வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tamilnadu Cheating News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tamilnadu Cheating News. Show all posts
Showing posts with label Tamilnadu Cheating News. Show all posts

Friday, November 02, 2018

கொஞ்ச நேரம் ரூமுக்குள்ள போங்க.. பொண்ணு உள்ளதான் இருக்கா.. உள்ளே போனா!!!!



"என் பொண்ணுகூட அந்த ரூமில் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வாங்களேன்" என்று ஆண்களிடம் சொல்லி சொல்லியே அவர்களிடம் பணத்தை மிரட்டி கறந்துள்ளார் அந்த பெண்ணின் தாய். வடபழனியை சேர்ந்த இளைஞர் காளிசரண். வயசு 43 ஆகிவிட்டதால் கல்யாணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. அதனால் மேட்ரிமோனியல் உள்ளிட்ட திருமண பதிவு மையங்களில் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

உங்கள பிடிச்சு போச்சு 
அதன்படி கடந்த வாரம் காளிசரணுக்கு ஒரு பெண் போன் செய்து, "உங்கள் விவரங்களையெல்லாம் மேட்ரிமோனியலில் பார்த்தேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என் போட்டோவை உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிறேன். உங்களை நேரில் பார்க்க வேண்டும்போல் இருக்கு. வரமுடியுமா?" கேட்டு பூந்தமல்லி சாலையில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் முகவரியையும் அனுப்பி அழைத்தார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

சொக்கி போனார் 
ஏற்கனவே 43 வயசு ஆகிவிட்ட காளிசரணுக்கு, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவை பார்த்ததும் சொக்கியே போய்விட்டார். இவ்வளவு அழகு பெண்ணா? நமக்கா? என்று ஆச்சரியப்பட்டு கொண்டே அந்த பெண்ணை பார்க்க சொன்ன முகவரிக்கு கிளம்பினார். பெண்ணுக்கு நம்மை பார்த்தவுடன் பிடித்து போய்விட வேண்டும் என்று புது டிரஸ், தங்க மோதிரம், செயின் என கிட்டத்தட்ட ஒரு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு போனார். அங்கே வாட்ஸ்அப்பில் பார்த்த பெண் காளிசரணை வரவேற்று உள்ளே கூட்டிக் கொண்டு போனார்.



டீ கொடுத்தார்கள் 
 அங்கே ஒரு பெண் உட்பட 3 பேர் இருந்தார்கள். அவர்கள் காளிசரணை வரவேற்று டீ கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்த பெண், இவ என் பொண்ணு, அதோ அந்த அறையில் கொஞ்சம் நேரம் போய் தனியா மனசுவிட்டு பேசிட்டு வாங்களேன்" என்று சொல்ல... காளிசரணும் பொண்ணு அறைக்கு போக, உடனே பின்தொடர்ந்த 3 பேரும் காளிசரணை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன், ஏடிஎம் கார்டு எல்லாத்தையும் பிடுங்கிகொண்டு அனுப்பினார்கள்.


சாவித்ரிதான் காரணம்
 இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவையும் போலீசாருக்கு அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து தேடி வந்ததில் தற்போது அந்த கும்பல் சிக்கியுள்ளது. இவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்களாம். சாவித்ரி என்னும் 52 வயது பெண்தான் இவ்வளவுத்துக்கும் காரணம் என தெரியவந்துள்ளது.



திருமண ஆசை 
இவரது மகன் சிவா, மகள் பிரியா ஆகியோருடன் கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சாவித்திரி குடியேறியுள்ளார். அப்போது கோகுல கிருஷ்ணன் என்ற தரகர் அறிமுகமாகி உள்ளார். இவர்களது வேலையே, யாரெல்லாம் 40 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாமல் இருக்கிறதோ, யாரெல்லாம் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்படுகிறார்களோ அவர்களை வளைத்து போடுவதுதான். அவர்களின் முகவரியை கண்டு பிடித்து வைத்து கொண்டு, திருமண ஆசை காட்ட வேண்டியது.


தனியா பேசிறீங்களா?
 அதற்காக பெற்ற மகளையே சாவித்திரி போனில் பேச வைத்து, போட்டோவையும் அனுப்பி... நேரில் வரவழைப்பது... பிறகு "என் பொண்ணு சினிமா நடிகை மாதிரி இருக்கா பாருங்க. அதோ அந்த ரூமில் அவளிடம் தனியா பேசிவிட்டு வாங்க. உங்களுக்கு முதல்ல பிடிச்சா போதும். அப்பறம் உங்க வீட்டு ஆளுங்கள வரவழைச்சி பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுவோம் என்பார்களாம்.



