வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-12-22
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 29, 2019

டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்....! நடந்தது என்ன..? Daughter suside due to her mother order

டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 32.



அதேப்பகுதியை சேர்ந்த பாபு மகள் அப்சல்யா, 25; என்பவரை 6 ஆண்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள் உள்ளனர்.அப்சல்யா தாய் வீட்டிற்கு சென்று 'டிவி' பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று வழக்கம் போல் 11.30 மணிக்கு தாய் வீட்டில் 'டிவி' பார்த்துள்ளார்.


இதை அவருடைய தாய் பன்னீர்துளி, கணவன் மற்றும் குழந்தைகளுக்கு சமையல் செய்து உணவளிக்காமல் 'டிவி' பார்ப்பதை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், கணவர் வீட்டிற்கு சென்றவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சப் கலெக்டர் விசாரணையும் நடக்கிறது.

பழவேற்காடு டீக்கடையில் வித்தியாச விழிப்புணர்வு | Pazhaverkadu Tea stall special awarness

பழவேற்காடு சாலையில் உள்ள டீக்கடை கரும்பலகையில், 'பன்றியின் விலையைவிட, மக்களது ஓட்டின் விலை குறைவு' என, உள்ளாட்சி தேர்தல் குறித்து, வித்தியாச விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டிருந்தது.



பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.சேகர், 51, பழவேற்காடு சாலையில் டீக்கடை வைத்துள்ளார்.இவர், 25ஆண்டுகளாக, டீக்கடையில் கரும்பலகை வைத்து, பல்வேறு தகவல்களை எழுதி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தினமும், ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசங்களை எழுதி வருகிறார்.அதில், 'கோஷம் போட கோழி பிரியாணியை மட்டும் எதிர்பார்க்காதீர்கள்; வேஷம் போடாத வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வருகிறார்.


இதில் நேற்று, இன்றைய சந்தை மதிப்பு என்ற தலைப்பில், அவர் எழுதிய வாசகம், கடைக்கு வருவோரையும், அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் சிந்திக்க வைத்தது.

வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? Husband affected due to dowry torchar

திருப்பூர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ருதி, 20. இவரது கணவர் சுப்ரமணி, 24. இருவரும், கடந்த, பிப்., 12ல், காதல் திருமணம் செய்து கொண்டனர்.



ஸ்ருதியிடம், கணவர் சுப்ரமணி, மாமியார் கவிதா இருவரும், அடிக்கடி வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால், அவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.


விசாரணை நடத்திய போலீசார், சுப்பிரமணியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக கவிதாவிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது | Son murdering his father

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அரடாபட்டை சேர்ந்தவர் பெருமாள், 67; இவருக்கு, முருகன், 40, லட்சுமணன், 38, சேகர், 36, என மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.



அனைவருக்கும், திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். சேகரின் மனைவி சத்யா, 35. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடால், சேகரை பிரிந்த சத்யா, தற்போது, வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.


மனைவி தன்னுடன் வாழாததற்கு, தந்தை பெருமாள் தான் காரணம் என, சேகர் அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தந்தை பெருமாளுக்கும், சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தூங்க சென்றனர். நள்ளிரவில், தூங்கிக் கொண்டிருந்த பெருமாளை, சேகர் அரிவாளால் தலை மற்றும் கழுத்தில் வெட்டினார்.


இதில், சம்பவ இடத்திலேயே பெருமாள் பலியானார். இது குறித்து அக்கம் பக்கத்தினர், வெறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார், பெருமாளின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 9 சேவை மையங்கள் | SSLC HSC Attempt and application centre

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும், 2020ல், மார்ச் மாதம் நடைபெறவுள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், வரும், ஜனவரி, 2, 3-ம் தேதிகளில், ஒன்பது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டசேவை மையங்களின் விபரம்
  1. சி.எஸ்.ஐ., கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு
  2. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு
  3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்
  4. புனித செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்


  1. டாக்டர் பி.எஸ்.எஸ்., நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  2. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்
  4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதுார்
  5. அரசு மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லுார்.

