதே, உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு உள்ளேன்.


ஒராண்டிற்குள், மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் என, அவர் தெரிவித்தார். நிவேதாவின் தந்தை, அ.தி.மு.க., கட்சியில், கடந்த, 35 ஆண்டுகளாக உள்ளார். தற்போது ஒன்றிய கழக பொருளாளராக உள்ளார்.

ஆபாச வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியவர் கைது | Child Pornography person was arrested

'இன்ஸ்டாகிராம்' வலைப்பக்கத்தில், பெண்ணாக பேசி, 16 வயது சிறுமியை சீரழிக்க முயன்றவரை, போலீசார் கைது செய்தனர்.அண்ணாநகரைச் சேர்ந்த, 16 வயது சிறுமியின் பெற்றோர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.




அதில், 'அண்ணாநகரைச் சேர்ந்த மகேஷ், தன் மகளின் இன்ஸ்டாகிராம் கணக்கில், பெண்ணை போல் பேசி, நட்பாக பழகி உள்ளார்.'பழக்கத்தை வைத்து, ஆபாச வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால், தன் மகள், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.


மகேஷ் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மகேஷை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:மகேஷ், இன்ஸ்டாகிராம் வாயிலாக, சிறுமியுடன் நட்பாக பழகி உள்ளார்.


ஆனால், சிறுமி, மகேஷின் பேச்சுக்கு பிடி கொடுக்கவில்லை. இதனால், சிறுமியை எப்படியாவது தன் வசம் ஈர்க்க திட்டம் தீட்டிஉள்ளார்.அதன்படி, பெண்ணாக சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார்.பின், நெருக்கமான நட்பை வைத்து, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, அவர் குளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆபாச வீடியோவை மகேஷ் எடுத்து உள்ளார்.


பின், ஆபாச வீடியோவை வைத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


30.12.2019 Tamil Latest News | இன்றைய தமிழ் செய்திகள் | Run World Media

இன்றைய முக்கிய செய்திகள் : 


கீழே உள்ள செய்திகளின் மீது கிளிக் செய்யவும்
  1. போதையில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கினேனா? நடிகை விளக்கம்
  2. ஊராட்சி தேர்தலில் கல்லூரி மாணவி போட்டி
  3. மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி
  4. ஆபாச வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியவர் கைது
  5. ஊத்துக்காடு அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி
  6. 10th, +2 தனித்தேர்வர்கள் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்..?
  7. தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது 
  8. வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? 
  9. பழவேற்காடு டீக்கடையில் வித்தியாச விழிப்புணர்வு 
  10. டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்

ஊத்துக்காடு அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி | Oothukadu Bike Bus Accident

அரசு பஸ் மீது, இருசக்கர வாகனம் மோதியதில், இருவர் இறந்தனர்.வாலாஜாபாதில் இருந்து, படப்பை நோக்கி, நேற்று, இரவு 8:00 மணி அளவில், ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது.



அதே வழித்தடத்தில், அரசு பஸ் தடம் எண்: 79, தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஊத்துக்காடு கூட்டு சாலை அருகே சென்றபோது, இந்த இருசக்கர வாகனம், அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர், செஞ்சி அடுத்த, கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி, 39. என, தெரிய வந்துள்ளது. அவருடன் சென்ற உறவினர் பெண் ஒருவரும் இறந்தார்.