மிரட்டி நகை பறிப்பு
 இதை நம்பி மாப்பிள்ளை ரூமுக்கு போவாராம், சிறிது நேரம் தனியாக பேசுவார்களாம்... பின்னாடியே சென்ற 3 பேரும் நகை, பணம் பறிப்பார்களாம். இப்படியே 30-க்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் உயிர்பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடியிருக்கிறார்கள். அதனால் யாருமே இதுவரை இவர்களை பற்றி எந்த தகவலும் அளிக்க முன்வரவில்லை.


ஏமாந்த தாத்தா 
இப்படித்தான் ஒரு தாத்தாவும் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்பட, தாத்தா பெண் தேடும் விவரம் சாவித்திரி கண்ணில் பட்டுவிட, உடனே பெண்ணை பார்க்க காரில் வந்த தாத்தாவையும் இப்படியே மிரட்டி கார், செல்போன், டேப் என எல்லாத்தையும் சுருட்டி கொண்டு ஓடியிருக்கிறது இந்த கும்பல். இப்போது 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்கள். தப்பி போனவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Thursday, October 25, 2018

திருமணத்துக்கு பெண் பார்க்க அழைப்பதுபோல நடித்து நகை, செல்போன் பறிப்பு 3 பெண்களுக்கு வலைவீச்சு



சென்னை வடபழனியில், பெண் பார்க்க அழைப்பதுபோல் நடித்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நூதன முறையில் நகை, செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச்சென்ற 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். 


 சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் காளிசரண் (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தான் திருமணம் செய்துகொள்வதற்காக ‘மணமகள் தேவை’ என தனியார் திருமண தகவல் மையம் மூலம் ஆன்-லைனில் தனது ஜாதகம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து இருந்தார். நேற்று முன்தினம் மாலை காளிசரணை செல்போனில் தொடர்புகொண்ட பெண் ஒருவர் “உங்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆன்-லைனில் பார்த்து விட்டோம். நீங்கள் நேரில் வந்தால் பெண்ணை பார்த்துவிட்டு, மற்ற விஷயங்களை பேசி முடிவு செய்துவிடலாம்” என்றார். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!



   மேலும் சென்னை வடபழனியில் உள்ள தங்கள் வீட்டுக்கு உடனடியாக வருமாறும் காளிசரணுக்கு அந்த பெண் அழைப்பு விடுத்தார். அதனை உண்மை என்று நம்பிய காளிசரண், நேற்று முன்தினம் இரவு வடபழனி 100 அடி சாலை அருகே உள்ள பொன்னம்மாள் தெருவில் அந்த பெண் கூறிய முகவரிக்கு நேரில் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், காளிசரணை அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் உறவினர்கள் தங்கி இருப்பதாக கூறி அங்கு அழைத்து சென்றார்.  (தொடர்ச்சி கீழே...)





விடுதியில் உள்ள அறையில் மேலும் 2 பெண்கள் இருந்தனர். அவர்கள், “நாங்கள் போலீஸ். உன்னை சோதனை செய்யவேண்டும். உன் மீது ஏராளமான புகார்கள் உள்ளது” என்று கூறியதுடன், காளிசரணிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 5 பவுன் நகைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக்கொண்டதுடன், அவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த காளிசரண், இது குறித்து வடபழனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. பின்னர் நடத்திய விசாரணையில், அந்த கும்பல் ‘மணமகள் தேவை’ என ஆன்-லைனில் காளிசரண் பதிவு செய்து இருப்பதை கண்டு அவரை பெண் பார்க்க அழைப்பதுபோல் நடித்து நூதன முறையில் நகைகள், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச்சென்று இருப்பது தெரிந்தது. இதற்காக அந்த கும்பல் விடுதி அறையை ஒருநாள் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரிந்தது.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தலைமறைவான 3 பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, October 12, 2018

காலையில் கண் விழித்து பார்த்தால்.. பொண்டாட்டியை காணோமே.. அப்படியே ஷாக்கான ராஜேஷ்!



காலையில் கண் விழித்து பார்த்தால்.. பொண்டாட்டியை காணோமே.. அப்படியே ஷாக்கான ராஜேஷ்!

கொடைக்கானல்: புதுமாப்பிள்ளை ராஜேஷின் நிலைமை இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜேஷூம்தான்!! உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு 23 வயதான ஒரு இளம்பெண்ணுடன் 2 வாரத்துக்கு முன்னாடிதான் திருமணம் நடைபெற்றது. இதனால் இரு வீட்டிலும் மணமக்களை ஹனிமூனுக்காக கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்தார்கள். 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த ஜோடி, அண்ணாசாலையில் ஒரு ரூம் எடுத்து தங்கினார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மனைவியை காணோம் 2 நாட்களுக்கும் கொடைக்கானலை சுற்றி பார்த்து ஜாலியாக திரிந்தார்கள். இந்நிலையில், காலையில் மாப்பிள்ளை கண்விழித்து பார்த்தால் பக்கத்தில் மனைவியை காணோம். இதனால் ஷாக் ஆன ராஜேஷ் ஓட்டல் முழுவதும் மனைவியை தேடினார். அங்கிருந்தோரிடம் எல்லாம் விசாரித்து பார்த்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை.. மனைவியும் கிடைக்கவில்லை!