29.12.2019 Tamil Latest News | இன்றைய தமிழ் செய்திகள் | Run World Media

இன்றைய முக்கிய செய்திகள் : 


கீழே உள்ள செய்திகளின் மீது கிளிக் செய்யவும்
  1. 10th, +2 தனித்தேர்வர்கள் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்..?
  2. தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது 
  3. வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? 
  4. பழவேற்காடு டீக்கடையில் வித்தியாச விழிப்புணர்வு 
  5. டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்

Saturday, December 28, 2019

விடுதியில் விபசாரம் நடத்திய பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை | Pondicherry House Prostitution

விபசார வழக்கில் பெண் ணுக்கு 4 ஆண்டும், விடுதி மேலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2013ம் ஆண்டு விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெரியக்கடை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.





அப்போது, விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடுதி மேலாளர் கோட்டக்குப்பம், ஷேக் பஷீர்,30; என்பவரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட கொல்கத்தா மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு பெண்களும் கோர்ட் உத்தரவின்படி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மற்றவர்கள் மீது, புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், விபசாரம் நடத்திய காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 32 வயது பெண்ணிற்கு நான்காண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், விடுதி மேலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மற்ற ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டனர்.அரசு சார்பில் வழக்கறிஞர் பிரவீன்குமார் ஆஜரானார்.

செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி | Great died Old lady Donating eye in Ginjee

முதியோர் இல்லத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலையோரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தைலம்மாள், 68; என்ற மூதாட்டியை மீட்டு சமூக நலத்துறையினர் செஞ்சியில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.



வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் தைலம்மாள் இறந்தார். அவரது கண்களை தானமாக வழங்க விடுதி நிர்வாகி நளினி முடிவுசெய்தார்.இதுகுறித்து செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


அவர்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி வந்த மருத்துவக் குழுவினர் மூதாட்டியின் கண்களை அகற்றி தானமாக பெற்றுச் சென்றனர்.ரோட்டரி சங்க தலைவர் இளங்கோவன், செயலர் சேகர், பொருளாளர் பன்னீர்செல்வம் உடன் இருந்தனர்.

உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் | Ulundurpet school girl Kidnap News

உளுந்துார்பேட்டை அருகே இளம்பெண்ணைக் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா ஆண்டிகுழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.



இவரது 17 வயது மகளை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தனது மகளை கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வீரப்பன் மகன் எழிலரசன், 19; என்பவர் கடத்திச் சென்றதாக ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து எழிலரசனை கைது செய்தனர்.

வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர் | Candidate death in Sennavaram Vandavasi Taluk

வந்தவாசி அருகே, சுயேச்சை வேட்பாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.



இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், சென்னாவரம் கிராம பஞ்சாயத்து, 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேண்டாமிர்தம், 54, என்பவர் போட்டியிட்டார். அவருக்கு சீப்பு சின்னம் வழங்கப்பட்டது. கடந்த, 23ல், அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.


எனவே, அந்த வார்டுக்கு, வரும், 30ல், நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் 1 கோடி ரூபாய் மோசடி | 1 Crore Abase in Madurantakam

தீபாவளி சீட்டு நடத்தி, 1 கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடைக்காரர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் அடுத்த, மேலவலளம்பேட்டையில், வாடகை வீட்டில் வசித்தவர், ராம்தேவ், 50; பூதுாரில் நகை கடை வைத்திருந்தார்.




இவர், பூதுாரை சுற்றியுள்ள ஈசூர், வள்ளிபுரம், தச்சூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 500 பேரிடம், மாதம், 1,000 ரூபாய்க்கு, தீபாவளி சீட்டு பிடித்தார்.கடந்த தீபாவளியின் போது, பணம் கட்டியவர்களுக்கு வழங்க வேண்டிய நகை மற்றும் பொருட்கள் வழங்காமல், காலம் கடத்தி வந்தார்.


கட்டிய பணத்திற்கான நகை மற்றும் பொருட்களை வழங்கும்படி நெருக்கடி கொடுத்த நிலையில், சில நாட்களாக, ராம்தேவ் வசித்த வீடும், கடையும் பூட்டியே கிடந்தன; அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.


இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சீட்டு கட்டிய கிராமத்தினர், 50க்கும் மேற்பட்டோர், 'ராம்தேவ், 1 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாகியுள்ளார். அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தரவேண்டும்' என, படாளம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைமலைநகரில் தொடர் வழிபறி | என்ன நடக்கிறது...? | Maraimalainagar Robbery News

மறைமலை நகரில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட, கல்லுாரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.மறைமலை நகர் சுற்று வட்டாரத்தில், சில நாட்களாக, வீடுகளில் துாங்கும் வாலிபர்களை தாக்கி, மொபைல் போன், மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.



பாதிக்கப்பட்டோர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், பொத்தேரி பகுதியில், ரோந்து பணியில் இருந்த போலீசாரை பார்த்து, இரண்டு, 'பல்சர்' இருசக்கர வாகனங்கள் வேகமாக சென்றன. இவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மல், 19, மேற்கு தாம்பரம் அனிமா பள்ளி தெரு கமல் பிரசாந்த், 21, என்பதும், தனியார் கல்லுாரியில் படிப்பதும் தெரிய வந்தது.இவர்களுடன் ரங்கநாதபுரம் கிஷோர், 20, வைத்தியேஷ்குமார், 21, ஆகியோரும், வீடுகளில் வசிப்போரை மிரட்டி, மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர்.


இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.'பிடிபட்ட மாணவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பின், வழிப்பறியில் கொள்ளை அடிக்கப்பட்ட விபரங்கள் வரும்' என, போலீசார் தெரிவித்தனர்.

மதுராந்தகத்தில் வீட்டிலேயே கஞ்சா வளர்ப்பு | Madurantakam Ganja News

மதுராந்தகம் அருகே, பாழடைந்த வீட்டு வாசலில், கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.



மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர், நுார்துசாமி, 65; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.இவர், கடந்த ஆண்டுகளில், மதுராந்தகம் அடுத்த காந்தி நகரில், குடிசை வீட்டில் வசித்தார். மதுராந்தகத்தில் சொந்தமாக மனை வாங்கி, வீடு கட்டி அங்கு வாழ்கிறார்.


இந்நிலையில், நுார்துசாமி வசித்த குடிசை வீடு, பாழடைந்து கிடந்தது. இதன் வாசலில், கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.நேரில் வந்து ஆய்வு செய்த போலீசார், வளர்ந்திருப்பது கஞ்சா செடி என்பதை உறுதி செய்தனர். ஆள் இல்லாத வீட்டில், கஞ்சா வளர்த்திருப்பது குறித்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tamil Latest News 28.12.2019 | இன்றைய தமிழ் செய்திகள் | Run World Media

இன்றைய முக்கிய செய்திகள் : 


கீழே உள்ள செய்திகளின் மீது கிளிக் செய்யவும்
  1. மதுராந்தகத்தில் வீட்டிலேயே கஞ்சா வளர்ப்பு
  2. மறைமலைநகரில் தொடர் வழிபறி | என்ன நடக்கிறது...?
  3. மதுராந்தகத்தில் 1 கோடி ரூபாய் மோசடி
  4. வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர்.
  5. உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் 
  6. செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி
  7. விடுதியில் விபசாரம் நடத்திய பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

Wednesday, December 25, 2019

மதுராந்தகத்தில் "தூணை பிளந்து காட்சியளிக்கும் ஶ்ரீஉக்கிரநரசிம்மர்" – தமிழகத்திலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார் | Madurantakam Soorakottai Lakshmi Narasimmar

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சூரக்கோட்டை ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில் ஶ்ரீஅனுமந் ஜெயந்தி நாளையொட்டி 108 பால்குட உற்சவ பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. 
இந்த விழாவில் கோயில் நிறுவனர் வேணுதாஸ் சுவாமிகள் தலைமையில் 25.12.2019 காலை 10 மணிக்கு பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஶ்ரீஏரிகாத்தராமர் கோயில் குளத்தின் கரையிலிருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 
 
பின்னர், ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.  பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. 
இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் "தூணை பிளந்து காட்சி தரும் 43 அடி உயர ஶ்ரீஉக்கிரநரசிம்மர் தமிழ்நாட்டிலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார்". அவருக்கு எதிரே 21 அடி உயரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். 
மேலும், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆனைக்குன்னம் ஶ்ரீசஞ்சீவிராயர் திருகோவிலிலும் அனுமந் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

வேலாமூர் மாதா கோவிலில் விமர்சியாக நடைப்பெற்ற "கிறிஸ்துமஸ்" | Velamur Christmas Celebration | Ramapuram

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் பங்கு, வேலாமூர் கிளைப்பங்கில் உள்ள மாதா கோவிலில்  கிறிஸ்துமஸ் பண்டிகையானது வெகுவிமர்சியாக நடைபெற்றது. 


இரவு 2 மணியளவில் ஏசுகிறிஸ்து பிறப்பு திருப்பலி நிகழ்வு நடைபெற்றது. இந்த திருப்பலி நிகழ்வனாது பங்குத்தந்தை அருள்பணி.இம்மானுவேல் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் நடத்தினர். 

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் உலக தாழ்ச்சி, உலக அமைதி, சமாதானம் நிலவவும் மக்கள் நல்ல முன்னேற்றமடையவும் பிராத்தனைகள் நடைப்பெற்றது. 


மேலும், சென்ற ஆண்டு நடந்த அனைத்து பிரச்சனைகளும், தீய பழக்க வழக்கங்களும் மாறி  மனமாற்றத்தோடு இந்த இனிய நாள்முதல் ஆண்டவன் சுகமளிக்கவேண்டும், இருப்பதை பகிர்ந்து வாழவேண்டும், தாழ்ச்சிடன் வாழவேண்டும் போன்ற செய்திகளோடு இந்த திருப்பலியானது 4மணியளவில் முடிவு பெற்றது. 

இத்திருநாளில் ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வேட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் நிறுவனர் டோமினிக் மற்றும் ஏகப்பன், அசோக்ராஜ், திவ்யநாதன், அலெக்சாண்டர், ஹேமாவதி, பிரேமா, பிரமிளா, நிர்மலா ஆகியோர்கள் பங்கேற்றனர். 

Monday, December 23, 2019

இவரு பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க.. இதையெல்லாம் மாத்தமுடியாது.. பிரபல நடிகரை விளாசிய சின்மயி! Chinmayi YG Magendiran Fight

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல நடிகரை நடிகை சின்மயி சரமாரியாக விளாசியிருக்கிறார்.




குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதலில் வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது.
 

அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான இந்த போராட்டம் நாடு முழுவதும் பற்றியது. இதில் மாணவர்களும் இறங்க போராட்டம் வேற மாதிரியாக சென்றது.
 


எதிர்க்கட்சிகள்தான்

தமிழகத்திலும் போரட்டத் தீ பற்றியதால் அலர்ட்டான அரசு, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. எதிர்க்கட்சிகள்தான் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
 


சைட் அடிக்கவே

இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து பிரபல நடிகரான ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்பதை மனதில் வைத்தே போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
 


சின்மயி விமர்சனம்

அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகியான சின்மயி ஒய்ஜி மகேந்திரனின் இந்த கருத்து குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
 


மாத்த முடியாது

அதாவது இந்த மனுஷர் சொல்லும் கருத்தையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை மாற்ற முடியாது. அது நேர விரயம்தான் என்று சாடியிருக்கிறார்.



நெட்டிசன் கருத்து

சின்மயின் இந்த கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. சின்மயின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு கவலையாக உள்ளது. அவருக்கும் மகள் மனைவி இருக்கிறார்கள்.. அவர்கள் எப்படி இதை பார்ப்பார்கள் என்று கேட்டிருக்கிறார்.
 


மீடூவில் புகார்

பாடகி சின்மயி, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திரமேரூரில் குடும்ப அட்டைகளை தாசில்தாரிடம் வீசிய மக்கள் | Pazhaveri Quarrying of Stone Opposing News

போலீசார் பாதுகாப்புடன் கல் குவாரி இயக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பழவேரி கிராமத்தினர், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை, உத்திரமேரூர் தாசில்தார் காலடியில் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், குடியிருப்புகளுக்கு அருகே புதிய கல் குவாரி துவக்கப்பட்டது. இப்பகுதியில், ஏற்கனவே, பல குவாரிகள் இயக்கப்படுவதால், பகுதிமக்கள் அவதிப்படுகின்றனர்.இதனால், புதிய குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், நான்கு மாதங்களாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதியாக, கடந்த வாரம், 14ம் தேதி, குடியிருப்புகளை விட்டு, குடும்பத்தோடு மயானத்தில் குடியேறி, மூன்று நாட்களாக, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, போராடினர். 

வாக்குறுதி 
இதையடுத்து, 16ம் தேதி மாலை, மயானத்திற்கு வந்து மக்களை சந்தித்த காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன், 'கல்குவாரி தற்காலிகமாக செயல்படாது. மேற்கொண்டு,விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, கிராமத்தினர், வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில், குவாரி துவங்க போவதை அறிந்த கிராமத்தினர், நேற்று முன்தினம், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, செங்கல்பட்டு டி.எஸ்.பி., கந்தன், படாளம் மற்றும் சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பில், குவாரி நேற்று காலை இயங்கியது.அப்போது, 100 பெண்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர், போலீசாரிடமும், குவாரி உரிமையாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, குவாரி இயக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆத்திரம்
இதனால், கடும் ஆத்திரமடைந்த கிராமத்தினர், வீடுகளில் இருந்த, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை எடுத்து சென்று, குவாரியில் இருந்த உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரனிடம் கொடுத்தனர்.அவர் வாங்க மறுத்ததையடுத்து, அந்த அட்டைகளை, தாசில்தார் காலடியில் வீசி, 'எங்களுக்கு, அரசின் அடையாளங்கள் தேவையில்லை' எனக்கூறிவிட்டு சென்றனர்.

குடும்ப அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.கல் குவாரி உரிமையாளருக்கு ஆதரவாக, மாவட்ட கலெக்டர், சப் - கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செயல்படுவதாக, பழவேரி கிராமத்தினர் புகார் கூறினர்.'அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என, அவர்கள் கூறினர்.

மாமல்லபுரம் அருகே வேன் - பஸ் மோதல் - ஓட்டுனர் பலி | Mamallapuram Van Bus Accident News | Mahabalipuram Bus Van Accident News

மாமல்லபுரம் அருகே, சரக்கு வேன், ஆம்னி பஸ், நேருக்கு நேர் மோதியதில், வேன் ஓட்டுனர் இறந்தார்.


மரக்காணம் பகுதியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, இளநீர் ஏற்றிய, 'ஈஷர்' வேன், சென்னை சென்று கொண்டிருந்தது.மரக்காணம் தாலுகா, எம்.புதுப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் அய்யனாரப்பன், 39; ஓட்டினார். மற்றொருவர், உடன் பயணம் செய்தார்.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், இரவு, 10:45 மணிக்கு கடந்த போது, சென்னையிலிருந்து, வேதாரண்யத்திற்கு, பயணியருடன் சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், வேனும், நேருக்கு நேர் மோதின.

இதில், வேன் ஓட்டுனர், வேனிலிருந்து துாக்கி எறியப்பட்டு, அங்கேயே இறந்தார். பின்னால் வந்த கார், பஸ்சின் மீது மோதியது. இதில், காரில் இருந்த நான்கு பேர், லேசான காயத்துடன் தப்பினர்; பஸ்சில் இருந்தோர் யாரும் காயமடையவில்லை.

பஸ் ஓட்டுனர் மகேந்திரன், மாமல்லபுரம் போலீசில், இது குறித்து புகார் அளித்தார்.விபத்தால், இத்தடத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீசார், விபத்து வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.