பெற்றோருக்கு தகவல் அதனால் மாமியார் வீட்டுக்கு போன் போன் செய்து பதட்டத்துடனும், பயத்துடனுடம் விவரத்தை சொன்னார். அவர்களும் பயந்து போய் சொந்தக்காரர்கள் நண்பர்கள் வீடுகளில் தேட ஆரம்பித்தனர். என்றாலும் புதுமாப்பிள்ளைக்கு பயம் போகவே இல்லை. மனைவிக்கு என்ன ஆனதோ என்று கவலைப்பட்டு கொண்டே இருந்தார். புது இடம் என்றாலும் கொடைக்கானல் முழுவதும் தேட ஆரம்பித்தார்.
விசாரணை ஆரம்பம் எதற்கோ போலீசில் ஒரு புகாரை தரலாம் என்று நினைத்து அதையும் செய்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து புதுமணப்பெண்ணை தேட ஆரம்பித்தனர். கூடவே பெற்றோரை அழைத்து விசாரணையும் நடத்தினர். விசாரணையில் உண்மை நிலவரம் அனைவருக்குமே தெரிய வர ஆரம்பித்தது. புதுமணப்பெண் ரமேஷ் என்பவரை உயிருக்குயிராக விரும்பி வந்துள்ளார்.


வற்புறுத்தி திருமணம் இந்த காதல் சமாச்சாரம் வீட்டுக்கு தெரியவரவே, அவசர அவசரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்து ராஜேஷை அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பெண்ணால் ரமேஷை மறக்க முடியவில்லை. அதனால் திருமணம் முடிந்தாலும் ரமேஷிடம் போனில் பேசியும், அழுதவாறும் இருந்திருக்கிறார். பிறகு ஹனிமூனுக்கு கொடைக்கானல் போக போவதாக ரமேஷிடம் காதலி சொல்லி உள்ளார்


ரமேஷ் - மணப்பெண் அதனால் ரமேஷ் கொடைக்கானலுக்கே வந்துவிட்டார். ஹோட்டலில் தங்கியிருந்த புதுப்பெண்ணையும் அழைத்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த தகவல்கள் அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ள. இதையடுத்து, மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். புது மாப்பிள்ளையுடன் ஹனிமூன் வந்த புதுப்பெண், தன் காதலனுடன் சேர்ந்து திடீரென எஸ்கேப் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது



ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். 



அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆசிரியை ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனி டம் புகார் மனு ஒன்றினை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

நான் எம்.எஸ்சி., பி.எட். படித்து முடித்துவிட்டு திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். நான் காங்கேயத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் படித்தபோது, என்னுடன் படித்த முத்தூர் பெருமாள் கோவில் புதூரை சேர்ந்த கவின்குமார் (வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பெருந்துறை கம்புளியம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நானும், கவின்கு மாரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.



இதையடுத்து கவின்குமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கணவன், மனைவியாக நாம் வாழலாம் என்று என்னிடம் கூறினார். அதற்கு, நாம் சட்டப்படி திருமணம் செய்துகொள் ளலாம் என்றேன். உடனே அவர் என் மீது நம்பிக்கை இல்லையா? என்று கூறியதுடன் கண்டிப்பாக சட்டப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறி என்னிடம் உல்லாசம் அனுபவித்தார். அதன்பின்னர் என்னை ஏற்காடு, கொல்லிமலை ஆகிய பகுதிகளுக்கும் அழைத்து சென்றார்.



இந்த நிலையில் கவின்கு மாரின் செல்போன் திடீரென ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்ததால் கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி நான் அவருடைய வீட்டிற்கு சென்றேன். அங்கு எனது கணவர் கவின்குமார், அவருடைய தாய் தேவி, தம்பி கணேஷ்குமார், தாய் மாமா சேகர், தாய்மாமா மனைவி வளர்மதி ஆகியோர் என்னை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே என்னை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய கவின்குமார் மற்றும் அவருடைய குடும்பத் தினர் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆசிரியை கூறிஇருந்தார்.



புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், ஈரோடு மகளிர் போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் கவின்குமார், தேவி, கணேஷ்குமார், சேகர், வளர்மதி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.  இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவின்குமாரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று ஈரோடு பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts